HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 13 July 2026


 லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தின் 142 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே முதல் மகளிர் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி.. 


இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஒருமுறை கூட தோற்காமல் இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வரும் இந்திய அணி, கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகள், 3 டிராக்கள் மற்றும் ஒரே ஒரு தோல்வியுடன் உச்சத்தில் உள்ளது.


இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 58 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 57 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.


இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.


தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனை கிரான்டி கௌடின் அசாத்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அபாரமாகப் பந்துவீசிய கிரான்டி கௌட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஏமி ஜோன்ஸ் 52 ரன்களும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்களும் எடுத்தனர்.


இதனையடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யஸ்திகா பாட்டியா 113 ரன்கள் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.


இறுதியில் ரிச்சா கோஷின் 50 ரன்களுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த இமாலய இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்தது. ஏமி ஜோன்ஸ் 54 ரன்களும், சோபி எக்லெஸ்டோன் 50 ரன்களும் எடுத்து ஓரளவிற்குப் போராடினாலும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.


இந்திய அணி தரப்பில் சினே ரானா 4 விக்கெட்டுகளையும், சாயலி சத்காரே, கிரான்டி கௌட் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 270 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தங்களது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.. 









சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 142 ஆண்டில் லார்ட்ஸில் நடந்த முதல் போட்டியில் மெகா வெற்றி:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com