HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 29 May 2021


கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க படாமல் இருப்பது வேதனைதான்.

மிக விரைவில் வேலையை முடிக்கும் இயக்குனர்களின் படங்கள் இப்படி தள்ளிக் கொண்டே போவது சரியில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இது ஒருபுறமிருக்க விக்ரம் படத்தில் யார் ஹீரோயின்? என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

முதலில் இதுவரை கமல்ஹாசனுடன் ஜோடி போடாத நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பேசிய நிலையில் தற்போது நயன்தாரா அந்த விஷயத்தில் கொஞ்சம் ஈடுபாடு காட்டாததால் பின்வாங்கியது படக்குழு.

மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை எனவும், உடன் நடிக்கும் நடிகை போலீஸ் அதிகாரியாக தான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர். இதன் காரணமாக தற்போது தன்னுடைய அப்பாவின் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் லோகேஷ் அது பற்றி ஸ்ருதி ஹாசனிடம் பேச உள்ளதாகவும் கூறுகின்றனர்.

shruthi-hassan-cinemapettai

நயன்தாரா வேண்டாம், இவரே போதும்.. கமலின் விக்ரம் பட நாயகி ரெடி:-

Wednesday 26 May 2021




லூத்யுடைய சமுதாய மக்கள் பின்பற்றிய கலச்சாரத்தை பின்பற்றிகிறதா?இன்றைய நவீன உலகம்?நிழல் உலகம் மனித இனத்தின்மேல் தொடுத்திருக்கும் மறைமுகப் போர்:-https://e-funandjoyindia.blogspot.com/2021/05/blog-post_24.html

Please watch this Video without fail.



மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தனது குருநாதர் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தில் பணியாற்றி வருகிறார். விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து விருவிருப்பாக படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில்தான் தேர்தல் என படத்தின் படப்பிடிப்பை தள்ளிப் போட்டார்.

தற்போது தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு படத்தை ஆரம்பிக்கலாம் என்ற நேரத்தில் கொரானா பிரச்சனை தலை தூக்கியுள்ளது. இதனால் ஏற்கனவே படத்தை ஆரம்பிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் பெரிய அடி கொடுக்கும் வகையில் அவரது நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரிய ஒளிப்பதிவாளருமான சத்யன் சூரியன் என்பவர் இந்த படத்திலிருந்து விலகி விட்டாராம்.

லோகேஷின் மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்திலும் இவரது ஒளிப்பதிவு அனைவரையும் கவர்ந்தது.

இதனால் தற்போது கிரீஸ் கங்காதரன் என்பவரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாம் விக்ரம் பட குழு. ஏற்கனவே கமல், லோகேஷ் கனகராஜ் கதையில் மாற்றங்கள் சொன்னதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது நெருங்கிய டெக்னிசியன்களும் படத்திலிருந்து விலகுவது விக்ரம் படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது.

கமலின் விக்ரம் படத்தில் முதல் விக்கெட் அவுட்.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்:-

Monday 24 May 2021

 


 

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


 

லூத் நபியுடைய சமுதாய மக்கள் பின்பற்றிய கலச்சாரத்தை பின்பற்றிகிறதா?இன்றைய நவீன உலகம்?நிழல் உலகம் மனித இனத்தின்மேல் தொடுத்திருக்கும் மறைமுகப் போர்:-

Sunday 23 May 2021

 

 
 
பாய் உண்மையாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன்.தாய் தன் பிள்ளையை காணாமல் தவித்ததைப்போன்ற ஒரு உணர்வு....சந்தோஷம் அல்ஹம்துலில்லாஹ்..... தொடர்ந்து உங்கள் மார்க்க சொற்பொழிவினால் வரும் நாட்களில் சிந்திக்க மற்றும் செயலாற்ற நம் எல்லோருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்...
 

allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


 

அல்லாஹ்வின் கோபத்தால் மீனின் வயிற்றில் இன்றைய முஸ்லீம் சமுதாயம் |M.K.முஸ்தபா | அறிவால் அறிவோம்:-

Thursday 20 May 2021

 



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பறை பெற்று வருகின்றன.

ரஜினி ரசிகர்கள் அனைவரும் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து தற்போது தான் முடிவடைந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் எப்போதும் யாருக்கும் பயப்படாமல் தனது மனதில் பட்டதை பேசக்கூடிய நடிகர் கவுண்டமணி. ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி நடிப்பில் உருவான திரைப்படம் மன்னன்.

இப்படத்தின் போது கவுண்டமணி பலமுறை ரஜினிகாந்த் வாயா போயா என அழைத்துள்ளார். அதற்கு இயக்குனர் பி வாசு கவுண்டமணியை அழைத்து நீங்கள் என்ன ரஜினிகாந்த் வாயா போயா என அழைக்கிறீர்கள் இதனை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரஜினிகாந்த் கவுண்டமணி என்னை என்ன வேணாலும் சொல்லி கூப்பிடலாம். அவர் என்னை வாயா போயா என்று கூப்பிட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி என்னுடைய நண்பன் எனவும் கூறியுள்ளார்.

ரஜினியை வாயா, போயா என அழைத்த பிரபலம்.. திட்டிய இயக்குனர் பி வாசு-க்கு ரஜினி கூறிய பதில்!:-

Wednesday 19 May 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.

             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



 

துருக்கியும் மிகப்பெரிய போரும்- Turkey and The great war-தமிழில் / Sheik imran huession:-

Friday 14 May 2021

 



மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர்.


இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்


 மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. இப்படி ஒரு நிலையில் பத்மபிரியா நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த அவர், அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என்று கூறியுள்ளார்.



இப்படி ஒரு நிலையில் கமலுக்கு அரசியல் செட் ஆகவில்லை என்று திரௌபதி பட இயக்குனர் மோகன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கமலஹாசன் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை என்று கூறியுள்ளார்.




கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும் – கமலுக்கு மோகன் கொடுத்த டிப். (ஆண்டவருக்கே அட்வைஸா):-

Tuesday 11 May 2021


 ரஜினி என்ற பின்புலம் இல்லாமலேயே தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் வெற்றி பெற்றவர் தான் தனுஷ். இவர் நடிப்புக்கு என்று கோலிவுட்டில்  ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த்அண்ணாத்த படத்தின் அவரது காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று வந்துள்ளார்.

சென்னை வந்த ரஜினிகாந்த் அடுத்த நாளே அமெரிக்கா செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் தன்னுடைய மகளையும், பேரன்களையும் பார்க்க வேண்டும் என்பதற்காக சென்றுள்ளார். அந்த அளவிற்கு தனுஷ் பாசத்தால் கட்டி போட்டுள்ளாராம். தனுஷ் அவெஞ்சர்ஸ் பட இயக்குனருடன் ஒரு படத்தில் அமெரிக்காவில் நடித்து வருகிறார். அதனால் தனுஷூம் குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த் அமெரிக்கா வருவதைஅறிந்த தனுஷ் எதற்காக நீங்கள் வருகிறீர்கள் இன்னும் சிறிது நாட்கள் நாங்களே வந்து விடுவோம் எனக் கூறியுள்ளார்.

இருந்தாலும் மனம் கேட்காமல் நான் உங்களையும் பார்க்க வருகிறேன் அப்படியே என்னுடைய உடல் நலத்திற்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளத்தான் வருகிறேன் என கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரை இந்த ஒரு விஷயத்தில் கட்டிப்போட்ட தனுஷ்.. காரணம் கேட்டு ஷாக்கான கோலிவுட்:-

Sunday 9 May 2021




Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.

             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW


 

 

Masjid Al Aqsa- மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசல் மீது நேற்று யூதர்கள்(YAJUJ and MAJUJ) தாக்கியது ஏன் ?

Tuesday 4 May 2021

 




தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என தொடர்ந்து கூறி வருகின்றனர். அதை நம்பி வாய்ப்பு கொடுத்த சில படங்கள் ரஜினியின் கையை கடித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியின் காட்சிகள் மொத்தமும் முடிவடைய உள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மேலும் சில படங்கள் தொடர்ந்து நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளார் ரஜினி இளம் இயக்குநர்களை மட்டும் பரிந்துரை செய்து வருகிறாராம். முன்னணி இயக்குனர்களை எதற்கும் பத்தடி தள்ளியே வைத்து வருகிறார்.

அதற்கு காரணம் சமீபத்தில் முருகதாசை நம்பி தர்பார் பட வாய்ப்பைக் கொடுத்ததுதானாம். விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் பல பஞ்சாயத்துகளில் சிக்கியது தர்பார் படத்தின் மூலம்தான்.

அதுமட்டுமில்லாமல் தர்பார் படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதன் காரணமாக இனி முருகதாஸ் என்னதான் என்னுடைய ரசிகராக இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பதை மட்டும் சொல்லி விடுங்கள் என தன்னுடைய வட்டாரங்களில் கூறிவிட்டாராம் ரஜினி.


இனிமேல் அவருக்கு மட்டும் வாய்ப்பே கிடையாது.. பிரபல இயக்குனர் மீது செம கடுப்பில் ரஜினிகாந்த்:-

Saturday 1 May 2021

 



நடிகர் அஜித் தமிழ் சினிமாவிற்கு எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவர். ஆரம்ப கட்டத்தில் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை, பிரச்சனைகள் இல்லை.

அந்த நேரங்களில் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு எழுந்து வந்தார். இப்போது உச்சத்தை தொட்டு வெற்றிநடைபோட்டு வருகிறார்.

சினிமா மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் தனது முழு ஈடுபாட்டை காட்டி வருகிறார். சமையல், போட்டோ கிராபி, ஓவியம் வரைதல், துப்பாக்கி சுடுதல், தோட்டம் அமைப்பது என நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று அவருக்கு பிறந்தநாள், நேற்று முதல் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. 



சரி இதுவரை வாழ்த்து கூறியுள்ள பிரபலங்கள் யார் யார் என்ற விவரத்தை பார்ப்போம்.

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நடிகர் அஜித்- நயன்தாரா முதல், யாரெல்லாம் வாழ்த்து கூறியிருக்கிறார்கள் பாருங்க #Ajith #HBDThalaAjith

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com