HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 29 May 2018

அஜித் எப்போதுமே தன்னுடைய ரசிகர்களுக்கு மதிப்பும், அக்கறையும் காட்டக்கூடியவர். சமீபத்தில் அவர் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் ஒரு ரசிகன் அஜித்தை பார்த்த போது நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அஜித்திடம் புகைப்படம் எடுக்க கேட்டேன், ஆனால் அவர் விமானத்திற்கு நேரம் ஆகுது என்று கிளம்பிவிட்டார். நான் அங்கேயே நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பின் அஜித் அவர்களே என்னை கூப்பிட்டு என்னிடம் சிரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இந்த நாளை மறக்க முடியாது என்று பதிவு செய்துள்ளார்.

ரசிகன் விரும்பியதை செய்ய மறுத்த அஜித்- பின் நடந்ததே வேறு, என்ன விஷயம் பாருங்க...

Sunday 27 May 2018

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மும்பையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வில்லியம்சன் 47, யூசுப் பதான் 45 ஆகியோரின் உதவியுடன் 178-6 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் கோப்பை, என்ற கனவுடன் களமிறங்கிய சென்னை அணியின் டு ப்ளசி 10, ரய்னா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய சென்னை சிங்கம் வாட்சன் சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்க விட்டு வாழ்நாள் இன்னிங்சை ஆடினார். 

51 பந்துகளில் சதம் கடந்து, கூலாக பைனலை சென்னை வசம் ஆக்கினார் வாட்சன். ராயுடு  12 ரன்கள் எடுத்து பக்கபலம் தந்தார்.
இறுதியில் 18.3 ஓவர்களில் 181-2 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு கோப்பையை கெத்தாக வென்றது நம்ம சென்னை அணி!
சிஎஸ்கே டா..!!

ஐபிஎல் 2018 சாம்பியன்ஸ்: கோப்பையை தட்டிய நம்ம சென்னை சிங்கங்கள்..!

Friday 25 May 2018

ஏகலைவன் என்றொரு நபர் தொடர்ந்து அஜீத்திடம் கதை சொல்வதற்காக துரத்திக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மறுத்தால் ‘சரிங்க’ என்று ஒதுங்கிக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படுகிற கதிதான் ஏகலைவனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 58 வீடியோக்களில் பேசி அதை யு ட்யூபில் வெளியிட்டு வந்த ஏகலைவன் அதில் சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாம் அஜீத் தரப்பை மேலும் மேலும் எரிச்சலைடைய வைத்ததால் வந்த வினையை சில தினங்களுக்கு முன் அனுபவித்துவிட்டார் அவர்.

கோடம்பாக்கத்தில் இன்று அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்படும் இயக்குனர்களின் லிஸ்ட்டை கவனித்தால், அதில் மணிரத்னம் தவிர மற்றவர்கள் எல்லாருமே இருப்பார்கள். அப்படியிருக்க… எங்கோ இருக்கிற ஏகலைவனுக்கு படம் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் அஜீத்திற்கு இல்லவே இல்லை. அப்படியிருக்க… என் கதையை கேளுங்க என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைத்து வரும் அவரை அஜீத் வெறுக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம்.

அவரும் தல… தல… என்று அனுகூல சத்துருவாகவே மாறி அன்றாடம் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த வாரம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திடீரென ஏகலைவன் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரிகள், “இனி ஒரு முறை அஜீத் பற்றி வீடியோ போடறதோ அல்லது அவருக்கு கதை சொல்லப் போறேன்னு கிளம்பறதோ கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இதை தன் வாயாலேயே அஜீத் ரசிகர்களுக்கு 59 வது வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஏகலைவன். தன் மனைவியையும், மகளையும் போலீஸ் அதிகாரி ஒருவர் விரல் நீட்டி எச்சரித்ததாகவும் குறிப்பிடுகிறார் அவர். அஜீத் குழந்தை தடுக்கி விழுந்தால் கூட அதற்கு நீதான் காரணம் என்று உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டினாராம் அந்த அதிகாரி. இதையடுத்து ‘இனிமேல் அஜீத்திற்கு கதை சொல்லும் முயற்சியில் ஈடுபட மாட்டேன்’ என்றும் கூறிவிட்டார். ஏகலைவனின் சாமர்த்தியமே இங்குதான் வெளிப்படுகிறது.

ஏதோ அஜீத்திற்கே தெரியாமல் போலீஸ் அதிகாரிகள் மிரட்டியது போலவும், அஜீத்திற்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா? என்றும் கூறி சாமர்த்தியமாக அஜீத் ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்கிற அந்த தந்திரம்தான் அஜீத்திற்கு இவரை பிடிக்காமல் போக முதல் காரணமாக இருந்திருக்கும். இப்பவும் அந்த யுக்தியை மிக சரியாக செய்திருக்கிறார் ஏகலைவன்.

அஜீத்தின் கவனத்திற்கு தெரியாமல் இப்படியொரு மிரட்டல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. தனக்கு மன உளைச்சல் கொடுக்கிற நபரை நேரில் அழைத்து, “தம்பி… உனக்கு நான் படம் பண்ற எண்ணமே இல்ல. இனிமே நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் வேறு வேலை இருந்தால் பார்” என்று ஒரு வார்த்தையில் இந்த பிரச்சனையை முடித்திருக்க வேண்டிய அஜீத், போலீஸ் வரைக்கும் போனது நியாயமும் இல்லை. அதற்காக ஏகலைவனின் தந்திரமும் ஏற்புடையதாக இல்லை.

இந்த விஷயத்தில் அஜீத் ரசிகர்கள்தான் ஐயோ பாவம். யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்கிற குழப்பத்திலிருக்கிறார்கள்.

செல்லாத 500 ரூபாயை விட, செல்லுகிற ஐம்பது பைசா மேல். புரியுதா ரசிகர்ஸ்?





தனது உதவி இயக்குனரை அதட்டினாரா அஜித் உண்மையில் நடந்தது இது தான்..

Wednesday 23 May 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு வர ப்ளான் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் விசுவாசம் படப்பிடிப்பில் இருந்த போது காலில் அடிப்பட்டு வலியில் துடித்தாராம்.

இதனால், படப்பிடிப்பை நிறுத்தலாமா? என யோசிக்க, அஜித் அதெல்லாம் வேண்டாம் என்று வலியை பொறுத்துக்கொண்டு நடித்துக்கொடுத்துவிட்டாராம்.

இதை பார்த்த படக்குழுவினர்கள் எல்லாமே நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





தன் ரசிகர்களுக்காக தன் வலியை மறைத்து அதகளம் பண்ணும் அஜித் ..

Tuesday 22 May 2018



*துருக்கி- 17.5 மணிநேரம்

*சிரியா-16 மணிநேரம்

*லெபனான்-16மணிநேரம்

*பலஸ்தீன்-15மணிநேரம்

*ஈராக்-15மணிநேரம்

*பஹ்ரைன்-15மணிநேரம்

*குவைத்-15மணிநேரம்

*கட்டார்-15மணிநேரம்

*சவூதிஅரேபியா-15மணிநேரம்

*ஐக்கிய அரபு துபாய் -14மணிநேரம்

*மொரோக்கோ-16மணிநேரம்

*டியூனிசியா-16மணிநேரம்

*அல்ஜீரியா-16மணிநேரம்

*லிபியா-16மணிநேரம்

*எகிப்து-16மணிநேரம்

*இத்தாலி-17மணிநேரம்

*கிரேக்கம்-17மணிநேரம்

*ஸ்பைன்-17மணிநேரம்

*போர்த்துக்கல்-17மணிநேரம்

*பிரான்ஸ்-17மணிநேரம்

*சுவீடன்-20மணிநேரம்

*டென்மார்க்-20மணிநேரம்

*லக்ஸம்பேர்க்-17.5மணிநேரம்

*ரஷ்யா-20மணிநேரம்

*உக்ரைன்-17மணிநேரம்

*கொஸ்கஸ்-17மணிநேரம்

*ஒல்லாந்து-17மணிநேரம்

*பெல்ஜியம்-17மணிநேரம்

*சுவிஸர்லாந்து-17.5மணிநேரம்

*அவுஸ்ரியா-17.5மணிநேரம்

*பிரேசில்-9.5மணிநேரம்

*ஆர்ஜன்டீனா-9மணிநேரம்

*தென்ஆபிரிக்கா-10மணிநேரம்
*மேற்கு

 ஆபிரிக்கா-13.5மணிநேரம்

*ஐஸ்லாந்து-21மணிநேரம்

*ஜெர்மன்-20மணிநேரம்

*போலாந்து-20மணிநேரம்

*பிரித்தானியா-20.5மணிநேரம்

*நார்வே-20மணிநேரம்

*பின்லாந்து-20மணிநேரம்

*ஆஸ்ரேலியா-9.5மணிநேரம்

*கனடா-19மணிநேரம்

*ஐக்கியா அமெரிக்கா-20மணிநேரம்

*நியூஸிலாந்து-9.5மணிநேரம்

*இந்தோனேசியா-12மணிநேரம்

*மலேசியா-12மணிநேரம்

*இலங்கை-14மணிநேரம்

*இந்தியா -14மணிநேரம்

*ஆப்கானிஸ்தான்-17மணிநேரம்

*பாகிஸ்தான்-15.5மணிநேரம்

*ஈரான்-17மணிநேரம்

*மாலைத்தீவு-13.5மணிநேரம்

*பங்களாதேஷ்-15மணிநேரம்

*யெமன்-12.5மணிநேரம்

*சீனா-14மணிநேரம்

*ஜப்பான்-17மணிநேரம்

*தென்கொரியா-16.5மணிநேரம்

*சிங்கப்பூர் -14மணிநேரம்

*பிலிப்பைன்ஸ்-14மணிநேரம்

*புரூனை-13மணிநேரம்

*தாய்லாந்து-14மணிநேரம்

குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட நேரவலயங்களைக் கொண்ட நாடுகளின் வெவ்வேறு பகுதிகளில் நோன்பு இருக்க வேண்டிய நேரங்கள் வேறுபடும்





#உலகநாடுகளில்_நோன்பு_இருக்கவேண்டிய_நேரங்கள்....

Monday 21 May 2018

அஜித் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது,
இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில் பிரமாண்டமான பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் விசுவாசம் என்ன கதை என்று பலரும் யோசிக்க , ட்விட்டர் தளத்தில் ஒரு கதை உலா வருகிறது.
அதாவது அண்ணன் அஜித் தன் சொந்த கிரமத்துக்கு தம்பியை பார்க்க சிறையிலிருந்து வருகிறாராம், ஒரு கட்டத்தில் தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்பட அவர்களை பழிவாங்க புறப்படுகிறார் அண்ணன் அஜித். அதுமட்டுமில்லாமல் இந்த கதையின் பின்பலமாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்னையை களமாக இருக்கும் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கதை எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக ஒரு கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்கிறார்கள்.


விசுவாசம் கதை இதுதானா - பரவி வரும் புதிய கதை !...




ஒரு அமைப்பிற்கு நிதியுதவி வழங்கிய ஒருவருக்கு மரியாதை செய்வது இயல்பானதுதானே? அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சுவரில் முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படம் வைத்தது தொடர்பாக சர்ச்சைகள் வலுக்கின்றன.
இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியதில் இருந்து, தனது சொத்துக்களின் பெரும் பங்கை வழங்கிய ஜின்னா அந்த காலத்தில் இவ்வாறு பொதுநலன் விரும்பிய ஒரே தலைவராக திகழ்ந்தார்.

பல்கலைக்கழத்திற்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய ஜின்னா:-

சுதந்திரத்திற்கு முன், இந்தியாவின் செல்வந்தர்களில் ஒருவராக திகழ்ந்த ஜின்னா, கஞ்சத்தனம் மிக்கவர் என்று அறியப்பட்டவர். ஆனால், தனது சொத்துக்களில் ஏறக்குறைய அனைத்தையும் ஏ.எம்.யு, பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் கல்லூரி மற்றும் கராச்சியின் சிந்து மதரேசாதுல் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது ஆச்சரியம் அளிக்கும் விஷயம்.

அவர் நன்கொடை வழங்கிய கல்வி அமைப்புகளில், சிந்து மதரேசாதுல் தவிர வேறு எந்தவொரு கல்வி நிலையத்திலும் அவர் கல்வி பயின்றதில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

இதில் மற்றொரு ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கல்வி நிறுவனங்களுக்கு சொந்த விருப்பப்படி தனது சொத்துக்களை வழங்கும் முடிவை பாகிஸ்தான் உருவாவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1939 மே 30ஆம் தேதியன்று உயிலாக எழுதி வைத்திருக்கிறார் ஜின்னா.

இதற்கு பிறதுதான் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை மிகவும் வலிமையாக முன்னெடுத்தார் ஜின்னா. தான் நன்கொடை அளிக்கும் ஏ.எம்.யூ பல்கலைக்கழகம் பாகிஸ்தானில் இடம்பெறாது என்பதை அறிந்த பின்னரும், அவர் உயிலை திருத்தவும் இல்லை, மாற்றியமைக்கவும் இல்லை.

ஆனால், இந்தியாவுக்கு அவர் அளித்த நன்கொடை சொத்து மட்டுமா? ஜின்னா கூச்ச சுபாவம் கொண்டவர், சிறந்தவர் என்று கூறி அவர் மீதான மரியாதையை வெளிப்படுத்தினார் சரோஜினி நாயுடு. ஆழமான கருத்தாக்கங்களை கொண்டவரும், பாம்பேயில் மிகப்பிரபலமான வழக்கறிஞருமான ஜின்னா, அனைவரையும் ஈர்க்கும் ஒரு ஆதர்ச தலைவர் என்றும் சரோஜினி நாயுடு கூறினார்.

சட்டசபை அல்லது வெளியில் அவர் "பிரிட்டிஷ் அரசின் தீவிர எதிரியாக" கருதப்பட்டார். தனது அறைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான இளம் மாணவர்களிடம் பேசும் ஜின்னா, அவர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்துவார். 'பாம்பேயின் முடிசூடா மன்னர்' என்று ஜின்னாவுக்கு புகழாரம் சூட்டினார் சட்ட நிபுணர் எம்.சி சக்லா.

'முஸ்லிம் கோகலே’- ஜின்னாவின் வி்ருப்பம்:-

வசதியான சொந்த வாழ்க்கையையும் புகழ்பெற்ற உலகத்தை விட்டு வெளியேறி, வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என பலருக்கு ஊக்கமளிப்பவராக திகழ்ந்தார் சமூக சீர்திருத்தவாதி கோபால கிருஷ்ணா கோகலே. ஜின்னாவின் சத்தியமும், அசாத்திய திறமையும், ஆழ்ந்த ஈடுபாட்டையும் கோகலே கண்டுகொண்டார். இதைத்தவிர, ஹிந்து-முஸ்லீம் சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்வதற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு உகந்தவர் ஜின்னா என்றும் நம்பினார்.

முஸ்லீம் லீக்கில் இணையுமாறு அறிவுறுத்திய கோகலேயின் சொல்லுக்கு இணங்கினார் ஜின்னா. கோகலேவை மிகவும் மதித்த ஜின்னா, 'முஸ்லீம் கோகலே' ஆக விரும்பினார்.

1916ஆம் ஆண்டு,ல் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் சுதந்திரம் கோரி ஒன்றாக செயல்பட்டபோது, தனது கனவு கிட்டத்தட்ட நனவாகும் காலம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தார் ஜின்னா. ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது கனவு கானல்நீராகிவிட்டதை உணர்ந்து உடைந்துபோனார் ஜின்னா.

அவசர கதியில் செயல்பட்ட மகாத்மா காந்தி மற்றும் அவரது ஒத்துழையாமை அரசியல், குழப்பம் மற்றும் வன்முறையை பரப்பலாம் என்று ஜின்னா நம்பினார். எனவே எதிர்ப்பு தெரிவித்தபோது, காங்கிரசிலிருந்து ஜின்னா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்பு பாலம் ஜின்னா:-

காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதிலும், இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றிய ஜின்னாவின் நம்பிக்கை அப்படியே தொடர்ந்தது, முஸ்லிம் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்க்க ஜின்னா மறுத்துவிட்டார்.

காங்கிரசிலிருந்து பிரிந்த நீண்ட காலத்திற்கு பிறகும், தேசியத் தலைவராக மதிக்கப்பட்டார் ஜின்னா. நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த அவர், தனது சமூகத்தை முன்நிறுத்த மறுத்துவிட்டார்.

மஹ்மூதாபாத் மன்னர் ஜின்னாவை பற்றிய நினைவுகளை நினைவுகூர்கிறார்: "1926 ல் அவர் 12 வயது சிறுவனாக இருந்தபோது, "நீங்கள் முதலில் முஸ்லீமா அல்லது இந்தியரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளி மாணவனாக இருந்த நான், முதலில் முஸ்லிம், பிறகு இந்தியன் என்று பதில் சொன்னேன். அதை இடைமறித்த ஜின்னா, "என் குழந்தைகளே, முதலில் நீங்கள் இந்தியர்கள், பிறகுதான் முஸ்லிம்கள்" என்று உரத்த குரலில் வலியுறுத்தினார்.

காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜின்னா, பிறகு முழு மூச்சுடன் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டார். அவர் சுயேட்சைகளை இணைத்து காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு நல்கினார். மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஜின்னா இவ்வாறு செய்தது அனைவருக்கும் ஆச்சரியமளித்தது.


ஸ்வராஜ் கட்சியின் உறுப்பினராக சட்டமன்றத்தில் காங்கிரஸுடன் ஒத்துழைத்தார். இவ்வாறாக காங்கிரஸ் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவர் எப்போதுமே தவறவிட்டதில்லை.

ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜின்னா:-

சட்டசபையில் நீண்டகாலம் சேவைபுரிந்த ஜின்னா, அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தார். எதிர்கால இந்தியாவை வடிவமைப்பது தொடர்பான கேள்விகளை தொடர்ந்து முன்வைத்த ஜின்னாவின் கோரிக்கைகளில் முதன்மையாக இடம் பிடித்தது கல்வித்துறை. இந்திய ராணுவம், பொதுத்துறை, பொருளாதார சுதந்திரம் போன்ற முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக அயராது பாடுபட்டார் ஜின்னா.

முடிவில், ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர்களில் முதல் நபராக இருந்த அவர், அது நிறைவேற்றப்பட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அரசு நிர்வாகத்தை சீர்திருத்துவதற்காக பிரிட்டன் அரசு அனுப்பிய சைமன் கமிஷனில் இந்தியர்கள் இடம்பெறாததை எதிர்த்து முழக்கமிட்டார் ஜின்னா. இதற்காக, முஸ்லீம் லீக்கில் பிளவு ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட, சைமன் கமிஷனை எதிர்ப்பதற்காக பொதுமக்கள் ஆதரவை திரட்டும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

சைமன் கமிஷனுக்கு ஆதரவளித்த முகம்மது ஷபியின் தலைமையின் கீழ் முஸ்லீம் லீக் பிளவுபட்டு, ஒரு தனி கட்சியை அமைத்து, ஹிந்து மகாசபையுடன் கைகோர்த்தது.


இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் எதிர்பார்ப்புகள் தகர்ந்தபோது:-

அனைத்து கட்சி மாநாட்டில், ஜின்னாவின் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸை நெருக்கமாகக் கொண்டுவரும் முயற்சியை ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் முறியடித்தபோது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுவதற்கான ஜின்னாவின் நம்பிக்கை சுக்குநூறாக நொறுங்கிப்போனது.

அதன் பிறகும்கூட மனதளவில் அவர் ஒரு தேசியவாதியாகவே இருந்தார். முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இருந்து தனிநாடு வேண்டும் என்று கவிஞர் முகமது இக்பால் முன்வைத்த 'பாகிஸ்தான்' கோரிக்கையை கனவு என்றே கூறினார்.

உண்மையில், 1936 வரை, ஜின்னா ஒரு தேசபக்தர் என்பதோடு, தாராளவாத தேசியவாத முஸ்லீம் குழுவை கட்டி எழுப்பமுடியும் என்று நம்பினார். சமுதாயத்தில் இருக்கும் பிற முற்போக்கான சமூகங்களின் மக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து நடக்க முடியும் என்று ஜின்னா நம்பினார்


இந்திய பிரிவினைக்கு காரணகர்த்தா ஜின்னா மட்டுமா?

இந்திய பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு என்று நினைக்கும் சமகால மக்கள் ஜின்னாவுக்கு அதில் சம்பந்தம் இல்லை என்று கருதுகிறார்கள். ஜின்னாவின் நெருங்கிய நண்பர் காஞ்சி துவார்காதாஸ் "சுதந்திரத்திற்கு பத்து வருடங்கள்" என்ற தனது புத்தகத்தில், 1942 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜின்னாவுடன் 90 நிமிடம் பேசிய முக்கியமான உரையாடலை குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் என்ற நாடு ஒருபோதும் உருவாகாது என்று ஜின்னா கருதியாக தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் பற்றி ஜின்னாவிடம் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "நண்பரே காஞ்சி, ஒரு சமிக்ஞை, நட்புக்கான ஒரேயொரு சமிக்ஞையை மட்டுமே நான் காங்கிரஸில் இருந்து எதிர்பார்க்கிறேன். இதுவரை எனக்கு அது கிடைக்கவில்லை. காங்கிரஸிடம் இருந்து அது கிடைத்தால், பிரச்சனைக்கான தீர்வை காண்பது சுலபமாகிவிடும்."

ஆனால், ஜின்னாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, தங்கள் சொந்த வழியில் பெயரை தூக்கி பிடிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.














இந்திய பிரிவினைக்கு ஜின்னா மட்டும்தான் காரணமா?

Sunday 20 May 2018

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் மக்களும் தல என்று செல்லமாக அழைப்பார்கள். இந்த பெயர் தீனா படத்தின் மூலம் இவருக்கு அமைந்தது.
அதே சமயம் கிரிக்கெட் சாம்பியன் டோனியை கூட தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இதனால் அடிக்கடி சில ரசிகர்கள் தல நா டோனி தான் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இன்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவருடைய செல்பி வீடியோவில், நான் எப்போதும் நம்புவது தல என்றால் ஒருத்தர் தான், நான் அவருடைய தீவிர ரசிகரும் கூட, நிறைய போஸ்டரில் தல என்று பெயரில் டோனி இருப்பார், ஆனால் எல்லாருக்கும் தெரியும் தல நா அஜித் அண்ணா மட்டும் தான் என்று கூறினார்.




டோனியெல்லாம் தல கிடையாது, ஒரே தல அஜித் தான் - பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பேச்சு !...

Friday 18 May 2018

அஜித் தொடந்து சிவாவுடன் தான் கூட்டணி அமைத்து வருகின்றார். வேதாளம் வரைக்கும் ரசிகர்கள் பொறுத்து இருந்தாலும் தற்போது விவேகத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு இந்த கூட்டணி மேல் பெரிதும் நம்பிக்கை இல்லை.
இந்த நிலையில் அஜித் மீண்டும் சத்யஜோதி நிறுவத்திற்கு தான் நடிக்கவுள்ளார், இதை நாம் முன்பே தெரிவித்து இருந்தோம்.
தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தை இயக்கப்போவது கௌதம் மேனன் அல்லது தீரன் வினோத் என கிசுகிசுக்கப்படுகின்றது.
இவர்கள் இருவருமே அஜித்திற்காக கதை அமைக்கும் வேலைகளில் இருப்பதாகவும், அஜித் யாரை வேண்டுமானாலும் ஓகே செய்யலாம் என தெரிகின்றது.


தல அஜித் சிவாவை தொடர்ந்து அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் தெரியுமா? மிரட்டல் அப்டேட் இதோ...

Wednesday 16 May 2018

சென்னை: விஸ்வாசம் ஷூட்டிங் நடத்த சென்னையில் இடமே இல்லையா என்று கேட்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி.

அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சிவா.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது, வேண்டுகோள்
தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். எங்களின் இழப்புகளை ஏற்றுக் கொண்டு கூட தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம்.

எதிர்பார்ப்பு
தயாரிப்பாளர்களின் செலவு, சிரமம் குறையும், படங்களின் எண்ணிக்கை கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் பல சலுகைகளை அளித்துள்ளோம்.


காலா
சில படங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும்போது எங்களின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை இங்கு ஷூட் செய்தார்கள். ரூ. 12 கோடி மதிப்புள்ள செட்டில் ஷூட் பண்ணபோது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சினிமாக்காரர்களுக்கு மட்டும் அல்ல அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலைவாய்ப்பை அந்த படம் ஏற்படுத்திக் கொடுத்தது.

அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படம் இவிபியில் நடக்கிறது. முன்பெல்லாம் படப்பிடிப்பு வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரோட வசதிக்காக வேறு மாநிலத்தில் போய் செட் போட்டுள்ளார்கள். அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால் இங்குள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்
அதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மறுபரிசீலனை செய்து இனிமேல் இங்கு இருக்கும் தொழிலாளர்களை வைத்து படம் எடுக்கவும். அதற்காக நான் இங்கேயே படம் பண்ண வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. இங்கு இல்லாத விஷயங்களுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.






அஜித்தை சீண்டும் ஆர்.கே. செல்வமணி கோபத்தில் தல ரசிகர்கள்...

Monday 14 May 2018



அஜீத்தின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால், அவரது ரசிகர்கள் நிம்மதியாக உறங்கப் போய்விடுவார்கள். ஆனால் காக்கா கத்தி ஆந்தை முழிச்ச கதையாக போய்விட்டது அஜீத்தின் ஆசை.

இனிமேலும் சிவா மீது நம்பிக்கை வைக்க அஜீத் என்ன உலகம் தெரியாதவரா? எந்திரன் 2 படத்தை முடித்துவிட்ட ஷங்கருடன் இணைந்து ஒரு படத்தை தரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். அதற்கேற்றார் போல ஷங்கர் சைடிலிருந்து ஒரு பாசிட்டிவ் பதில் வந்ததாகவும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் முன்னே, ஒரு திடீர் கல் வந்து குறுக்கே முளைத்துவிட்டதாம். அதுதான் கமல்.

‘இந்தியன்’ படத்தில் ஷங்கருக்கு கமலும், கமலுக்கு ஷங்கரும் கொடுத்த குடைச்சல்களால், நேரில் பார்த்தாலும் பார்க்காதது போலவே நடந்து கொண்ட இருவரும் இப்போது பேஸ்ட் போட்டு ஒட்டாத குறையாக பேசி சிரிக்கிறார்கள். கமலே “நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்” என்று அழைக்க, எந்திரன் பணிகளுக்கு இடையே இந்த வேலைகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம் ஷங்கர்.

விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

ஆசைப்பட்ட அஜித் முட்டுக்கட்டை போட்ட கமல்.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை...

அஜித் பற்றி சில தகவல்கள்
தமிழ் சீனிமாவில் அனைவருக்கும் ரசிகர் உள்ளனர்.
 ஆனால் நடிப்பை தாண்டி நல்ல மனிதர் என்று பெயர் பெற்று அனைவர் மனதிலும் இடம் பெற்றவர் இவருடைய எதிரிகள் கூட இவரை நினைத்து பெருமை கொள்வர்.
உயர்ந்த இடத்தில் உள்ளோம் நாம் சொல்வதை அனைவரும் ஏற்பர் என்று ஏமாற்றும் கூட்டத்தின் நடுவில் . தல, தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி தன் ரசிகர்களுக்கு சுய சிந்தனை ஆற்றலை வளர்த்தவர்.
பல நல்ல ஆற்றலை வளர்த்தவர்.சுயநலத்தை விரும்பாத ஒரே நடிகர் .தன் ரசிகர்களை வன்முறையில் ஈடுபடுத்தவிடாமல் செய்தவர்.
உழைத்தால் மட்டுமே உயர்வு அதுவே நிரந்தரம் என்று தன் வாழ்கையில் சாதித்து தன் உடன் உள்ள அனைவரிடமும் அன்பு செலுத்தி அவர்கள் வறுமையில் வாடிய போது உதவி செய்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தவர்.
விளம்பரம் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் சில உயர்ந்த நடிகர்கள் மத்தில் என்றுமே மக்களை தன் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கும் எங்கள் தல அஜித் பிறந்தநாள் வாழ்த்துகள்.





அஜித் - விஜய் வேறுபாடுகள்...

Saturday 12 May 2018

அஜித் ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். படங்கள் வெற்றியோ, தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாமல் அஜித்திற்காக எப்போதுமே குரல் கொடுப்பார்கள்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட விருது விழாக்களில் ஒன்று விஜய் அவார்ட்ஸ். நீண்ட இடைவேளைக்கு பிறகு விரைவில் 10வது ஆண்டிற்கான விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக ரசிகர்களின் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தற்போது என்னவென்றால், சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குனர் என நான்கு விருதுகளுக்கு விவேகம் தேர்வாகியுள்ளது. ரசிகர்கள் வாக்குப்பதிவில் அஜித் வெற்றிபெறுவாரா இல்லையா என்பது உறுதியாகவுள்ளது.





அஜித்தை வெற்றிபெற செய்வார்களா ரசிகர்கள்- விஷயம் இதோ...

Friday 11 May 2018

தல அஜீத் மற்றும் சிறுத்தை சிவாவின் கூட்டணியில், விவேகம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ”விஸ்வாசம்”. இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜீத்துடன் மீண்டும் இணையவிருக்கிறார். ரோபோ சங்கர் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் தொடக்கம் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போது மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதில் அஜீத் மீண்டும் ”சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கில் இருப்பது தான் அதற்கு காரணம்.

அஜீத் சிவா கூட்டணியில் வெளியான எல்லா படங்களிலுமே பெரும்பாலும் அஜீத் இந்த ”சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கில் தான் நடித்திருந்தார். இது குறித்து இயக்குனர் சிவா தரப்பில் பேசும்போது, இந்த படத்தில் அஜீத் இளமையான தோற்றத்தில் தான் நடிக்கவிருக்கிறார் என தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் அஜீத் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.


சும்மாவே தெறிக்க விடுவோம்
இதுல இரண்டு வேடம்
கேட்கவா வேணும்
சும்மா தாறுமாறா தெறிக்கவிடுவோம்
ஆட்டம் ஆரம்பம் டா
இதுவரைக்கும் ஆடினவன்லாம்
ஓரமா ஒதுங்கி வேடிக்கை மட்டும்
பாரு
இனிமே எங்க ஆட்டம் தான்







ரெட்ட தல நின்னு பேசும் விசுவாசம் பட அப்டேட்..




ஆரோகியமான தலைமுடி வளர வேண்டும் என தான் நாம் நினைக்கிறோம் அல்லவா..? ஆனால் அதற்காக நாம் என்ன செய்தோம்..? ஒன்றுமே இல்லை...ஆனால் எப்ப பார்த்தாலும் தலை முடி கொட்டுகிறதே ..நீளமான முடி இல்லையே என புலம்புகிறோம் அல்லவா..?

யோகர்ட்:-
யோகர்ட் என அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட  தயிர்   பொதுவாகவே தலைமுடிக்கு தாஎவையான அனைத்து சத்துக்களும்  கொண்டது.

சோற்று கற்றாழை மற்றும் யோகர்ட்

3 -  டீ ஸ்பூன் சோற்று காற்றாலை ஜெல்
2 - டீ ஸ்பூன் யோகர்ட்.
1 - 2 டீ ஸ்பூன்  ஆலிவ்  ஆயில்  ஒரு  டீஸ்பூன் தேன்.

செய்முறை:-

இவை நான்கையும் ஒன்றாக சேர்ந்து நன்கு கல்கி கொள்ளவும்

இந்த கலவையை உச்ச தலையில் 15  நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்

கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் இதை வைத்து மசாஜ் செய்த உடன்,

கொடுத்தலாக 30  நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற விட வேண்டும் .

பின்னர்  எப்போதும் தலைக் குளிப்பது  போல, சிகைக்காய்  அல்லது ஷாம்பூ போட்டு  குளித்து  விடுங்கள்..

இதே போன்ற வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதும்.

முடி நல்ல ஆரோக்கியமாக வளார்வாது மட்டுமில்லாமல், நல்ல வலுவானதாகவும் இருக்கும்





முடி ஆரோக்கியமாக வளர..சூப்பர் ஆப்ஷன் இதோ..!

Thursday 10 May 2018

விசுவாசம் அஜித் நடிப்பில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது.

விசுவாசம் அஜித் நடிப்பில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது.

ஆனால், அதெல்லாம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் எடுத்த புகைப்படம் தானாம், அதனால் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்.

அஜித் இப்படத்தில் ப்ளாக் ஹேரில் நடிப்பது உறுதி என கூறப்படுகின்றது.


அடி தூள் விசுவாசம் படத்தின் வெளிவந்த ரகசியம் தல ரசிகர்கள் கொண்டாட்டம்..

Wednesday 9 May 2018

இந்திய சினிமாவிலேயே ஒரு மைல் கல் படம் என்றால் இந்தியன் தான். கமல்-ஷங்கர்கூட்டணியில் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்த படம்.
இப்படம் திரைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது, இதை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படம் 22 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இன்றைய மதிப்பில் ரூ 300 கோடியை இது தாண்டும்.
மேலும், 22 வருடங்கள் கழித்து கமல்-ஷங்கர் இந்தியன்-2வில் இணைவது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியன் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரும் வெற்றியை ருசிக்க படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.


அப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா! கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்...

Tuesday 8 May 2018

தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் தல அஜீத். தமிழ்நாட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவரின் படங்கள் வெளியானால் அது இவரின் ரசிகர்களுக்கு திருவிழாவாகதான் இருக்கும்.

Ajith
இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இனைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஐதரபாத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தல அஜீத் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன் அஜீத் வில்லனாக நடித்த மங்காத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.




மிரட்டும் வில்லனாக அஜீத் உங்களை மிரளவைக்கும் தகவல்...

பி.ஜே.பி இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு 2/3 அல்லது 67 சதவிகிதம் பெரும்பான்மை மக்களவை ராஜ்யசபாவிலும் அதே சட்ட மசோதா 15 மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபாவில் 35 பாராளுமன்ற உறுப்பினர்களும் 80 ராஜ்யசபா எம்.பி.க்களும் 2/3 வது பெரும்பான்மை கிடைக்க வேண்டும். முஸ்லீம்கள் தங்கள் வாக்கை விற்கவோ அல்லது வாக்குகளை பிரித்துக்கொள்ளவோ ​​அல்லது வாக்களிக்காமலோ இந்தியாவை இந்து நாடு என்று பிரகடனப்படுத்தவும், சீனா, பிரான்ஸ், பர்மா நாடுகள் போன்றவற்றிலும் வாக்களிக்கும் உரிமையை முஸ்லீம்கள் இழக்க நேரிடும். வேறு எந்த கட்சியிலிருந்தும் பல வலுவான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பி.ஜே. ஆனால் ஒவ்வொரு ஜமாத்திலிருந்தும் அனைத்து முஸ்லிம்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தோற்கடிப்பதற்காக யாரை முடிவு செய்ய வேண்டும்? உங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறவர்கள், நீங்கள் உண்மையிலேயே டீன், ஆஸான், மஸ்ஜித்ஸ் மடார்சாஸை விற்கிறீர்கள். வாக்குகள் பிரிப்பதைப் பற்றியும் இதுதான். எனவே, வரவிருக்கும் தேர்தல்கள் வெறும் தேர்தல் அல்ல, அது முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நிலைப்பாடு மற்றும் மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுதந்திரம். இந்தச் செய்தியை அனைத்து முஸ்லிம்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் அனுப்பவும். பிஜேபி தோற்கடிப்பதில் நாங்கள் தோல்வியடைந்தால், சீனா மற்றும் பிற நாடுகளைப் போலவே அடிமைகள் போல நாங்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு முஸ்லீம், விழித்து, யோசித்து இந்த விழிப்புணர்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள். கடவுள் நமக்கு புரியும் மற்றும் ஐக்கியப்படுத்த திறன் கொடுக்க.

Aameen.

இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லீமுக்குச் சென்று உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதை விளக்கவும்.

அன்புடன்.....

நிசார் அகமது (ஐபிஎஸ் ஓய்வு)


பி.ஜே.பி இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க திட்டமிட்டுள்ளது...

கடந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்காக மத்திய அரசு நீட் தேர்வை அமலுக்கு கொண்டுவந்தது. இந்த நீட் தேர்வு பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் மத்திய அரசு கவலை படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் அமைத்தது . அதன் படி நேற்று திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்றார்.
அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கிருஷ்ணசாமி கேரளாவில் மரணம் அடைந்தார். கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நீட் தேர்வால் சிலர் மரணத்தை சந்திக்கின்றனர்.
இது பற்றி கமல் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில் ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை எனது கட்சி உதவிகள் செய்யும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .




தந்தையை இழந்த மாணவனுக்கு கமல் செய்யும் செயல்...

Monday 7 May 2018


அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஏங்காத ரசிகர்கள் இல்லை. அதற்கு ஏற்றார் சினிமா ஸ்ட்ரைக் ஏற்பட்டு சுத்தமாக படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. அஜித்தும் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஷுட்டிங் தொடங்கப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.




அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது- வெளியான முதல் புகைப்படம்

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் திங்கள் அன்று அதாவது மேh 7 ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.

தமன்:-
நேற்று தமன் தன் ட்விட்டர் பக்கத்தில் ” தல அஜித்துடன் பயணம் செய்கிறேன். இந்த வாரத்திற்கான சிறப்பான துவக்கம். அசத்தல் சண்டே.” என்று அஜித்தின் இந்த போட்டோவை வெளியிட்டார்.
பின்னர் சில மணி நேரம் கழித்து “தல அஜித்துடன் நான். வேற எனெர்ஜி லெவல்.” என்று ஏர்போர்ட்டில் அஜித்துடன் கிளிக்கிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டனர்.


தல அஜித் இசையமைப்பாளர் தமன் தீடீர் சந்திப்பு !..

Sunday 6 May 2018

*ஹலோ ஜி தமிழ்நாட்டில் இருந்து பேசறோம்..*

*அச்சா அங்க யாரும் இப்போ காவிரி பிரச்சனை பத்தி பேசுது?*

*இல்ல ஜி நீட் தான் இப்ப பேச்சா இருக்கு..*

*இந்த இஸ்டெர்லைட், நியூட்ரினோ,  இதெல்லாம் கூட பேசறிதில்லேயா?*

*நோ ஜி ஒன்லி நீட்டு நீட்டு..*

*ஓஹோ..அப்புறம் நம்ம புரோஹித் ஜி மேட்டர்...*

*அதெல்லாம் மறந்து 4 நாளாச்சுங்க ஜி*

*பஹுத் அச்சா.. நம்பள் தோஸ்த் எஸ்.வி.சேகர் நியூஸ்.?*

*அவரு தாவூத்தை விட பயங்கரமான ஆளா இருப்பார் போல ஜி இப்ப வரைக்கும் புடிக்கலை..*

*ஷுக்ரியா.. கர்நாடகா எலக்‌ஷன் முடியற மட்டும் அங்க நோ காவிரி டாக்.. ஒன்லி நீட்.. டீக்கே..*

*நீங்க சொல்லிட்டிங்க இல்ல அப்படியே செய்யறோம் ஜி.!*


*ஹலோ ஜி தமிழ்நாட்டில் இருந்து பேசறோம்..*.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு படபிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கிறது.
இந்நிலையில் ஆரம்பம், பில்லா படங்களை இயக்கிய விஷ்ணு வர்த்தன் அஜித்திடம் சொல்லியிருந்தாராம். அஜித் பிசியாக இருப்பதால் இப்படம் கரண் ஜோகருக்கு சொல்லப்பட்டதாம்.
படத்தை அவர் உறுதி செய்துவிட்டாராம். இதில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
இந்நிலையில் தற்போது இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்களாம். மேலும் இது கார்கில் போர் சமயத்தில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாம்.


கார்கில் போர் சமயத்தில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை கதையை அஜித் மிஸ் பண்ணிவிட்டார்! ரசிகர்கள் கவலை - கதை இதுதானாம்.

Saturday 5 May 2018


முகலாய பேரரசர்களில் பலர் இந்திய மக்களின் மனதில் இடம்பெற்றிருந்தாலும், ஔரங்கசீப் மட்டுமே விதிவிலக்காக விளங்கினார். இந்துக்களை வெறுப்பவர், மத வெறியன், கொடூரமான அரசன், அரசியல் நோக்கத்திற்காக அண்ணன் தாரா ஷிகோஹ்க்கு துரோகம் செய்தவர் என்று கருதப்படுகிறார் ஒளரங்கசீப்.

வயோதிகரான தனது தந்தையை அவர் இறக்கும்வரை சுமார் ஏழரை ஆண்டுகள் வரை ஆக்ராவின் கோட்டையில் சிறை வைத்தார். ஒளரங்கசீப் தனது அண்ணன் தாராவை தோற்கடித்த போதே, இந்தியாவில் பிரிவினைக்கான விதைகள் விதைக்கப்பட்டதாக அண்மையில் பாகிஸ்தானிய நாடக கலைஞர் ஷாஹித் நதீம் எழுதியிருந்தார்.

1946 இல் ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் ஒளரங்கசீப் கடுமையானவர் மற்றும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து தவறானது என்று மறுக்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே. தமது 'ஒளரங்கசீப்-தி மேன் அண்ட் தி மித்' (Aurangzeb: The Man and the Myth) என்ற புத்தகத்தில், இந்துக்களின் மீது கொண்ட வெறுப்பால்தான் ஒளரங்கசீப் ஆலயங்களை அழித்ததாக கூறுவது தவறு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலம் 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால் நவீன வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றை வித்தியாசமாக புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே.

ஒளரங்கசீப்பின் 49 ஆண்டு ஆட்சிக்காலம்:-

15 கோடி மக்களை 49 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் ஒளரங்கசீப். அவரது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய இந்திய துணைக்கண்டம் முழுவதுமே முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது.

மகாராஷ்டிராவின் குல்தாபாத் நகரில் ஆடம்பரம் ஏதும் இல்லாமல் எளிமையான கல்லறையில் ஒளரங்கசீப் புதைக்கப்பட்டார் என்கிறார் ட்ரஷ்கே. இதற்குமாறாக, அரசர் ஹுமாயூனுக்காக செந்நிற கற்களால் அழகான கல்லறை டெல்லியில் கட்டப்பட்டது. அதேபோல் ஷாஜகான் ஆடம்பரமாக கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டார்.

'ஒளரங்கசீப் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை சிதைத்தார் என்பது தவறு. அவர்களது நேரடி கட்டளையால் உடைக்கப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டாது. இந்துக்களின் விரோதி என அழைக்கப்பட்ட அவரது ஆட்சியின்போது உண்மையில் இந்துக்களுக்கு எதிராக பெரிய கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை. உண்மையில், முக்கியமான அரசுப் பதவிகளில் இந்துக்களை பணியமர்த்தினார் ஒளரங்கசீப்' என்கிறார் ட்ரஷ்கே.

வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் ஒளரங்கசீப்:-

1618 நவம்பர் மூன்றாம் தேதியன்று டாஹோட் என்ற இடத்தில் ஒளரங்கசீப் பிறந்தபோது இந்தியாவின் பேரரசாராக இருந்தவர் அவரது தாத்தா ஜஹாங்கீர். ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியரின் நான்கு மகன்களின் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்.

இஸ்லாமிய இலக்கியங்களிலும், துருக்கிய இலக்கியங்களிலும் விருப்பம் கொண்ட ஒளரங்கசீப், கையெழுத்துப் பிரதிகளை எழுதுவதில் சிறந்தவர்.

ஷாஜகானின் நான்கு மகன்களுக்கிடையே சிம்மாசனத்திற்கான போட்டி சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. அரசியல்ரீதியான பதவிகளுக்கு அனைத்து வாரிசுகளுக்கும் சமமான உரிமை இருப்பதாக மத்திய ஆசியாவில் அந்தக் காலத்தில் கருதப்பட்டது.

ஷாஜகான் தனது மூத்த மகன் தாரா ஷிகோஹ் அரசனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தந்தைக்கு பிற்கு இஸ்லாமிய அரசின் பொறுப்பை ஏற்க தன்னைவிட வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று கருதினார் ஒளரங்கசீப்.

தாரா ஷிகோஹ்வின் திருமணத்திற்குப் பின்னர், சுதாகர் மற்றும் சூரத் சுந்தர் என்ற இரண்டு யானைகளுக்கு இடையே போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஷாஜகான் என்று ஆண்ட்ரி ட்ரஷ்கே ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

யானைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது முகலாயர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. போட்டியின்போது குதிரையில் அமர்ந்திருந்த ஒளரங்கசீப்பை நோக்கி கோபத்துடன் திரும்பியது சுதாகர் என்ற யானை. தன்னருகில் வந்த சுதாகரின் நெற்றியில் ஈட்டியால் தாக்கினார் ஔரங்கசீப். இதனால் யானையின் சீற்றம் இன்னும் அதிகமாகி, தும்பிக்கையை சுழற்றியது.

தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் இடையில் விரோதம்:-

யானை மோதிய வேகத்தில் குதிரையில் அமர்ந்திருந்த ஔரங்கசீப் நிலத்தில் வீழ்ந்தார். போட்டியை பார்க்க அங்கு கூடியிருந்த ஒளரங்கசீப்பின் சகோதரர் ஷுஜா மற்றும் ராஜா ஜெய்சிங் உட்பட பலர் ஔரங்கசீப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மற்றொரு யானையான ஷ்யாம் சுந்தர், தனது போட்டியாளரான சுதாகரிடம் சண்டைக்கு வந்ததால் அதன் கவனம் திரும்பிவிட்டது.

மீண்டும் யானைகளுக்கு இடையிலான சண்டை தொடங்கியது. சீற்றம் மிகுந்த யானை தாக்கினாலும், அச்சமின்றி அதனை ஈட்டியால் தாக்கிய ஒளரங்கசீப்பின் தீரம் அனைவராலும் பேசப்பட்டது. ஷாஜகானின் அரசவைக் கவிஞர் அபூ தாலிப் கான் இந்த சம்பவத்தை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மற்றொரு வரலாற்றாசிரியர் அகில் கான் ரஜி, தனது 'வகீயத்-ஏ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில், பலர் ஒளரங்கசீப்பை காப்பாற்ற முயன்றபோதிலும், அண்ணன் தாரா ஷிகோஹ், தம்பியை காப்பாற்ற எந்தவித முயற்சிகளையும் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாஜகானின் அரசவை வரலாற்றாசிரியரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். 1610ஆம் ஆண்டு ஷாஜகான் தனது தந்தை ஜாஹாங்கீரின் முன்னிலையில் பயங்கரமான சிங்கத்தை கட்டுப்படுத்திய சம்பவத்துடன், ஒளரங்கசீப்பின் செயலை அவர் ஒப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்றாசிரியரான கேத்தரீன் பிரவுன், 'டிட் ஒளரங்கசீப் பேன் மியூசிக்' ('Did Aurangzeb ban music?') என்ற தனது புத்தகத்தில் ஒளரங்கசீப்பின் காதலைப் பற்றி சொல்கிறார். தனது அத்தையை சந்திக்க புர்ஹான்பூருக்குச் சென்றிருந்த ஒளரங்கசீப், பாடகியும், நடனக் கலைஞருமான ஹீராபாயை அங்கு சந்தித்தார்.

மரத்தில் இருந்து மாங்காய் பறித்துக் கொண்டிருந்த ஹீராபாயை பார்த்ததுமே காதல் கொண்டார் ஔரங்கசீப். ஒளரங்கசீப்பின் காதல் எந்த அளவு இருந்தது என்பதை குறிப்பிடும் சம்பவத்தையும் கேத்தரீன் பிரவுன் குறிப்பிடுகிறார். மது அருந்தக்கூடாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை ஹீராபாயின் வார்த்தைக்காக மீறத் தயாரானார் ஒளரங்கசீப். ஆனால், மது அருந்தும் சமயத்தில் வேண்டாம் என்று ஹீராபாய் தடுத்துவிட்டார். ஆனால் ஒளரங்கசீப்பின் காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஓராண்டிலேயே ஹீராபாய் இறந்துவிட, காதல் அத்தியாயம் முடிந்துபோக, ஒளரங்கசீப் அரசியலில் தீவிரமாக இறங்கினார். ஹீராபாய் ஔரங்காபாத்தில் புதைக்கப்பட்டார்.

தாரா ஷிகோஹ் அரசாராயிருந்தால்?

இந்திய வரலாற்றில் இருக்கும் மாபெரும் கேள்வி என்ன தெரியுமா? ஆறாவது முகலாய பேரரசரசராக கொடுங்கோல் ஔரங்கசீப்பிற்கு பதிலாக மிதவாதியும், அரியணைக்கு உரியவர் என்று கருதப்பட்ட மூத்த வாரிசுமான தாரா ஷிகோஹ் அரியணை ஏறியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இதற்கு பதிலளிக்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே. "உண்மையில் முகலாய பேரரசை வழி நடத்தும் வலிமையோ, திறமையோ அற்றவர் ஷிகோஹ். சிம்மாசனத்திற்காக சகோதரர்கள் நால்வரும் மோதிக்கொண்டாலும், தந்தையின் ஆதரவு மூத்த மகன் தாரா ஷிகோஹ்க்கே இருந்தது. ஆனால், ஒளரங்கசீப்புக்கு இருந்த அரசியல் அறிவும், விவேகமும், விரைந்து செயல்படும் திறமையும் வேறு யாரிடமும் இல்லை."

ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒளரங்கசீப்பும் அவரது தம்பி முராத்தும் இணைந்து 1658ஆம் ஆண்டு ஆக்ரா கோட்டையை சுற்றி வளைத்து முற்றுகை இட்டனர். அப்போது அரசரும், அவர்களின் தந்தையுமான ஷாஜகான் கோட்டையின் உள்ளே இருந்தார். கோட்டைக்குள் நீர் விநியோகம் முதலில் நிறுத்தப்பட்டது. வேறு வழியில்லாமல் முற்றுகையிடப்பட்ட சில நாட்களிலேயே, ஷாஜகான் கோட்டை மற்றும் பொக்கிஷங்களையும், ஆயுதங்களையும் இரண்டு மகன்களிடமும் ஒப்படைத்துவிட்டார்.

தனது மகளை மத்தியஸ்தராக நியமித்த ஷாஜகான், முகலாய பேரரசை ஐந்தாக பிரித்து நான்கு மகன்களுக்கும் தலா ஒரு பகுதியையும், எஞ்சிய ஐந்தாவது பாகத்தை ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் கொடுக்கவேண்டும் என்று சமாதானம் பேசினார். ஆனால் ஒளரங்கசீப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தாரா ஷிகோஹ்வின் நம்பிக்கைக்கு உரிய மாலிக் ஜீவன் என்பவரைக் கொண்டே 1659ஆம் ஆண்டில் அண்ணனைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தார் ஒளரங்கசீப். தாரா ஷிகோஹ் மற்றும் அவரது 14 வயது மகன் சிஃபிர் ஷுகோஹை சங்கிலியில் பிணைத்து அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட யானையில் அமரவைத்து டில்லியின் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்தார்.

தந்தையின் சிறையில்...

தப்பித்து ஓட முயன்றால், அவரது தலையை வெட்டி விடுவதற்காக கையில் வாளுடன் அவர்களை ஒரு சிப்பாய் பின் தொடர்ந்தார். அந்த சமயத்தில் இந்திய பயணம் வந்திருந்த இத்தாலிய வரலாற்றாசிரியர் நிகோலாய் மானுசி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். "தாராவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தினத்தன்று ஒளரங்கசீப் அவரிடம், 'நம் இருவரின் நிலையும் மாறி, நீ இப்போது அரசனாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு கேலியாக பதிலளித்த தாரா, உன்னைக் கொன்று உடலை நான்கு துண்டாக வெட்டி, டெல்லியின் நான்கு பிரதான வாயில்களின் கதவுகளில் தொங்கவிடுவேன்" என்று பதிலளித்தார்".

ஹுமாயூன் கல்லறைக்கு அருகில் அண்ணன் தாராவின் உடலை அடக்கம் செய்தார் ஒளரங்கசீப். அண்ணனுடன் பகைமை பாராட்டினாலும், பிறகு தனது மகள் ஜப்தாதுன்னிசாவை தாராவின் மகன் சிஃபிர் ஷுகோஹ்க்கு திருமணம் செய்து வைத்தார் ஔரங்கசீப்.

ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜகானின் இறுதி காலத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் ஆக்ரா கோட்டையில் சிறையில் வைத்திருந்த சமயத்தில் அவருடைய மூத்த மகள் ஜஹானாரா தினமும் அங்கு விளக்கு ஏற்றும் பணியை செய்யுமாறு பணித்திருந்தார்.

தந்தையை சிறையில் வைத்திருந்த ஒளரங்கசீப்பை, இந்தியாவின் நேர்மையான ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா மசூதியின் ஷரீஃப், இந்திய அரசர் என்ற முறையில் அவர் அனுப்பிய பொருட்களை ஏற்றுக் கொள்ள பல ஆண்டுகள்வரை நிராகரித்துவிட்டார். இது ஒளரங்கசீப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

ஒளரங்கசீப்பின் கடிதங்கள்:-

1679ஆம் ஆண்டில் டெல்லியில் இருந்து தென்னிந்தியாவுக்குச் சென்ற ஒளரங்கசீப் பிறகு வட இந்தியாவிற்கு திரும்பி வரவேயில்லை. அரசருடன் ஆயிரக்கணக்கான மக்களும், அவரது குடும்பத்தினரும் தென்னிந்தியாவுக்கு சென்றனர். அவர்களின் இளவரசர் அக்பர் (ஒளரங்கசீப்பின் மகன்) தவிர வேறு முக்கியமான பிரமுகர்கள் யாரும் டெல்லிக்கு திரும்பி வரவில்லை.

ஒளரங்கசீப் இல்லாதபோது டெல்லி பாழடைந்த நகரம் போல் காணப்பட்டது அரசரின் மாளிகை (தற்போதைய செங்கோட்டை) சரியாக பராமரிக்கப்பட்டாமல், குப்பையும் கூளமுமாக இருந்ததால், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகைதந்த முக்கிய பிரமுகர்களுக்கும்கூட செங்கோட்டை காட்டப்படாமல் தவிர்க்கப்பட்டது!

தென்னிந்தியாவில் இருக்கும்போது வட இந்தியாவில் இருந்தது போன்ற மாம்பழங்கள் கிடைக்கவில்லை என்று, தான் எழுதிய 'ருகாத்-ஏ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஔரங்கசீப். ஒளரங்கசீப்பின் இந்த புத்தகத்தை மொழிபெயர்த்தவர் ஜம்ஷீத் பிலிமோரியா.

பாபர் முதல் அனைத்து முகலாய பேரரசர்களுக்கும் மாம்பழம் மிகவும் விருப்பமான பழம். ஔரங்கசீப் தனது அதிகாரிகளுக்கு எழுதும் கடிதத்தில் வட இந்தியாவில் இருந்து மாம்பழங்களை அனுப்பவும் என்று உத்தரவிட்டு கடிதங்களை அனுப்புவார் என்று ஆண்ட்ரி ட்ரஷ்கே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சில மாம்பழங்களுக்கு சுதாரஸ், ரஸ்னபிலாஸ் போன்ற பெயர்களையும் சூட்டியிருக்கிறார் மாம்பழப் பிரியர் ஔரங்கசீப்.

தனது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் ஔரங்கசீப் தனது மனைவி உதய்புரியுடன் இருந்தார். உதய்புரி ஜோத்பூரை சேர்ந்தவர். இருவருக்கும் மிகவும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. இந்த தம்பதிகளின் மகன் தான் ஒளரங்கசீப்பின் கடைசி மகன் காம்பக்‌க்ஷ். உதய்புரி சிறந்த பாடகி. மரணப்படுக்கையில் இருந்தபோது, காம்பக்‌க்ஷ்க்கு ஒளரங்கசீப் எழுதிய கடிதத்தில், தான் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தன்னுடன் இருக்கும் உதய்புரி, தனது மரணத்தின்போதும் தன்னுடனே இருப்பார் என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டிருந்தார் ஒளரங்கசீப்.

ஒளரங்கசீப் மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே கணவன் மறைந்த சில மாதங்களிலேயே அதாவது 1707ஆம் ஆண்டில் கோடைக்காலத்தில் உதய்புரியும் இறந்தார். ஒளரங்கசீப்பின் கணக்கு எப்போதும் தப்பவேயில்லை என்பதற்கு இதுவொரு இறுதி உதாரணம்.

















ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?..

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாகத் தள்ளிப்போய் தற்போது மே 7-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது.
நவம்பர் மாதம் ‘விசுவாசம்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி, ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திரைக்கதை பணிகள் முடிவடையாததாலும், படக்குழுவினர் கன்ஃபார்ம் ஆகாததாலும் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஹீரோயினாக நயன்தாரா, இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமானார்கள்.
பிப்ரவரி 24-ம் தேதி ஷூட்டிங் எனக் கூறப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் சினிமா ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டது. மார்ச் 16 முதல் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டதால் ‘விசுவாசம்’ ஷூட்டிங் தொடங்கப்படவேயில்லை. மே 4-ம் தேதி ஷூட்டிங் என தகவல் வெளியான நிலையில் அதுவும் நடக்கவில்லை.
படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிடுவது சிரம் எனக் கூறப்படும் நிலையில், மே 7-ம் தேதி ஐதராபாத்தில் ‘விசுவாசம்’ ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதற்காக, இன்று அஜித் ஐதராபாத் புறப்பட்டுச் செல்கிறார். ஐதராபாத் ஷூட்டிங்குக்கு பிறகு மும்பையில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது.
அஜித் படத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட விஜய் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஆனால், விசுவாசம் படத்தைப் பற்றிய அப்டேட் எதையுமே சொல்லவில்லை என டைரக்டர் சிவா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.




இனி ஏமாற்றம் இல்லை.. 'விசுவாசம்' ஷூட்டிங் உறுதி.. ஐதராபாத் கிளம்பும் அஜித்!..

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com