HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 30 April 2024

 



தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தலஅஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார், முக்கியமான ரோலில் சிம்ரன் மற்றும் மீனா நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஆமாம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டதட்ட 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..




ஷூட்டிங்கே தொடங்கல.. பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி உரிமை – அஜித் ரசிகர்களைக் கொண்டாட வைத்த தகவல்:-

Saturday 27 April 2024

 


நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.

அதில் இந்தியன் 2 விரைவில் வெளியாகியுள்ள நிலையில் தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கல்கி படத்தில் ஆண்டவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் கமலும் இணைந்துள்ளார். அவர் இதில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது.

கமலின் சம்பளம்

ஆனால் பின்னர் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 15 நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சிகள் வரும் என்று கூறப்படுகிறது.

இதற்காக கமல் அவர்கள் வாங்கிய சம்பளத்தை கேட்டால் தலை சுற்றிவிடும். அதன் படி வெறும் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படி பார்த்தால் ஆண்டவர் காட்டில் பண மழை தான். ஏற்கனவே இந்தியன் 2 படத்துக்காக இவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் கல்கியும் தன் பங்குக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் ஆண்டவர் அடுத்தடுத்த படங்களின் மூலம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை கல்கி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 




ஆண்டவர் காட்டுல மழை தான்.. கல்கி படத்திற்காக கமல் அவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Monday 22 April 2024



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

 இதைத்தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற குண்டூர் காரம் படத்தின் நாயகியான ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


அஜித்துக்கு ஜோடியாக போவது யார் தெரியுமா? குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான செம அப்டேட்;-

Monday 1 April 2024

 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

குட் பேட் அக்லி என்ற பெயரில் உருவாக உள்ள அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். 

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் அஜித் மொத்தம் மூன்று வருடங்களை நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு இந்த மேஜிக் நடைபெற இருப்பது அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடக்கும் மேஜிக்.. அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – இதோ விவரம்.!!:-

Tuesday 26 March 2024


 

தஜ்ஜாலிடம் பூமியின் கருவூலங்கள்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-45:-

தஜ்ஜாலின் ஒற்றைக்கண்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-44:-


தஜ்ஜால் Greater israel-ன் கதாநாயகன்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-46:-

Friday 8 March 2024



 சென்னை: நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் அஜித்தின் உடல் நலம் எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது ஆகிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது 'விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் அஜர்பைஜான் சென்று வருகிறார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் பிற இடங்களை சுற்றி பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது. அதாவத மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும்அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வலைதளங்களில் பிரார்த்தனையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின்
காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது.

இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது? டிஸ்சார்ஜ் எப்போது? குட்நியூஸ்:-

Thursday 7 March 2024

 



சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:- https://e-funandjoyindia.blogspot.com/2024/03/42.html

தஜ்ஜால் யாருக்கு எல்லாம் சோதனை,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-43:-

Tuesday 5 March 2024


பெயரும் புகழும் வாங்குவதற்காகவே தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் நம் நடிகர்கள் இருந்த போதும் வெற்றியின் போதை தலைக்கேறாமல் கண்ணியத்துடன் நடப்பது சில நடிகர்கள் மட்டுமே அவ்வாறு தான் நடிகனாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான் என பந்தா காட்டாத ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர்  துப்பறியும் கதைகளை கொண்ட பல வெற்றி படங்களில் நடிகராகவும் பின்னாளில் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களுடன், முரட்டுக்காளை அருணாச்சலம் போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த காலத்தில் இருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன் மட்டுமே. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என தனி பெரும் ஆளுமைகளுக்கு இடையே காதல்படங்கள் மூலம் ரசிகர்களை வசியப் படுத்தியவர் ஜெமினி கணேசன். தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கனம் அல்லாது 90ஸ் காலகட்டம் வரை வெள்ளி திரை, சின்னத்திரை என இளம் நடிகர்களுடன் நடித்து பெயர் வாங்கிப் போனார் ஜெமினி. 

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவையாளர் நாகேஷ் ஆவார். உலக நாயகன் கமல் நாகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை மட்டுமே தனது ஆபிசில் உள்ள பர்சனல் அறையில் வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நாகேஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தனது சக நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பழகி கவுண்டர் காமெடி அடிப்பாராம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைக்கு முன் அல்ல, திரைக்குப் பின்னாலும் இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சக நடிகர்கள் பயந்து ஓடும் அளவு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுவாராம் கவுண்டமணி.  இன்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் கவுண்டமணி ஆபிசுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு தலைக்கனமோ கெத்தோ இல்லாமல் இயல்பான மனிதர் போல் அனைவரிடமும் பழகுகிறார் கவுண்டமணி.


பழகும் அனைவரிடமும் இனிமையானவர் என்று பெயரெடுத்தவர் அஜித். இன்றைய ஊடகங்கள் இவரை பற்றி பல்வேறு புரளி பேசினாலும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அசராமல் அமைதி காத்து வருபவர் அஜித். விடாமுயற்சி சூட்டிங் என்பது வெளிநாட்டில் அஜித்தின் ரசிகர்கள் அவரை காண படையெடுத்து வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோவாக விளங்கும் அஜித் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு  கஷ்டத்தில் உள்ள பலருக்கும் கை கொடுத்து உதவுவதில் வல்லவராம்.

பேரும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத 5 நடிகர்கள்.. அஜித்தை கொண்டாட இதுவும் ஒரு காரணம்:-

Monday 4 March 2024

உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லிக்கொண்டே போகலாம்.



ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் | Rajinikanth Desire To Act In Kamal Marudhanayagam

ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக மருதநாயகம் படத்தை எடுப்பேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பிரம்மாண்டமாக இப்படத்தை அவர் அமைத்துள்ளார்.

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்

இந்நிலையில், மருதநாயகம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தாராம். ஆம், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்துவிட்டதால், வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாத காரணத்தினால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சம்பளமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகம் படத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. அதுவும் சம்பளம் வாங்காமல் :-

Friday 1 March 2024


 

தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும், இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-41:- https://e-funandjoyindia.blogspot.com/2024/02/41.html

சுலைமான் நபி எதற்கு பயந்தார்,இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-42:-

Wednesday 28 February 2024



ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்துக்கு எதிராக வயதான சுதந்திர போரட்ட தியாகி ஒருவர் பொங்கி எழுதுவதை திரைக்கதையாக உருவாக்கியிருந்தார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் 20 வருடங்களுக்கு பின் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது இப்படம் முடிவடையும் நிலையை எட்டியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் எனில் இந்தியன் 3வது பாகத்துக்கான காட்சிகளையும் சேர்த்து ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார் என்பதுதான். எண்ணூர் துறைமுகத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பங்குபெறும் ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த பாடலில் சுமார் 500 நடன கலைஞர்கள் நடனமாடவுள்ளனர்.

இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது

அதோடு, கமலின் விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்ட நிலையில் இந்தியன் 2 படமும் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிக்க துவங்கிய படம் இது.

ஆனால், அதுவும் இப்போது வரை முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. விரைவில் இந்த 2 படங்களையும் ஷங்கர் முடித்துவிட்டு இந்தியன் 3 ரிலீஸ் தொடர்பான வேலைகளை செய்ய துவங்குவார் என சொல்லப்படுகிறது. விக்ரமுக்கு பின் இந்தியன் 2 படம் கமலுக்கு நல்ல மைலேஜை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது

ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2:-

 ஒவ்வொரு படங்களின் வசூல் தான், அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. மேலும் அதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இறுகிறுகிறார்கள். அதுவும் முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் வசூல் என்றால் சொல்லவே தேவையில்லை.

ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ | Top Actors 50 Crore Movies List

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதில் முதலிடத்தை கமலின் இந்தியன்  பிடித்துள்ளது. ஆம், ஷங்கர் கமல் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகும்.

இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.

இதன்பின் விக்ரமின் அந்நியன் மூன்றாவது இடத்தையும், அஜித்தின் பில்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ பாருங்க..

  • இந்தியன் 2 - ரூ. 55 கோடி
  • படையப்பா - ரூ. 60 கோடி
  • அந்நியன் - ரூ. 63 கோடி
  • வரலாறு - ரூ. 60 கோடி
  • பில்லா - ரூ. 75 கோடி
  • சிங்கம் - ரூ. 53 கோடி
  • வேலாயுதம் - ரூ. 66 கோடி
  • வேலையில்லா பட்டதாரி - ரூ. 55 கோடி
  • ரெமோ - ரூ. 55 கோடி 
  • காஷ்மோரா - ரூ. 50 கோடி
  • மாநாடு - ரூ. 87 கோடி



ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ :-

Friday 23 February 2024




























ASHIKA RANGANATH CUTE IMAGES

 


ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html


Thala Ajith: நடிகர் அஜித்தை பற்றி சில தினங்களுக்கு முன் வலைப்பேச்சு அந்தனன் மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது பொதுவாழ்க்கைக்கு என வந்த பிறகு யார் எப்படி போனால் எனக்கென என இருப்பது சரியா? அஜித் சமீபகாலமாக அப்படித்தான் செய்து வருகிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதாவது அஜித்தை புறக்கணிப்போம் என கூறியிருந்தார்.

 இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவருடைய யு டியூப் சேனலில் சில தகவல்களை கூறியிருக்கிறார்

அதாவது வலைப்பேச்சு அந்தனன் பேசிய முழு வீடியோவையும் நான் பார்க்கவில்லை. எனினும் நான் பார்த்த சில காட்சிகளில் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ‘யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. எங்கே வர வேண்டும், வரக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். எந்தவொரு நடிகருக்கும் தனிப்பட்ட கொள்கை என ஒன்று இருக்கும். அதன் படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள்’ என கூறினார்.

தல அஜித்தை கடுமையாக விமர்சித்த பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்

Thursday 22 February 2024

 


சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. எனவே அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்


Thug Life - தனக்கு பெரும் திருப்புமுனையை தரும் நம்பிக்கையை பலமாக கொண்டிருக்கும் படக்குழு:-

Tuesday 20 February 2024

 


தல அஜித் அவர்களை பற்றி தெரியாமல், அவரை பற்றி வலைப்பேச்சு அந்தணன் தவறாக பேசியுள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் அமலான் தனியார் You tube channel-க்கு பேட்டியளித்துள்ளார். 

அந்தணன் தல அஜித்தை கடுமையா விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல். தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்னை இருப்பதாக கூறினார்

என்னை மாதிரியே

ஆனால் அதெல்லாம் பொய். மேலும் அவர் கூறியது, தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. விஜயகாந்த் அவர்கள் தல அஜித் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்ததாகவும். நடிகர் சங்க கடனுக்காக ஏன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் சில குறிப்பிட்ட தொகையை கொடுத்தாலே கடனை அடைக்கலாம் என்று சொல்லி; தன் பங்காக பத்து லட்சம் ரூபாயை விஜயகாந்த்திடம் கொடுத்துவிட்டு #Thala அஜித் கிளம்பினார்.

அந்த விஷயம் விஜயகாந்த்தை கவர்ந்துவிட்டது.
உடனே தனது அருகே இருந்தவரிடம், “என்னை மாதிரியே அஜித் இருக்காருப்பா” என்று புகழ்ந்தார்.
இவ்வாறு அமலான் பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தல அஜித் அவர்களை பற்றி எதுவுமே தெரியாமல் அந்தணன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்!:-

 


ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html

சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.

கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வாழு வாழ விடு என்று எங்கள் தலைவர் பாதையில் அமைதியாக காந்தி வழியில் பயணிக்கிறோம் எங்களை சிண்டி பார்க்காதே அடிக்கு அடி-னு நேதாஜி வழியில் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது…. என கன்னடகளை தெரிவித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜீத் குமார் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கைகோர்க்க உள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் யென்னை அறிந்தால் நடிகரின் தீவிர ரசிகர், மேலும் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகருக்கு அடிக்கடி ஓட்ஸ் கொடுத்தார். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மறைக்கப்பட்ட போதிலும், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருந்தது...

டுபாக்கூர் வலைப்பேச்சு அந்தனனுக்கு மரண எச்சரிக்கை விடுத்த அஜித் ரசிகர்கள் !:-

Monday 19 February 2024






தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும், இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-41:-

Sunday 18 February 2024

 



திரையுலகில் பெரும் சர்ச்சையான விஷயங்களில் ஒன்று அஜித் - பாலாவிற்கு இடையே நடந்த ஒரு விஷயம் தான். இதுகுறித்து பலரும் பல விதமான தகவல்களை கூறியுள்ளனர். நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜித்.

அப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்பு துவங்க மிகவும் தாமதமாகியுள்ளது. இதனால் பணம் கொடுத்தவர், கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 3 கோடியாக தரவேண்டும் என நடிகர் அஜித்திடம் கூறியுள்ளார். 

இதுதான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. இதற்கு அஜித், பட தாமதமானதற்கு நான் காரணம் இல்லை இயக்குனர் பாலா தான் என கூறியுள்ளார். இதற்கான பஞ்சாயத்து பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது. அப்போது அஜித்தை சுற்றி இயக்குனர் பாலா, பைனான்ஷியர் அன்பு மற்றும் சில ஆட்கள் இருந்துள்ளார். அஜித்துக்கு சில நெருக்கடிகளை கொடுத்துள்ளனர்.

அப்போது அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். பில்லா படத்தில் வருவது போல் தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த ஆட்களை ஒரு விஷயம் செய்தார். அதன்பின் அனைவரும் அப்படியே பின்வாங்கிவிட்டார்களாம்.

அதே இடத்தில் உடனடியாக செட்டில்மென்ட் போட்டு பணத்தை கொடுத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து அஜித் வெளியேறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் - பாலா பிரச்சனை.. அஜித் - பாலா பிரச்சனை.. ஹோட்டலில் சம்பவம் செய்த அஜித்:- சம்பவம் செய்த அஜித்:-

Friday 9 February 2024

 


விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து வருகிறார் கமல் ஹாசன். இதில் ஹெச். வினோத்துடன் துவங்கவிருந்த கமல் 233 படம் திடீரென சில காரணங்களால் ட்ராப் ஆகிவிட்டது

இதை தவிர இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 AD, அன்பு - அறிவு இயக்கும் கமல் 237வது படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 ad

இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீதா ராமம், Hi நானா போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மிருணாள் தாகூர், கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com