HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 26 March 2024


 

தஜ்ஜாலிடம் பூமியின் கருவூலங்கள்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-45:-

தஜ்ஜாலின் ஒற்றைக்கண்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-44:-


தஜ்ஜால் Greater israel-ன் கதாநாயகன்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-46:-

Friday 8 March 2024



 சென்னை: நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் அஜித்தின் உடல் நலம் எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது ஆகிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது 'விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் அஜர்பைஜான் சென்று வருகிறார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் பிற இடங்களை சுற்றி பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது. அதாவத மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும்அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வலைதளங்களில் பிரார்த்தனையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின்
காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது.

இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது? டிஸ்சார்ஜ் எப்போது? குட்நியூஸ்:-

Thursday 7 March 2024

 



சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:- https://e-funandjoyindia.blogspot.com/2024/03/42.html

தஜ்ஜால் யாருக்கு எல்லாம் சோதனை,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-43:-

Tuesday 5 March 2024


பெயரும் புகழும் வாங்குவதற்காகவே தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் நம் நடிகர்கள் இருந்த போதும் வெற்றியின் போதை தலைக்கேறாமல் கண்ணியத்துடன் நடப்பது சில நடிகர்கள் மட்டுமே அவ்வாறு தான் நடிகனாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான் என பந்தா காட்டாத ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர்  துப்பறியும் கதைகளை கொண்ட பல வெற்றி படங்களில் நடிகராகவும் பின்னாளில் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களுடன், முரட்டுக்காளை அருணாச்சலம் போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த காலத்தில் இருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன் மட்டுமே. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என தனி பெரும் ஆளுமைகளுக்கு இடையே காதல்படங்கள் மூலம் ரசிகர்களை வசியப் படுத்தியவர் ஜெமினி கணேசன். தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கனம் அல்லாது 90ஸ் காலகட்டம் வரை வெள்ளி திரை, சின்னத்திரை என இளம் நடிகர்களுடன் நடித்து பெயர் வாங்கிப் போனார் ஜெமினி. 

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவையாளர் நாகேஷ் ஆவார். உலக நாயகன் கமல் நாகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை மட்டுமே தனது ஆபிசில் உள்ள பர்சனல் அறையில் வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நாகேஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தனது சக நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பழகி கவுண்டர் காமெடி அடிப்பாராம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைக்கு முன் அல்ல, திரைக்குப் பின்னாலும் இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சக நடிகர்கள் பயந்து ஓடும் அளவு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுவாராம் கவுண்டமணி.  இன்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் கவுண்டமணி ஆபிசுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு தலைக்கனமோ கெத்தோ இல்லாமல் இயல்பான மனிதர் போல் அனைவரிடமும் பழகுகிறார் கவுண்டமணி.


பழகும் அனைவரிடமும் இனிமையானவர் என்று பெயரெடுத்தவர் அஜித். இன்றைய ஊடகங்கள் இவரை பற்றி பல்வேறு புரளி பேசினாலும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அசராமல் அமைதி காத்து வருபவர் அஜித். விடாமுயற்சி சூட்டிங் என்பது வெளிநாட்டில் அஜித்தின் ரசிகர்கள் அவரை காண படையெடுத்து வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோவாக விளங்கும் அஜித் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு  கஷ்டத்தில் உள்ள பலருக்கும் கை கொடுத்து உதவுவதில் வல்லவராம்.

பேரும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத 5 நடிகர்கள்.. அஜித்தை கொண்டாட இதுவும் ஒரு காரணம்:-

Monday 4 March 2024

உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம்.



ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் | Rajinikanth Desire To Act In Kamal Marudhanayagam

ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக மருதநாயகம் படத்தை எடுப்பேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பிரம்மாண்டமாக இப்படத்தை அவர் அமைத்துள்ளார்.

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்

இந்நிலையில், மருதநாயகம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தாராம். ஆம், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்துவிட்டதால், வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாத காரணத்தினால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சம்பளமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் :-

Friday 1 March 2024


 

தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும், இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-41:- https://e-funandjoyindia.blogspot.com/2024/02/41.html

சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com