HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 31 December 2020

 தஜ்ஜால் தொடர் -பதிவு- 44

இப்னு சய்யாத் - தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்.
கடந்த பதிவில் இப்னு சய்யாத்தை மக்கள் ஏன் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர் என்பதை பார்த்தோம்.இன்று இப்னு சய்யாத்துடனான தூதரின் சந்திப்பை காண்போம்.
இப்னு சய்யாத்தை மக்கள் தஜ்ஜால் என்று சந்தேகிக்க தொடங்கியதையடுத்து தூதர் அவர்கள் உமர்(ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு அவனை காணச்சென்றாரகள்.
இந்த சந்திப்பில் தூதர், இப்னு சய்யாத்திடம் சில கேள்விகளையும் இப்னு சய்யாத், தூதரிடம் ஒரு கேள்வியையும் கேட்கிறான்.
இந்த கேள்வி பதில் தொடர்பான செய்திகள் அனைத்தும் ஒரே ஹதிஸில் கிடைத்துவிடவில்லை.இப்னு சய்யாத்துடனான சந்திப்பை பற்றி பல ஹதிஸ்கள் உள்ளன.ஒவ்வொன்றிலும் ஒரு கூடுதல் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இப்னு சய்யாத் சக சிறுவர்களுடன் மதீனா நகரில் விளையாடிக் கொண்டிருந்த போது, தூதர் அவர்கள் அவனுடைய முதுகை தட்டி அழைக்கிறார்கள.
அவனிடம்,நான் இறைவனுடைய தூதர் என்பதை ஏற்றுக்கொள்கிறாயா?என்று கேட்டார்கள் ஆனால் அவனோ, நான் இறைவனுடைய தூதர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நானும் உங்களை தூதர் என்று ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தான்.
அதற்கு இறைத்தூதர் அவர்கள் நான் இறைவனையும் அவனுடைய வேதத்தையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறேன் என்று பதிலளித்தார்.
பிறகு இப்னு சய்யாத்திடம், தூதர் அவர்கள் நீ எதை காண்கிறாய்? என்று வினவினார்கள்.
அதற்கு இப்னு சய்யாத், தூதரிடம் நான் நீர் பரப்பையும் அதன் மேல் ஒரு அர்ஷையும்(நாற்காலி) காண்கிறேன் என்றான்.
அந்த நாற்காலியை இப்லீஸின் ஆசனம. என்று தூதர் அறிவித்தார்கள்.
பிறகு உன்னிடம் யார் வருகிறார்கள் என்று தூதர் கேட்க என்னிடம் இரண்டு தீயவர்களும்,ஒரு நல்லவரும் வருகிறார்கள் அல்லது ஒரு தீயவரும் இரண்டு நல்லவரும் வருகிறார்கள் என்று இப்னு சய்யாத் பதிலளித்தான்.
பிறகு தூதர் அவர்கள் தோழர்களை நோக்கி இவன் குழம்பியுள்ளான் என்று பதிலளித்து அவனை புறக்கணிக்க கூறினார்கள்.
பிறகு இப்னு சய்யாத்,தூதரிடம் சொர்க்கத்தின் மண்ணை பற்றி விசாரிக்க, தூதர் அவர்கள் சொர்க்கத்தின் மண்ணானது வெள்ளை நிற கஸ்தூரி துகள்கள் என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட இப்னு சய்யாத், உண்மை உரைத்தீர் அபுல் காசீமே என்று பதிலளித்தான்.
பிறகு தூதர் அவர்கள் மனதில் துக்கான்(புகை) என்ற வாசகத்தை நினைத்துக் கொண்டு என் மனதிலுள்ளதை சொல் என்று கேட்க இப்னு சய்யாத்தும் துக்,துக் ,துக் என்று கூறி தடுமாறினான்.
மற்றவர்களின் மனதிலுள்ளதை சரியாக கூறும் இப்னு சய்யாத்,தூதரின் மனதிலுள்ளதை கூற தடுமாறினாலும் ஓரளவு கண்டுபிடித்தான்.
இந்த பதிலை கேட்ட தூதர் அவர்கள், இப்னு சய்யாத்தை நோக்கி உன்னால் உனக்கு வழங்கப்பட்டதை மீறி செல்ல முடியாது என்று கூறி புறப்பட்டார்கள்.
அப்போது இப்னு சய்யாத்தின் மேல் கோபம் கொண்ட உமர் (ரலி)அவர்கள் இப்னு சய்யாத்தை கொலை செய்ய முனைந்து அதற்கு தூதரிடம் அனுமதி கேட்க,தூதர் அவர்கள் உமரிடம் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்கள்.
இவன் தஜ்ஜாலாக இருந்தால் இவனை உங்களால் கொலை செய்ய முடியாது.இவன் தஜ்ஜால் இல்லையென்றால் இவனை கொல்வதற்கு உங்களிடம் எந்த நியாயமும் இல்லை என்று பதிலளித்தார்கள்.
ஆக இப்னு சய்யாத் தஜ்ஜாலாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதருக்கும் வந்தது என்பது தெளிவாகிறது.
"இவன் தஜ்ஜாலாக இருந்தால்" என்ற வார்த்தை இப்னு சய்யாத் தஜ்ஜாலாகவும் இருக்கலாம் அல்லது தஜ்ஜாலாக இல்லாமலும் இருக்கலாம் என்பதை விளக்குகிறது.
"இவன் தஜ்ஜாலாக இருந்தால்" என்ற வாசகம் ஒரு சந்தேக வாசகம் தான் ஆனால் இந்த சந்தேக வாசகம் ஒன்றை மட்டும் தெளிவாக விளக்குகிறது.
நடமாடக்கூடிய ஒரு மனிதனை தூதர் தஜ்ஜால் என்று சந்தேகித்தார் என்றால் அது தஜ்ஜால் வெளிப்பட்டுவிட்டான் என்பதை மட்டும் தெளிவாக விளக்குகிறது.
தஜ்ஜால் என்பவன் வெளிப்படாமல் இருந்தால் தூதர் யாரையும் தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை.அவர் ஒருவனை தஜ்ஜால் என்று சந்தேகிப்பது தஜ்ஜால் என்பவன் என்பது தூதரின் காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டான்(முதற்கட்டத்தில்) என்பதை தெளிவாக விளக்குகிறது.
நான் இந்த தொடரில் தஜ்ஜாலின் முதற்கட்டம் தூதரின் காலத்திலேயே தொடங்கிவிட்டது இதைப்பற்றி பின்பு விளக்குகிறேன் என்று பதிவு- 2ல் கூறியிருந்தேன்.ஆனால் இந்த பதிவு 44 ல் தான் இதை விளக்க முடிந்தது.
சரி.இப்போது ஒரு முக்கியமான கேள்வி நம் மனதில் எழும்புவதை தவிர்க்க இயலாது.
என்ன கேள்வி?
இப்னு சய்யாத் சம்பவத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தமீமுத்தாரி அவர்கள் ஒரு தீவில் தஜ்ஜாலை அதிக பலம் கொண்ட ஒரு இளைஞனாக கண்ட செய்தியை தூதரிடம் தெரிவித்தார்.தூதரும் அதை அங்கீகரித்தார்கள்.
அப்படி இருக்க தூதர் ஏன் ஒரு சிறுவனை (இப்னு சய்யாத்) தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டும்?.
சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞனாக இருந்த ஒருவனை தஜ்ஜால் என்று அங்கீகரித்த தூதர் அவர்கள் ஏன் சில ஆண்டுக்கு பின் ஒரு சிறவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்க வேண்டும்.?
இந்த கேள்விக்கான பதிலையும் இப்னு சய்யாத் தொடர்பான மேலதிக விளக்கத்தையும் நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......

தஜ்ஜால் தொடர்- பதிவு- 43; இப்னு சய்யாத் என்ற சிறுவனை, நபித்தோழர்களும் அன்றைய முஸ்லிம் மக்களும் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர். மக்கள் ஏன் அவனை,அவ்வாறு சந்தேகித்தனர்?:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/43.html?spref=tw



தஜ்ஜால் தொடர் -பதிவு- 44; இப்னு சய்யாத் - தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன். கடந்த பதிவில் இப்னு சய்யாத்தை மக்கள் ஏன் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர் என்பதை பார்த்தோம்.இன்று இப்னு சய்யாத்துடனான தூதரின் சந்திப்பை காண்போம்:-

Tuesday 29 December 2020



பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை.

காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த ஒரு பதிவும் போடவில்லை.

இந்த நிலையில் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதாவின் தந்தை திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம், புகைப்படங்கள் இதோ:-

Monday 28 December 2020

 தஜ்ஜால் தொடர்- பதிவு- 43

இப்னு சய்யாத்-
தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்
ஷப் இப்னு சய்யாத் என்ற சிறுவனை, நபித்தோழர்களும் அன்றைய முஸ்லிம் மக்களும் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர்.
மக்கள் ஏன் அவனை,அவ்வாறு சந்தேகித்தனர்?
இப்னு சய்யாத்திடம், அவன் சிறுவனாக இருந்த காலம் முதலே சில ஆச்சர்யமான நடவடிக்கைகள் இருந்தன.
1.பிறர் மனதில் நினைக்கும் சொல்லை சரியாக சொல்லுதல்.
2.எதிர்கால செய்திகளை,நிகழ்காலத்தில் சரியாக முன்னறிவித்தல்.
இது போன்ற விசித்திரமான நடவடிக்கைகளால், மக்கள் அவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்க தொடங்கினர்.
சரி.மக்களின் சந்தேகம் நியாயமானதா? என்று ஆராய்வோம்.
ஆய்வுகளை நாம் மேற்கொள்ளும் முன் தஜ்ஜால் தொடர்பான சில அடிப்படை செய்திகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
1.தஜ்ஜாலால்,மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு நகரங்களுக்குள் நுழைய முடியாது.
2.தஜ்ஜால் ஒரு யூதனாக வருவான்.
3.தஜ்ஜால் ஒரு மலடன்.அவனுக்கு குழந்தைகள் இருக்க மாட்டார்கள்.
4.தஜ்ஜால் முப்பது ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிக்கு பிறப்பான்.
5.தஜ்ஜால்,ஜெருசலம் நகரில் தன்னை மீட்பராக அறிவிப்பான்.
இப்போது நாம் இப்னு சய்யாத் பற்றி ஆராய்வோம்.
இப்னு சய்யாத் முப்பது ஆண்டு மகப்பேறு இல்லாத தம்பதிக்கு பிறந்தான்.
இப்னு சய்யாத் யூதனாக பிறந்தான்.தூதரின் வாழ்நாள் வரையிலும் யூதனாகவே இருந்தான்.பின்னர் இஸ்லாத்தை தழுவினான்.
இப்னு சய்யாத் மதீனாவிற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தான்.அவன் சிறுவனாக இருந்த போதும் சரி,இளைஞனாக இருந்த போதும் சரி மதீனா நகருக்குள் அவன் நுழைந்துள்ளான்.
இப்னு சய்யாத் தன்னை, ஒரு போதும் மீட்பர் என்று அறிவித்துக்கொள்ளவில்லை.
இப்னு சய்யாத் திருமணம் செய்து பத்து குழந்தைகளை பெற்றுக் கொண்டான்.
இறுதியாக அவன் மக்கா நகரில் நுழைந்து ஹஜ்,கடமையையும் நிறைவு செய்தான்.
இப்போது இந்த ஹதிஸை கவனியுங்கள்.
இப்னு சய்யாத், ஹஜ் நிறைவேற்றி திரும்பும் வழியில் ஒரு இடத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தான்.அப்போது அங்கிருந்த நபித்தோழர் அபுசயீத் என்பவர் இப்னு சய்யாத்தை கண்டதும் சற்று விலகி சென்றுவிட்டார்.அப்போது இப்னு சய்யாத் ஒரு கயிறை எடுத்துக்கொண்டு அபுசயீத்திடம்,என்னை மக்கள் தஜ்ஜால் என்று சந்தேகிப்பதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி அதன்பின் சில வாதங்களை முன் வைத்தான்.
இறைத்தூதர் அவர்கள் தஜ்ஜாலால் மக்கா மற்றும் மதீனா நகருக்குள் நுழைய முடியாது என்று கூறியுள்ளார்கள்.ஆனால் நான் பிறந்ததே மதீனாவில் தான்.இப்போது மக்காவிலிருந்து தான் திரும்பிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினான்.
மேலும் இறைத்தூதர் தஜ்ஜாலை யூதர் என்று கூறினார் ஆனால் நான் இன்று இஸ்லாத்தை தழுவி ஹஜ் நிறைவு செய்திருக்கிறேன் என்று கூறினான்.
மேலும் தஜ்ஜால் ஒரு மலடன் ஆனால் எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்று கூறினான்.
மக்கள் இதை கருத்தில் கொள்ளாமல் தன்னை தஜ்ஜாலாக கருதுவது தன்னை வேதனைப்படுத்துவதாக குமுறினான்.
இப்னு சய்யாத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்வதாக அபுசயீத் அறிவித்த போது,இப்னு சய்யாத் சப்தமிட்டு சிரித்தவாறு, தான் தஜ்ஜால் இல்லை என்றும் ஆனால் தஜ்ஜால் எங்கே இருக்கிறான்? என்றும் அவனுடைய பெற்றோர் யார்?என்றும் எனக்கு தெரியும் என்று கூறி, தஜ்ஜாலாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதை நான் மறுக்க மாட்டேன் என்றும் கூறினான்.
இதைக்கேட்டு கோபமடைந்த அபுசயீத், இப்னு சய்யாத்தை வசைபாடியவராக அங்கிருந்து வெளியேறினார்.
தஜ்ஜால் தொடர்பான ஹதிஸையும் இப்னு சய்யாத் உடைய வாழ்க்கையையும் ஒப்பிடும் போதும், இப்னு சய்யாத் அபுசயீதிடம் செய்த வாதங்களை பரிசீலிக்கும் போதும், மக்களின் சந்தேகம் தவறானதாக தோன்றும்.
இப்னு சய்யாத், தஜ்ஜாலாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
மக்களின் சந்தேகத்தையும்,நபித்தோழர்களின் சந்தேகத்தையும் தவறு என்று நம்மால் ஒதுக்கிவிட முடியும்.
ஆனால் மதீனாவில் பிறந்த இப்னு சய்யாத்தை, நமது இறைத்தூதர் நபி முகம்மது(ஸல்) அவர்களே, இவன் தஜ்ஜாலாக இருப்பானோ என்று சந்தேகித்தார்.
இறைத்தாதருக்கு ஏற்பட்ட சந்தேகம் தஜ்ஜால் தொடரபான அடிப்படை ஹதிஸ்களில் நமக்கு ஒரு மிக முக்கிய மாற்று பார்வை ஒன்றை ஏற்படுத்துகிறது.
தஜ்ஜால் தன்னை மீட்பர் என்று (Messiah) என்று பிரகடனப்படுத்திய பின்பு தான் அவனால் இரண்டு புனித நகருக்குள் நுழைய முடியாது என்ற உண்மையை இது உணர்த்துகிறது.
தூதரின் சந்தேகம் நமக்கு எதையெல்லாம் விளக்குகிறது என்பதை பற்றியும் இப்னு சய்யாத்துடனான நமது தூதரின் சந்திப்பை பற்றியும் நாளை காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.......


தஜ்ஜால் தொடர் - பதிவு- 42 தஜ்ஜாலும் போர்களும் யார் இந்த இமாம் மஹதி?. இமாம் மஹதி எப்போது வருவார்?:-https://e-funandjoyindia.blogspot.com/2020/12/42.html?spref=tw




தஜ்ஜால் தொடர்- பதிவு- 43; இப்னு சய்யாத் என்ற சிறுவனை, நபித்தோழர்களும் அன்றைய முஸ்லிம் மக்களும் தஜ்ஜால் என்று சந்தேகித்தனர். மக்கள் ஏன் அவனை,அவ்வாறு சந்தேகித்தனர்?:-

Saturday 26 December 2020

 தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா,சம்யுக்தா,  ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா என எட்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, ஷிவானி, கேப்ரியெல்லா மற்றும் ஆஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகர் ஆரி அதிகமாக ஓட்டுக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். கேப்ரியெல்லாஆஜீத் மற்றும் அனிதா ஆகியோர் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷிவானி பெரிய அளவில் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்றாலும்  கேப்ரியெல்லாஆஜீத் மற்றும் அனிதா விட அதிக வாக்கு வந்துள்ளதாம்.

இதன் காரணமாக அனிதா, ஆஜீத் விட குறைவான வாக்கு பெற்றதால் அனிதா வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது.. இது அதிகாரபூர்வ தகவல் ஆகும்..



இந்த வாரம் வெளியேற போவது இவரா ?வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 42

தஜ்ஜாலும் போர்களும்
யார் இந்த இமாம் மஹதி?.
மஹதி என்றால் நேர்வழி காட்டப்பட்டவர் என்று பொருள்.
ஹதிஸ் தொகுப்புகளில், காலத்தில் முந்திய தொகுப்புகளான புகாரியிலோ,முஸ்லிமிலோ, மஹதி என்ற சொல் இடம் பெறவில்லை.இமாம் என்ற சொல் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் இறுதி நாட்களில், இமாம் ஒருவர் தலைமையில் முஸ்லிம்கள் ஒன்றிணைவார்கள் என்ற ஒரு ஹதிஸ் உள்ளது. இது ஷகிஹ் தரத்திலான (Class A) ஹதிஸ்.
காலத்தில் பிந்தைய ஹதிஸ் நூல்களான அபு தாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகியவற்றில் மஹதி என்ற பெயர் இடம் பெறுவதுடன் அவருடைய இயற்பெயர் மற்றும் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவைகள் அனைத்தும் ஹஸன் தரத்தில்(class B) அமைந்துள்ள ஹதிஸ்கள்.
ஸஹிஹ் மற்றும் ஹஸன் தரத்தில் அமைந்துள்ள ஹதிஸ்கள் இரண்டையுமே நாம் ஏற்றுக்கொள்ளலாம்.அதற்கு கீழ் நிலையிலுள்ள ஹதிஸ்கள் புறக்கணிக்கப்படும்.
அபு தாவூத்தில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸ்.
தூதர் அறிவித்தார்கள்: இறுதி காலத்தில் மக்களுக்கு அளவில்லாமல் வழங்கும் இமாம் ஒருவர் தோன்றுவார்.அவருடைய பெயர் என்னுடைய பெயராகும்.அவருடைய தந்தையின் பெயர் என் தந்தையின் பெயராகும்.
இந்த ஹதிஸின் படி வரவுள்ள இமாமின் பெயர் முகம்மது இப்னு அப்துல்லா.
ஹஸன் தரத்திலான ஹதிஸ் என்பதால் இமாம் உடைய பெயர் முகம்மது இப்னு அப்துல்லாவாக இருப்பதற்கான வாய்ப்புகள் 70% வரையில் உள்ளது.
அபுதாவூத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹஸன் தரத்திலான ஹதிஸ் : இமாம் மஹதியின் நெற்றியானது அகன்றதாகவும்,மூக்கானது கூர்மையானதாகவும் இருக்கும்.
இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸின் படி இமாம் மஹதி அவர்கள் ஹசன்(ரலி) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்.
இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ள ஹஸன் தரத்திலான ஹதிஸின் படி இமாம் மஹதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் படியான அளவில் இருக்காது.பிற்பாதியில் இறைவன் அவரை நேர்வழிப்படுத்துவான்.
இமாம் மஹதி எப்போது வருவார்?
கலிபா(புனித ஆலயங்களின் பொறுப்பாளர்) ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த ஆட்சியை கைப்பற்ற அவருடைய மூன்று மகன்களும் அடித்துக்கொள்வார்கள் ஆனால் யாருமே வெற்றி பெற மாட்டார்கள்.குரசான் பகுதியிலிருந்து(ஆப்கானிஸ்தான்,வடகிழக்கு ஈரான்,வடமேற்கு பாக்,தஜிகிஸ்தானின் சிறு பகுதி) வரக்கூடிய முஸ்லிம்கள்- கருப்பு கொடியினர் வெல்வார்கள்.அப்போது இமாம் மஹதி அவர்கள் தன்னை தற்காத்துக்கொள்ள மதீனாவிலிருந்து தப்பித்து மக்காவிற்கு வருவார்கள் அங்கு மக்கள் அவரிடம் பய்அத்(ஆட்சியாளருக்கு மக்கள் அளிக்கும். உறதி மொழி) செய்வார்கள்.இமாம் ஆட்சி பொறுப்பை விரும்பாத நிலையிலும் மக்கள் அவரை கட்டாயப்படுத்துவார்கள்.
மக்கள் அவரிடம் பய்அத் செய்யும் போது கூட அந்த இமாம், தாம் தான் மஹதி என்பதை அறிய மாட்டார்கள்.
இந்த ஹதிஸை ஆழமாக நாம் பார்க்கும் போது சில விஷயங்கள் நமக்கு தெரிய வரும்.
1.மக்கள் தானாக முன் வந்து ஒருவரை கட்டாயபடுத்துகிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர் அன்றைய நாளில் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்க வேண்டும்.
2.உயிர் தப்பிக்க மதினாவிலிருந்து ஓடுகிறார் என்றால் அவருடைய உயிருக்கு அன்றைய அரசாங்கத்தால் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும்.
3.குரசானிலிருந்து வரும் கருப்புக்கொடியினர் மஹதி அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
4.ஆட்சி செய்ய விருப்பமில்லாத போதும் மக்களின் வற்புறுத்தலால் தலைமை பொறுப்பை ஏற்பார்.
ஸஹிஹ் தரத்திலான ஹதிஸ் ஒன்றின் படி இமாமை தாக்குவதற்கு தூதரின் குலமான குரைஷி குலத்தினர் மக்கா நோக்கி வருவார்கள்.வரும் வழியில் பய்தா என்ற இடத்தில் பூமி பிளந்து அவர்களை விழுங்கும்.
இந்த நிகழ்விற்கு பின் தான் இமாம் தன்னை வாக்களிக்கப்பட்ட இமாமாக(இமாம் மஹதியாக) தன்னை பிரகடனப்படுத்துவார்.இஸ்லாமிய உலகத்தை ஒருங்கிணைப்பார்.
இதற்கு பின் சிரியாவிலுள்ள தாபிஹ் என்ற இடத்திற்கு செல்வார்.
முஸ்லிம் ஹதிஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஸஹிஹ் தரத்திலான ஹதிஸ்:
சிரியாவின் தாபிஹ் என்ற இடத்தில் எதிரிகள் 80 கொடியின் கீழ்(80 நாடுகளை சேர்ந்த எதிரிகள்) முற்றுகையிடுவார்கள்.அன்றைய தினம் மஹதி அவர்களுக்கு ஆதரவாக மதினாவிலிருந்து ஒரு படை புறப்படும்.சில ஹதிஸ்களில் குரசான் படை என்று உள்ளது.
அப்படியென்றால் குரசானிலிருந்து வந்து மதினாவில் முகாமிட்டிருக்கும் படைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
80 கொடிகள்.ஒவ்வொரு கொடியின் கீழும் 12,000 வீரர்கள்.மொத்தத்தில் 9,60,000 எதிரிகளை கொண்ட படையினை எதிர்த்து மஹதியின் படை போரிடும்.
தாபிஹ் என்ற சிறிய விவசாய கிராமத்தை 9,60,000 எதிரிகள் முற்றுகையிட்டால் அந்த போர் எந்த அளவிற்கு கடுமையாக இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
போரில் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் போரை விட்டு விலகிவிடுவார்கள்.இறைவன் அவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.இரண்டாவது பிரிவினர் கொல்லப்படுவார்கள்.இறைவனிடம் அவர்கள் மிகச்சிறந்த உயிர்தியாகிகள் ஆவார்கள்.மூன்றாவது பகுதியினர் எதிரிகளை வெல்வார்கள்.இறுதியாக காண்ஸ்டாண்டிநோபிளைமுஸ்லிம்கள் கைப்பற்றி மல்ஹமா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
காண்ஸ்டாண்டிநோபிள் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்தால் வெற்றிக் கொள்ளப்படும்.
கோபம் கொப்பளிக்க தஜ்ஜால்(நமது நாள் போன்ற அவனது நாளில்) வெளிப்படுவான்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் மஹதி முற்றுகையிடப்படுவார்.ஏறக்குறைய மரணம் நிச்சயம் என்ற நிலைக்கு மஹதியும் முஸ்லிம்களும் தள்ளப்படுவர்.
பிர்அவ்ன் கையால் மரணம் நிச்சயமான போது கடல் பிளக்கப்பட்டு பனூ இஸ்ராயில்கள் காப்பாற்றப்பட்ட அதிசயத்தை போல நபி ஈஸா(அலை) அவர்களின் அதிசய வருகை முஸ்லிம்களை காப்பாற்றும்.
நபியின் வருகை தஜ்ஜாலுக்கு முடிவெழுதும் இதைப்பற்றி நாம் நபியின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் என்ற தலைப்பில் விரிவாக காணலாம்.
நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை தஜ்ஜால் என்ற Subject ஐ முடிவுக்கு கொண்டு வரும்.இமாம் மஹதி என்ற Conceptக்கான தேவையையும் முடிவுக்கு கொண்டு வரும்.
குழு உறுப்பினர்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.ஒர் மனிதர் மிகச்சிறந்த உண்மையாளராக (சித்தீக்) இருந்தாலும் சரி,ஆகச்சிறந்த உயிர்தியாகியாக(ஷஹீத்) இருந்தாலும் சரி,நேர்மையான ஆட்சியாளராக(அமீர்) இருந்தாலும் சரி,அறிவு நிறைந்த இமாமாக இருந்தாலும் சரி, அந்த இமாம் - மஹதியாகவே இருந்தாலும் சரி, இறைத்தூதர்களுடைய தர்ஜாக்களை(சிறப்புகளை) அடைவது என்பது இயலவே இயலாத காரியம்.
ஒரு தூதருக்கு இணையாக, சமமாக மற்ற ஒரு தூதர் இருக்கலாமே தவிர.ஒரு சாதாரண நல்லடியார் இறைதூதர்களுக்கு சமமாக மாட்டார்கள்.
தஜ்ஜால் வீழ்த்தப்பட்ட பின் ஜெருசலத்தை மையமாகக் கொண்டு, நபி ஈஸா(அலை) தலைமையில்,நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி உலக ஆட்சி நிறுவப்படும்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கம் என்ற வார்த்தை சிலருக்கு கோபத்தையும், சிலருக்கு ஆச்சர்யத்தையும் வழங்கலாம்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை தான் நமது இறுதி தூதர் நபி முகம்மது(ஸல்) கொண்டு வந்தார் என்று குர்ஆன் கூறுகிறது.
இறுதியாக உலகம், நமது தந்தை நபி இப்ராஹிம் ( அலை) அவர்களின் மார்க்கத்தை கொண்டு தூய்மைப்படுத்தப்படும்.
தஜ்ஜாலைப்பற்றி பல தலைப்புகளில் விரிவாக கண்டுள்ளோம்.ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குள் கொண்டு வர முடியாத தஜ்ஜாலைப் பற்றிய பொதுவான ஹதிஸ்களின் விளக்கத்தை நாளை காணலாம்.குறிப்பாக தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்ட
ஷாபி இப்னு ஷய்யாத் என்ற யூதனை பற்றி காணலாம்
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.


தஜ்ஜால் தொடர் - பதிவு- 41; தஜ்ஜாலும் போர்களும் இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் மல்ஹமா யுத்தத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு வெற்றிகள் ஏற்படும்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/41.html?spref=tw




தஜ்ஜால் தொடர் - பதிவு- 42 தஜ்ஜாலும் போர்களும் யார் இந்த இமாம் மஹதி?. இமாம் மஹதி எப்போது வருவார்?:-

Thursday 24 December 2020

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 41

தஜ்ஜாலும் போர்களும்
இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் மல்ஹமா யுத்தத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு வெற்றிகள் ஏற்படும்.
யார் இந்த இமாம் மஹதி? என்பதை பற்றி பார்ப்பதற்கு முன், இன்றைய முஸ்லிம்கள் இமாம் மஹதி என்பவரை பற்றி எவ்வாறெல்லாம் தவறாக புரிந்துக்கொண்டு, எவ்வாறு அவரை வரம்பு மீறி புகழ்கின்றனர் என்பதைப்பற்றி இப்போது காணலாம்.
முஸ்லிம்களில் பலர் இன்று இமாம் மஹதியை, உலகை மீட்க வரவுள்ள மீட்பர் என்ற அளவில் புகழ்கின்றனர்.
யுக முடிவு நேரத்தின் முக்கிய நாயகனாக அவரை வர்ணிக்கின்றனர்.
சில முஸ்லிம்கள் இமாம் மஹதியை, நபி ஈஸா(அலை) அவர்களை விட உயர்வானவர் என்ற நிலையில் போற்றுகின்றனர்.
இவை அனைத்தும் தவறான புரிதல் ஆகும்.
இவர்கள் தங்கள் தவறான நம்பிக்கைக்கு முட்டு கொடுப்பதற்காக, நபி ஈஸா (அலை) அவர்கள்,மஹதியின் தலைமையில் பின் நின்று தொழும் ஹதிஸை ஆதாரமாக காட்டுகின்றனர்.
இவர்கள் இமாம் மஹதியை போற்றுகிறோம் என்ற பெயரிலும்,நபி முகம்மது(ஸல்) அவர்களை போற்றுகிறோம் என்ற பெயரிலும் சில நேரங்களில் நபி ஈஸா(அலை) அவர்களை தரம் தாழ்த்திவிடுகின்றார்கள். ஆம் நபி ஈஸா(அலை) திரும்ப வரும் போது அவர் இறுதி தூதரின் உம்மத்தில் ஒருவராக வருவார் என்று மடத்தனமாக கூறுகின்றார்கள்.இதற்கும் நான் மேற்கூறிய ஹதிஸையே ஆதாரமாக காட்டுகின்றனர்.
இப்போது அந்த ஹதிஸை நன்றாக ஆராயலாம்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலுள்ள, வெள்ளை நிற மினராவை கொண்டுள்ள பள்ளிவாசலில் (உமாயத் மஸ்ஜித்) பஜ்ர் நேரத்தில், நபி ஈஸா(அலை) அவர்கள் வானிலிருந்து இறங்குவார்கள்.
இமாம் மஹதி அவர்கள் தொழுகை நடத்துமாறு நபியை கேட்டுக்கொள்வார்கள்.ஆனால் ஈஸா நபியோ உங்களை சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்கு தலைவராக(இமாமாக அல்லது அமீராக) இருக்க முடியும்,இது உங்களுக்கு உங்கள் இறைவன்அளித்த பாக்கியமாகும் என்று கூறி தலைமை ஏற்க மறுத்துவிடுவார்கள்.மேலும் இமாம் மஹதி நடத்தும் தொழுகையில் பின் நின்று தொழுவார்கள்.இது தான் அந்த ஹதிஸ்.
ஹதிஸை உற்று ஆராய்ந்தால்,நபி ஈஸா(அலை) அவர்களின் பதிலை உற்று நோக்கினால் நமக்கு ஒன்று தெளிவாக புரிய வரும்.
உங்களை சேர்ந்த ஒருவருக்கு உங்களில் ஒருவர் தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற நபியின் பதிலை கவனியுங்கள்.
அதாவது நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்திற்கு அந்த உம்மத்தை சேர்ந்த ஒருவர் தான் தலைவராக முடியும் என்று பதிலளிக்கிறார்.அப்படியென்றால் நபி ஈஸா(அலை),நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒருவராக வர மாட்டார் என்பது தெளிவாகிறது.
நபி ஈஸா(அலை) அவர்கள், நபி முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தாக வருவார் என்ற வாதம் முட்டாள்தனமானது.இது நமது மல்ஹமா நண்பர்களான ரோமர்களுடன் பிணக்கை ஏற்படுத்துவதற்கான,சவூதி கைக்கூலி ஆலிம்களின் முயற்சியாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
முஸ்லிம் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இமாம் மஹதி என்வபர் மீட்பர் அல்ல.தஜ்ஜாலை கொல்லக்கூடிய ஆற்றல் யாருக்கு உள்ளதோ அவர் தான் மீட்பர்.நபி ஈஸா(அலை) அவர்கள் மட்டுமே மீட்பர்(மஸிஹ்).
தஜ்ஜாலையும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தையும் அழித்து,உஜைர் நபியின் முன்னறிவிப்பின் படி ஜெருசலத்தை மையமாக கொண்ட உலக ஆட்சியாளர் தான்,யுக முடிவு நேரந்தின் முக்கிய கதாப்பாத்திரம்.
அந்த முக்கிய மற்றும் முதன்மையான கதாபாத்திரம் நபி ஈஸா(அலை) அவர்கள் தானே தவிர.இமாம் மஹதி அல்ல.
எனவே நபி(ஈஸா)அலை அவர்களுக்கு இணையாக இமாம் மஹதியை போற்றுவது என்பது மடத்தனமானது.
இறுதி தூதரின் ஒரு அறிவிப்பை கவனியுங்கள்-
நபித்தோழர்களை பார்த்து இறுதி இறைத்தூதர் கூறினார்கள்:
உங்களுக்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான்.என்னுடைய தோழர்களாகிய உங்களில் யார் இறுதியானவரோ, குறைவனாரவோ(இறை நன்மைகளின் எடையில்) அவர், உங்களுக்கு பின்னால் வரவுள்ள முஸ்லிம்களில் முதன்மையானவரை விட மிக உயர்ந்தவராவர்.
இந்த ஹதிஸின் படி ஸஹாபாக்களில்(நபித்தோழர்களில்) இறுதியானவர்,இமாம் மஹதியை விட உயர்வானவர்.
இறுதியானவரே உயர்வானவர் என்றால் முதன்மை தோழர்களாக விளங்கிய அபுபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடைய தர்ஜாக்களை(சிறப்புகளை) இமாம் மஹதியால் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.
அபுபக்கர்(ரலி) அவர்களே,இமாம் மஹதியை விட உயர்வானவர் என்ற போது இமாம் மஹதி அவர்கள் எவ்வாறு நபி ஈஸா(அலை) அவர்களை விட உயர்வானவராக இருக்க முடியும்.
இன்று இதை ஏன் இவ்வளவு விரிவாக விளக்குகிறேன் என்றால் இமாம் மஹதியை வரம்பு மீறி புகழ்வதில் ZIONIST சவூதியின் சூழ்ச்சி உள்ளது போல் தெரிகிறது.
கிழக்கு கிறித்தவர்களின், மீட்பர் தொடர்பான எதிர்பார்ப்பிற்கு எதிராக முஸ்லிம்களுக்கு வேறொரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் ZIONISTகளின் முயற்சி தான் இமாம் மஹதியை அளவு மீறி புகழும் பிரச்சாரம் ஆகும்.
இமாம் மஹதி என்பவர் யார் என்பதை பற்றி நாளை விரிவாக காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்.........


தஜ்ஜால் தொடர் பதிவு- 40; தஜ்ஜாலும் போர்களும் கடந்த பதிவில் மல்ஹமா யுத்தத்தில், யூப்ரடிஸ் நதிக்கரையில் நடைபெறும் சண்டை பற்றி கண்டோம்.இன்று மூன்று இஸ்லாமிய நாடுகளுக்கு தோல்வியை ஏற்படுத்தும் சண்டையை காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/12/40.html?spref=tw




தஜ்ஜால் தொடர் - பதிவு- 41; தஜ்ஜாலும் போர்களும் இமாம் மஹதி அவர்களின் வருகைக்கு பின் மல்ஹமா யுத்தத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு வெற்றிகள் ஏற்படும்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com