HEADER
Monday, 13 July 2026
லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே முதல் மகளிர் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி..
இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஒருமுறை கூட தோற்காமல் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வரும் இந்திய அணி, கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகள், 3 டிராக்கள் மற்றும் ஒரே ஒரு தோல்வியுடன் உச்சத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 58 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 57 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
இறுதியில் ரிச்சா கோஷின் 50 ரன்களுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஏமி ஜோன்ஸ் 54 ரன்களும், சோபி எக்லெஸ்டோன் 50 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினாலும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் சினே ரானா 4 விக்கெட்டுகளையும், சாயலி சத்காரே, கிரான்டி கௌட் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 270 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது..
சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 142 ஆண்டில் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் மெகா வெற்றி:-
Saturday, 10 January 2026
சுதா கொங்கரா இயக்கிய "பராசக்தி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம். சென்னை.
1960 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.
புறநானூறு என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வரும் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அப்படி ஒரு போர.
அப்படி ஒரு போராட்டத்தின் போது ஒரு ரெயிலை வழிமறித்து சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர்கள் எரிக்கிறார்கள். அப்போது அந்த ரெயிலில் பயணிக்கும் போலீஸ் அதிகாரியான ரவி மோகனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை நடக்கிறது. இதில் ரவி மோகனின் விரல் பறிபோகிறது..
இந்த சூழலில் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்று முதல் போராட்டத்தை கைவிடுகிறார். தன்னால் யாரும் பாதிப்பு அடைந்த விடக்கூடாது என்று போராட்ட உணர்வை தன் மனதிலேயே குழி தோண்டி புதைக்கிறார். அதே வேலை சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் துடித்துக் கொண்டிருக்கிறார்.
சில ஆண்டுகள் கடந்து போக சிவகார்த்திகேயன் தம்பி அதர்வாவும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கிறார். போராட்ட களத்தில் இருந்து தம்பியை பின்வாங்க செய்யும் முயற்சிகளில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
இப்படியான சூழலில் மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பரிபோக அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா? சிவகார்த்திகேயனை, ரவி மோகன் சந்தித்தாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கி இருக்கிறார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களும் பேசி கவனிக்க வைக்கிறார்.
ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்து கட்டி உள்ளார் பார்வையிலேயே கொலை வெறியை காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சி புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்.
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையும் பிரமாதம். பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது.
உண்மைச் சம்பவங்களை நினைவு கூறும் வகையில், பரபரப்பான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் சுதா கொங்கரா. தவறாமல் பார்க்க வேண்டிய படம், மிக அருமையாக உள்ளது - 3.5/5.
































































