HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 29 March 2021

 


தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தையும் தாண்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள திரைப்படம் தான் படையப்பா, முத்து, பாட்ஷா போன்ற ரஜினிகாந்த் படங்கள்..

என்னதான் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்தின் திரைக்கதை, ஸ்டைல் எல்லாம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் தான் படம் வேற லெவலில் ஓடியது. படையப்பா படத்தில் ரஜினியின் அப்பாவாக முதலில் நடிப்பதற்கு பல நடிகர்கள் தேர்வாகியுள்ளனர்.

அதில், ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக, நண்பனாக நடித்த விஜயகுமார் தேர்வாகியுள்ளார். ஆனால் விஜயகுமார் மற்றும் ரஜினி இவர்கள் இருவரும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி விட்டதால் மீண்டும் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டனர்.

பின்பு ரஜினியின் அப்பாவாக நடிக்க ஏதாவது ஒரு நடிகரை நடிக்க வைக்க வேண்டுமென கேஎஸ் ரவிக்குமார் முடிவு செய்துள்ளார். பின்பு கடைசியாகத்தான் சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என கே எஸ் ரவிக்குமார் முடிவு செய்து ரஜினியிடம் சம்மதம் பெற்றார்.

ஆனால் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிப்பதற்கு ஒரு பெரும் தொகையை லம்பாக கேட்டுள்ளார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் சிவாஜியின் சம்பள விஷயத்தை கூறியுள்ளார்.

அதற்கு ரஜினிகாந்த் சற்றும் யோசிக்காமல் சிவாஜி அவர்கள் கேட்ட பணத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் பணத்தின் முழு தொகையையும் கொடுத்து விடுங்க என கூறியுள்ளார்.

படமும் வெளிவந்தது சக்கை போடு போட்டது. அதில் சிவாஜி கணேசன் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார்.

படையப்பா படத்தில் நடிக்க சிவாஜி போட்ட கண்டிஷன்.. அசால்டா கூல் பண்ணிய சூப்பர் ஸ்டார்:-

Sunday 28 March 2021

 

 

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW

 


 

Biology of Allah & Dr. Dajjal's Biotechnology/Halal Money:-

Wednesday 24 March 2021

 


முதலில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிக்க இருந்ததும், அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் தான் ஆர்யா அந்த படத்தில் நடித்ததும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் எதனால் பாலா மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையில் சண்டை வந்தது என்பது நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கடைசியாக படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பாலாவுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை என்பதை குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நான் கடவுள் படத்தை பிஎல் தேனப்பன் என்ற தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருந்தாராம். அஜீத் மனைவி ஷாலினியுடன் அவருக்கு நல்ல நட்புறவு இருந்ததால் அதன் மூலம் அஜித் பழக்கமாகி குடும்பத்தில் ஒருவர் போல பழகி வந்தார்களாம்.

அதன் காரணமாக தல அஜித்தை வைத்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தை ஆரம்பித்தாராம். ஆனால் பாலா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யார் பேச்சையும் கேட்க மாட்டாராம். அவருக்கு என்ன தோணுதோ அதை செய்வாராம். இதன் காரணமாக இந்த தயாரிப்பாளருக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தருகிறேன் என காசிக்குச் சென்றவர் 21வது நாள் தான் முதல் காட்சியை படமாக்கினாராம்.

மேலும் நினைத்த நேரத்தில் அஜித்தை அழைத்து ஷூட் செய்தாராம். அதுமட்டுமில்லாமல் தல அஜித்திற்கு படப்பிடிப்பில் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை எனவும் அரசல் புரசலாக பேசியது தயாரிப்பாளர் காதில் விழுந்துள்ளது.

என்னால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கஷ்டப்படக் கூடாது என அஜீத் சொல்ல, என் இஷ்டத்திற்கு தான் படம் எடுப்பேன் என பாலா சொல்ல வந்தது பஞ்சாயத்து. இதன் காரணமாகவே அஜீத்திற்கும் பாலாவுக்கும் பிரச்சனை முற்றி அஜீத் அந்தப் படத்தில் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலா மீது அஜித்துக்கு கோபம் வரக் காரணம் இதுதானாம்.. நான் கடவுள் பஞ்சாயத்தை விளக்கிய தயாரிப்பாளர்:-

Saturday 20 March 2021

 



தற்போது முன்னணியில் இருக்கும் அஜித், விஜய்,  போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் முதல் நாள் கிட்டதட்ட 30 கோடி வரை வசூல் செய்து வருகிறது. இன்று கோடிகள் சாதாரணமாக இருந்தாலும் அன்றைய காலகட்டங்களில் ஒரு கோடி என்பது 100 கோடிக்கு சமம்.

வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 40 வருடமாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போதிலிருந்து இப்போது வரை ரஜினிகாந்த் படம் என்றாலே முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை படத்துக்குப்படம் நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக வெளியான தர்பார் படம் மட்டுமே ரஜினியின் கேரியரில் கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் அவர் அசர மாட்டார்.

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படம் டபுள் மடங்கு வசூல் செய்து விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள் வட்டாரங்கள். இது ஒருபுறமிருக்க, தமிழ் சினிமாவில் முதல் நாள் ஒரு கோடி வசூல் செய்த முதல் படம் ரஜினியின் ராஜாதி ராஜா தான்.

காமெடி நடிகர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ராஜாதி ராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படம்தான் தமிழ் சினிமாவில் முதல் நாள் ஒரு கோடி வசூலித்த முதல் படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

பக்கா கமர்சியல் படமாக உருவாகியிருந்த ராஜாதிராஜா திரைப்படம் ரஜினி கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. மேலும் தெலுங்கிலும் ராஜாதி ராஜா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியது.



முதல் நாள் ஒரு கோடி வசூல் செய்த முதல் படம் இதுதான்.. சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!:-

Thursday 18 March 2021

 


BIG BOSS 4 GABRIELLA CHARLTON CUTE IMAGES:-

https://e-funandjoyindia.blogspot.com/2021/03/bigg-boss-4-gabriella-charlton-cute.html?spref=tw 

 

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு ஓராண்டாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாததற்கான உண்மை காரணத்தை நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வந்ததாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களால் தற்போது இந்தியா வர முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதாக காஜல் தெரிவித்துள்ளார்.


‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாவதற்கு காரணம் இதுதான் - வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

Tuesday 16 March 2021

 


BIG BOSS 4 GABRIELLA CHARLTON CUTE IMAGES:-
https://e-funandjoyindia.blogspot.com/2021/03/bigg-boss-4-gabriella-charlton-cute.html?spref=tw


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல விஷயங்கள் காரணமாக தடைபட்டு வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதி பாபு கமிட்டாகி இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


3.7K
1.1K
Copy link to Tweet

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் இணைந்த வில்லன் நடிகர் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

 

 
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களுடைய சினிமா கேரியரில் ஒரு குறைந்தது ஒரு மோசமான தோல்வி படத்தையாவது கொடுத்திருப்பார்கள். அந்த வகையில் ரஜினிக்கு அமைந்த திரைப்படம்தான் பாபா.

2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபா. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம்.

பாபா படத்தின் கதை மற்றும் திரைக்கதை அனைத்தையும் ரஜினிகாந்த் தான் எழுதியிருந்தார். மேலும் அந்த படத்தை சொந்தமாகவும் தயாரித்தார். அதற்கு முன்னர் வெளியான ரஜினி படத்தின் வெற்றியை வைத்து பாபா படத்தின் வியாபாரம் முடிக்கப்பட்டது.

ஆனால் பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் பாபா படத்தைப் பற்றிய விவரத்தை கேட்டு தெரிந்துகொண்டு ரஜினி செய்த செயல்தான் இன்று வரை தமிழ் சினிமாவில் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடுவதற்கு காரணம் என தயாரிப்பாளர் ஆனந்த் L சுரேஷ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபா படத்தின் தோல்வியை விட தன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தூக்கத்தை தரவில்லையாம். இதனால் சம்பந்தப்பட்ட பெரியவர்களை அழைத்து பாபா படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு தோல்வி அடைந்தது என கேட்டு தெரிந்து கொண்டாராம்.

உடனே இரவோடு இரவாக அந்த லிஸ்டை ரெடி செய்து நஷ்டத்தை ஈடு கட்டாமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தோடு சேர்த்து தன்னுடைய சொந்த பணத்தை எடுத்து கொடுத்தாராம் ரஜினிகாந்த்.

சமீபகாலமாக சிறுபிள்ளை நடிகர்கள் இரண்டு படம் நடித்து விட்டாலே நான் தான் சூப்பர் ஸ்டார் என பீற்றிக்கொள்ளும் நிலையில் இவ்வளவு பெரிய உதவியை செய்துவிட்டு சத்தம் இல்லாமல் தன்னுடைய அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாராம் ரஜினி. அதனால்தான் இன்றுவரை தியேட்டர்காரர்கள் ரஜினி படங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்

பாபா படுதோல்விக்கு ரஜினி செய்த கைமாறு.. இன்றைக்கும் எந்த நடிகரும் யோசித்து கூட பார்க்க முடியாத உதவி:-

 
























BIGG BOSS 4 GABRIELLA CHARLTON CUTE IMAGES:-

Sunday 14 March 2021

 



தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே புதுமைகளை புகுத்தி பார்ப்பதில் மிகவும் முக்கியமானவர் கமலஹாசன். ஆண்டவர் என்று சும்மாவா சொல்கிறார்கள். வெளிநாடுகளில் எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை முதலில் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவருவதில் கில்லாடி இவர்.

அதுமட்டுமில்லாமல் பலரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சினிமா நுண்ணறிவுகளைக் கொண்டவர். தன்னுடைய படங்களில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்க வேண்டுமென மெனக்கெட்டு உருவாக்குபவர். இதனாலேயே கமல்ஹாசன் காலம் கடந்தும் போற்றப்படுகிறார்.

ஒரு சில சமயம் கமல் எடுக்கும் முயற்சிக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததுள்ளது. ஆனால் பல சமயம் அவருடைய புதிய முயற்சிகள் தோல்வியை சந்தித்தன. அந்த வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம் என்றால் ஆளவந்தான் திரைப்படம் தான்.

அன்றைய காலத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான திரைப்படம். மேலும் ரஜினிக்கு பாட்ஷாவை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தாலும் கதைக்கரு மற்றும் திரைக்கதை கமலுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்தும் பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் திரைப்படம் தோல்வி பெற்றதற்கு காரணமே அதனுடைய திரைக்கதை ஓட்டம் சரியாக அமையவில்லை என்பது தானாம். ஒரு படத்தின் கதைக்கரு சரியாக இருந்தாலும் அந்தக் கருவை எடுத்து செல்ல வேண்டிய திரைக்கதை சரியாக இருந்தால் மட்டுமே படம் ரசிகர்களை கவரும்.

ஆனால் அதை ஆளவந்தான் திரைப்படம் செய்ய தவறி விட்டதாம். இந்த படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று வியந்தாலும் பெரும்பாலும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் படம் புரியவில்லை என்பது தான் உண்மை கருத்தாக இருந்ததாம். மேலும் சலிப்படைய வைக்கும் திரைக்கதை படத்திற்கு மேலும் சோதனையை கொடுத்ததால் அன்றைய காலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படங்களில் முக்கிய இடத்தை பெற்றதாம் ஆளவந்தான். இதனை சித்ரா லட்சுமணன் என்ற பிரபலம் ஓப்பனாக கூறியுள்ளார்.


பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் படம் தோல்வியடைய காரணம் இதுதான்.. வெளிப்படையாக சொன்ன பிரபலம்:-

Wednesday 10 March 2021

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இன்று வரை பல இடங்களில் எந்திரன் படத்தின் வசூல் தான் டாப் இடத்தில் உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். எந்திரன் படத்தில் ரஜினிக்கு முன்பாக கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

1998 ஆம் ஆண்டு கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்த எந்திரன் படத்தின் போட்டோ சூட் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு காலதாமதமாகி கைவிடப்பட்டது. அதற்கு காரணம் என்ன என்பதை அந்தப் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய முத்து என்பவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்ததாம். மேலும் சங்கர் கொடுத்த பட்ஜெட்டை யோசித்து யோசித்து நாட்கள் கடத்திக் கொண்டிருந்தார்களாம். இதனால் கடுப்பான கமலஹாசன் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் எந்திரன் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டாராம்.

enthiran-kamal-cinemapettai

enthiran-kamal-e-fun&joy

அதன் பிறகுதான் இந்த படம் ரஜினிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு எந்திரன் படம் படைத்த சாதனை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் எந்திரன் படமும் மொத்தமாக கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது.

அதன்பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் எந்திரன் படத்தை கையில் எடுத்து பிரமாண்ட வெற்றிப் படமாக கொடுத்ததாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். ஒருவேளை எந்திரன் படத்தில் கமல் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையாக ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

எந்திரன் படத்திலிருந்து கமல் வெளியேற காரணம் இதுதான்.. இப்படி பண்ணா அப்புறம் யாரு தான் இருப்பாங்க?:-

Friday 5 March 2021

 


அரசியல் மற்றும் உடல்நிலை சர்ச்சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பாதியில் நிற்கும் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலரிடமும் ரஜினி கதை கேட்டு வருவதாக தெரிகிறது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முதல் வரிசையில் உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் அரசியல் இல்லை என்பதால், இனி வருடத்திற்கு 2 படம் நடிக்க வேண்டும் என உறுதி எடுத்துள்ளார். அதற்குத் தகுந்த மாதிரி சுறுசுறுப்பாக வேலை செய்யும் இளைஞர் கூட்டத்தை தேடிச் செல்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் சில விஷயங்களை தூக்கியாக வேண்டும் எனவும், இல்லையென்றால் அது தன்னுடைய மார்க்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கதைகூற வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குங்கள் எனவும், ஹீரோயின்களுடன் டூயட், பறந்து பறந்து போடும் சண்டைக் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினிக்கு கதை எழுதும் இயக்குனர்கள் அனைவருமே தற்போது அவரது வயதுக்கு ஏற்ப எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி வரும் ரஜினி படங்களில் கண்டிப்பாக ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் இருக்காது. மேலும் வயதுக்கு ஏற்ற ரொமான்ஸ் இருக்கும் என்கிறார்கள்.

இனிமேல் என் படத்தில் இந்த விஷயம் இருக்கக் கூடாது.. இயக்குனர்களுக்கு கட்டளையிட்ட ரஜினி:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com