HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 28 February 2021

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலகுறைவு மற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சுறுசுறுப்புடன் படங்களில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரஜினி நடிப்பில் கடைசியாக உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் ரஜினியின் எவர்கிரீன் ஜோடிகளான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர் 

அதனைத் தொடர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென சிலருக்கு குரானா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் விடப்பட்டது.

தற்போது மீண்டும் விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக ரஜினி கூறாமல் அண்ணாத்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது ரஜினியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நேரடியாக பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி ரஜினி அண்ணாத்த படக்குழுவினருடன் இணைய உள்ளாராம். சில நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேரடியாக பொள்ளாச்சியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

2021 தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அண்ணாத்தே படத்தை விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் ரஜினி அடுத்த படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியல் இல்லை என்றாலும் சினிமாவில் மூச்சுள்ள வரை இருப்பேன் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

அண்ணாத்த படத்திற்காக ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. தலைவர் தலைவர்தான்!:-

Thursday 25 February 2021

 



த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மற்ற மொழிகளில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். தெலுங்கு சினிமாவில் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் என்ற திரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பாபநாசம் 2 படத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். மேலும் பாபநாசம் 2 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பழங்கால நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் கூட ஸ்ரீபிரியா கமலஹாசன் இல்லாமல் பாபநாசம் 2 வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டிருந்தார். தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் கமலஹாசனும் ஸ்ரீபிரியாவும் இது குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

பாபநாசம் படத்தை மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். ஆனால் அப்போது கமலுக்கும் ஜீத்து ஜோசப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கமலஹாசன் கதையில் தலையிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதனால் தன்னுடைய மாற்றத்திற்கு அவர் சரிபட்டு வரமாட்டார் என தெரிந்து ஜீத்து ஜோசப் வேண்டாம் என கூறிவிட்டாராம் கமல். இந்நிலையில் கமலஹாசனின் ஃபேவரைட் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் பாபநாசம் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

மேலும் தேர்தல் முடிந்து ஒரே மாதத்தில் பாபநாசம் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கான வேலைகளை முன் கூட்டியே செய்து விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் கூறியதாக தெரிகிறது. கமல் மற்றும் கே எஸ்ரவிக்குமார் கூட்டணியில் முதல் முறையாக ஒரு திரில்லர் படம் உருவாக உள்ளது. தமிழில் இப்படி இழுபறி நடந்துகொண்டிருக்கும் நிலையில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 3 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் கூடுதல் தகவல்.


பாபநாசம் 2, ஜீத்து ஜோசப் வேண்டாம், நம்ம இயக்குனர கூப்பிடுங்க.. கூண்டோடு படக்குழுவை மாற்றிய கமல்:-

Saturday 13 February 2021

மிக அதிர்ச்சி தகவல். வாழைப்பழத்தில் கரபான்பூச்சி மரபணு. கேட்கவே அருவருப்பாக உள்ளது. இந்த காணொளியை பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி. 
Arise & Ascend
 
  21 GM Contaminated Food Items:- 

            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




 

மரபை மாற்றும் மரபணு | மிக அதிர்ச்சி தகவல். வாழைப்பழத்தில் கரபான்பூச்சி மரபணு. கேட்கவே அருவருப்பாக உள்ளது. இந்த காணொளியை முழுமையாகப் பாருங்கள் :-

Friday 12 February 2021

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரபலமாகவும் ஒரே நேரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் கடைசி நேரத்தில் சொதப்பியதால் லோகேஷ் கனகராஜ் தற்போது வேறு ஒரு நடிகருடன் கை கோர்க்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் உலகநாயகன் கமலஹாசன். கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை. பாபநாசம் படம் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில் திடீரென அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதற்கிடையில் திடீரென அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதனால் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த விக்ரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக ஒரு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் வெகுவேகமாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரம் விஜய்சேதுபதியை உலக அளவில் பிரபலப்படுத்தி விட்டதால் லோகேஷ் கனகராஜை பயன்படுத்தி ஹீரோவாகவும் வேற லெவல் ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

பிரபல முன்னணி நடிகருடன் அவசரஅவசரமாக கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்!! கமலின் விக்ரம் படம் கைவிடப்பட்டதா?? இதோ லோகேஷ் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்:-

Wednesday 10 February 2021

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் ரசிகர்களை கழுத்தருத்தது தான். பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை கருதி அவருடைய முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர். மேற்கொண்டு சினிமாவில் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் நடிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த கேள்விக்கு பதிலாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் கோலாகலமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போது விடுபட்ட அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்பது தான். அதற்கான நேரமும் வந்து விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். மேலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாராம்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தை இயக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் மீண்டும் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படமும், அடுத்த பொங்கலுக்கு இன்னொரு படமும் கொடுத்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்

சூப்பர் ஸ்டாரின் மாஸ்டர் பிளான்.. அணைகட்டி தடுக்க அண்ணாத்த கால்வாய் இல்லடா, காட்டாறு!:-

Sunday 7 February 2021

 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் 6 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கூறிய செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தல அஜித் பற்றி பலரும் நல்ல விதமாக கூறி கொண்டிருக்கிறோம். மேலும் தல அஜித் போல் ஒரு ஜென்டில்மேன் தமிழ் சினிமாவில் இல்லை என்பது போல பலரும் சிலாகித்து கூறியுள்ளனர். உடன் நடித்த நடிகர்கள், அஜித் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் என அனைவரும் தல அஜித்தின் பண்பைப் பற்றிப் பெருமையாக கூறினர்.

தற்போது அவருக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றசாட்டு வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் அஜித்தை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை.

இப்படி அஜித் மீது இவர் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், தல அஜித் தன்னுடைய நண்பர் படம் ஒன்றிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது தல அஜித் எப்படிப்பட்டவர் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் ஷாலினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமர்க்களம். 1999ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அஜித்தின் நெருங்கிய நண்பர் சரண் இயக்கினார். அப்போது தல அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் செக்கை தற்போது வரை தல அஜித் டெபாசிட் செய்யாமல் வைத்துள்ளாராம்.

ஏன் என்று கேட்டதற்கு, காதல் மன்னன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் தயாரிப்பாளர் பல நஷ்டங்களை சந்தித்ததால் அமர்க்களம் பட வெற்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் எனவும், அதில் எனக்கு பத்து பைசா கூட வேண்டாம் எனவும் அந்த செக்கை வாங்கி வைத்துக் கொண்டாராம். இதனை தல அஜித்தின் நெருங்கிய நண்பரும் அமர்க்களம் படத்தின் இயக்குனருமான சரண் குறிப்பிட்டுள்ளார்.

நண்பருக்காக சம்பளமில்லாமல் நடித்த தல அஜித்.. இந்த மனுஷன போய் அந்த தயாரிப்பாளர் கேவலமா திட்டிவிட்டாரே!:-

Friday 5 February 2021

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 

குர்ஆன் ஹதீஸில்- நகரங்கள்/Halal Money:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com