HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 30 September 2020

 தஜ்ஜால் தொடர்.


இஸ்ராயில் மக்களும் (யூதர்கள்) ஜெருசலமும்





எகிப்து நாட்டில்  இஸ்ராயில் மக்கள் பிர்அவ்னால் கொடுமை செய்யப்பட்டதும் நபி மூஸா(அலை) அவர்கள் தலைமையில் அவர்கள் தப்பி சென்றதும் செல்லும் வழியில் செங்கடலை இறைவனின் அற்புதத்தால் மூஸா நபி பிளந்து முன்னேறியதும் பிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.

இஸ்ராயில் மக்கள் புனித நகரமான ஜெருசலத்திற்கு அருகில் கரையேறுகிறார்கள்.ஜெருசலத்திற்குள் நுழையுமாறு (போரிடுமாறு)மூஸா நபி ஆணையிட்ட போது இஸ்ராயில் மக்கள் புறக்கணித்தனர். விளைவு மூஸா நபி உட்பட அனைத்து இஸ்ராயில்களுக்கும் நாற்பது ஆண்டுகளுக்கு புனித நகரம் இறைவனால் தடை செய்யப்பட்டது. மூஸா நபி நகருக்குள் நுழையாமலேயே மரணித்தார்.

தடை காலத்திற்கு பின் இஸ்ராயில்கள் புனித நகருக்குள் செல்ல(போரிட) முடிவு செய்து அன்றைய இறை தூதரிடம்(பெயர் தெரியவில்லை) தங்களுக்கு மன்னரை நியமிக்க கோரினர்.அந்த தூதர் தாலுத் என்பவரை மன்னராக நியமித்தார்.இந்த தாலுத் என்பவரின் படையில் ஒரு சாதாரண வீரராக இருந்தவர்தான் நபி தாவூத் (அலை) அவர்கள்..அப்போது அவர் இறை தூதரும் இல்லை.

போரில் தாவூத் தீயவர்களின் தலைவன் ஜாலுத்தை கொன்றார்(பைபிளில் David and Goliath யுத்தம் விரிவாக இருக்கும்) புனித நகரம், இஸ்ராயில் மக்கள் கைகளில் வந்தது.

நாளடைவில் தாவூத் இறைதூதராகவும் பின் ஜெருசலத்திலன்(முதல் இஸ்லாமிய கிலாபத்தின்) கலீபாவாகவும் இறைவனால் நியமிக்கப்பட்டார்..
இவருக்கு பின் இவரின் மகன் நபி சுலைமான் இறைதூதராகவும் கலீபாவாகவும் தொடர்ந்தார்.

உலக வல்லரசாக ஜெருசலத்தின் உச்சமும்   பின் அதன் வீழ்ச்சியும்

நபி தாவூத் (அலை) அவர்களுக்குப்பின் அவரின் மகன் நபி சுலைமான்(அலை) அவர்கள் புனித நகரத்தின் ஆட்சியாளரானார். இவருடைய காலத்தில் இஸ்ராயில் அரசு படை பலத்திலும் செல்வ வளத்திலும் மனித வளத்திலும் உலகின் முதன்மை அரசாக விளங்கியது.

மேலும் நபி சுலைமான் அவர்களுக்கு ஜின்கள்,பறவைகள், காற்று ஆகியவற்றின் மீதும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அறிவும் ஆற்றலும் கொண்ட அரசர் வளமான ஆட்சி இவற்றின் காரணமாக இஸ்ராயில் பேரரசு அன்றைய தினத்தில் உலக பேரரசாக எழுச்சி பெற்றது.ஜெருசலம் நகரில் அல்- அஃஸா(பைத்துல் முகத்தஸ்) பள்ளிவாசலும் கட்டப்பெற்றது.

உச்சம் தொட்ட பின் அடுத்தது வீழ்ச்சி என்பது தான் வரலாற்றின் அடிப்படை.

நபி சுலைமான் அவர்களுக்கு பின் இஸ்ராயில் மக்கள் இறை சட்டத்தை தங்கள் கைகளால் திருத்தினர் அதன் விளைவாக இறைவனின் தண்டனையை பெற்றனர்.

பாபிலோனிய பேரரசர் நெபுகட் நேசர் ஜெருசலத்தின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார்.பல இஸ்ராயில் மக்கள் கொல்லப்பட்டனர். பள்ளிவாசலும் தரைமட்டமாக்கப்பட்டது.

உயிர் பிழைத்தவர்கள் பாபிலோனியாவிற்கு (ஈராக்) அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர். கொடும் சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

மஸீஃ(Messiah) (நபி ஈஸா அலை) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பும் இஸ்ராயில்கள் ஜெருசலம் திரும்புதலும்

பாபிலோனியாவில் அடிமைகளாக  பெருங்கொடுமைகளை இஸ்ராயில்கள் அனுபவிக்கையில் தாங்கள் இறைசட்டத்தை திருத்திய மாபெரும் குற்றச்செயலுக்கு வருந்தி  இறைவனிடம் தவ்பா செய்யலானார்கள். இதன் விளைவாக இறைவன் ஒரு நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தான்.

இஸ்ராயில் மக்களுக்கான அப்போதைய தூதர் நபி உஜைர்(அலை) அவர்களின் வாயிலாக இறைவன் அம்மக்களுக்கு ஒரு நற்செய்தியை முன்னறிவிப்பாக அறிவிக்கிறான். அந்த செய்தி என்னவென்றால் மீண்டும் இஸ்ராயிலின் மக்களை பொற்கால ஆட்சிக்கு அழைத்து செல்லும் ஒரு தூதர்(மீட்பர்)
அவர்களிடம் வருவார் அவர் சுலைமான் நபி அவர்களின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவார் என்பதாகும்.

அந்த மீட்பர் யார்?-நபி ஈஸா (அலை) அவர்கள்

இந்த நற்செய்தி அடிமைகளாக இருந்த இஸ்ராயில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்நிலையில் தான் பாபிலோனியாவின் மீது பெர்சிய மன்னர் Cyrus the great தாக்குதல் தொடுக்கிறார்.

யார் இந்த Cyrus?-இவர்தான் குர்ஆனில் குறிப்பிடப்படும் துல்கரனைன் மன்னர்.இவர்தான் யஃஜூஜ் மஃஜூஜை சிறை பிடித்தவர்.

பாபிலோனியாவை வென்ற துல்கரனைன் இஸ்ராயில் மக்களை மீண்டும் ஜெருசலத்தில் குடியேற அனுமதிக்கிறார் மேலும் அல்-அஃஸா பள்ளியை இரண்டாம் முறையாக (second temple)கட்டுவதற்கு உதவி புரிகிறார்

இஸ்ராயில்கள் ஜெருசலத்தில் வாழ்ந்தாலும் முதலில் பெர்சியர்களுக்கும் பிறகு ரோமானியர்களுக்கும் கட்டுபட்டு வாழ்ந்தார்கள்.

பல நூற்றாண்டுகளாக அடிமைகளாகவும் மற்றவரின் அதிகாரத்தின் கீழும் வாழ்ந்த இஸ்ராயில் மக்கள் விடுதலைக்கும் அதை பெற்று தரும் மீட்பரான இறை தூதருக்காகவும் காத்திருந்தனர்.

மீட்பரின் வருகையும் இஸ்ராயில்களின் புறக்கணிப்பும்.

மிக நீண்ட காலமாக இஸ்ராயில் மக்கள் எதிர்பார்த்த  மீட்பர்  அவர்களிடம் வந்த போது அம்மக்கள் மீட்பரை புறக்கணித்தனர்.

காரணம் மீட்பரின் (நபி ஈஸா அலை அவர்களின்) அதிசய பிறப்பை அவர்கள் அசிங்கமாகவும் அவமானமாகவும் கருதினர்.மேலும் மீட்பரின் தாய் மீதும் கேவலமான பழியை சுமத்தினர்.

பிறக்கும் போதே தூதராக பிறந்தும் பிறந்த குழந்தையாக இருந்த போதே பேசிய போதும் அதன் பின்னர் பல அதிசயங்களை செய்த பின்னரும் அவரை மக்கள் ஏற்கவில்லை.

ஈஸா நபியின் சம காலத்தில் வாழ்ந்த யஹ்யா நபி சான்றளித்தும் பெரும்பாலோர் மீட்பரை ஏற்க மறுத்தனர்.

ஈஸா நபியின் மார்க்கம் சார்ந்த நடவடிக்கைகள்  அங்கு வாழ்ந்த யூத பாதிரிகளுக்கு எதிராக இருந்ததால் மீட்பரை அவர்கள் வெறுத்ததுடன் அவரை தீர்த்திடவும் முடிவு செய்தனர்.

ஈஸா நபியை நம்பிய குறைவான மக்களே பிற்காலத்தில் நஸ்ரானிகளாகவும்(Christian) நம்பாதவர்கள் யகூதிகளாகவும்(Jews)அறியப்பட்டனர்.

மீட்பரின் மீது வெறுப்பு கொண்ட யூத பாதிரிகள் ரோமானிய அரசிடம் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மீட்பர் ஈடுபடுவதாகவும் பண்டைய மதங்களை நாசம் செய்வதாகவும் புகாரளித்தனர்.

புகார் ஏற்கப்பட்டு ஈஸா நபிக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது போன்ற காட்சி அவர்களுக்கு காட்டப்பட யூதர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.

தங்களின் நம்பிக்கை சரியானது.இவர் மீட்பரில்லை.மீட்பராக இருந்திருந்தால்  சுலைமான் நபியின் பொற்கால ஆட்சியை இவர் வழங்கியிருக்க வேண்டுமே என்று கூறினர்

பொற்கால ஆட்சியை கொண்டு வர முடியாமல் ஈஸா மரணித்ததால்(மரணித்ததாக யூதர்கள் நம்புகின்றனர்)அவர் மீட்பர் இல்லை என்பதில் அவர்களுடைய நம்பிக்கை மேலும் வலுவானது.

உண்மையான மீட்பரை புறக்கணித்த அவர்கள் இன்றளவும்(10.08.2020) மடத்தனமாக மீட்பரை எதிர்நோக்குகின்றனர்.

அந்த முட்டாள்தனத்திற்காக யூதர்களுக்கு கிடைக்க உள்ள பரிசு தான் -தஜ்ஜால்........

இஸ்ராயில் மக்களின் குற்றங்களும்  பெற்ற இறை தண்டனைகளும் சுருக்கமாக

நபி மூஸா (அலை) அவர்களின் கட்டளையை புறக்கணித்ததால் 40 ஆண்டுகள் நாடோடிகளாக திரிந்தனர்.

சுலைமான் நபிக்கு பின் இறை சட்டத்தை திருத்தியதால் பாபிலோனிய படையால் அழிக்கப்பட்டு புனித நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இம்முறை 100 ஆண்டுகளுக்கு புனித நகரம் தடை செய்யப்பட்டது

மீட்பரான ஈஸா நபிக்கு எதிராக அவர்கள் செய்த மாபெரும் குற்றத்திற்கு மாபெரும் இறை தண்டனை வழங்கப்பட்டது. ரோமானிய படைகளால் துவம்சம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் இம்முறை புனித நகரம் இஸ்ராயில் களுக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டது.

இத்தடை நீங்க இஸ்ராயில்களுக்கு இரு வழிகள் உண்டு

1.நீதமான இறுதி தூதரான நபி முகம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்டு பாவங்களை கழுவி புனித நகர் திரும்புதல்

2.தஜ்ஜாலின் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் துணையுடன் தங்களின் தீமைகளுடனேயே மீண்டும் புனித நகருக்கு திரும்புதல்.

இஸ்ராயில்கள் இரண்டாவது வழியை தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்

தீமைகளுடன் திரும்பினால்(திரும்பியுள்ளதால்) மீண்டும் இறை தண்டனை பெற வேண்டும் (பெற உள்ளனர்).

முதல்முறை பாபிலோனிய படையால் அழிக்கப்பட்டனர்

இரண்டாம் முறை ரோமானிய படையால்

மூன்றாம் முறை குரசான் பகுதி(வடமேற்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கான்) முஸ்லீம்கள் படையால் அழிக்கப்பட உள்ளனர்.

அடுத்த பதிவில் தஜ்ஜாலின் மிக முக்கிய பணிகளையும் லட்சியங்களையும் காணலாம்.


தஜ்ஜால் தொடர்-பதிவு-2 &3, தஜ்ஜாலின் பணிகள், இன்றளவும் ஒரு இறைதூதருக்காக, மீட்பருக்காக காத்திருக்கும் இஸ்ராயில் மக்கள். ஹதிஸின் குறியீட்டு சொற்களும் விளக்கமும்....:- https://e-funandjoyindia.blogspot.com/2020/10/2.html

தஜ்ஜால் தொடர்.பதிவு- 1:- இஸ்ராயில் மக்களும் (யூதர்கள்) ஜெருசலமும்...

Tuesday 29 September 2020



மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தான் படம் எடுக்க போகிறார் என அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது.
இப்படத்தின் அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. இந்த போஸ்டரில்Once upon a time there lived a ghostஎன பதிவிட்டு,கமல் ஹாசன் 232என்று ஒர்கிங் டைட்டில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வருகிறது. 
கமல் ஹாசனின் 60 வருட நிறைவு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கமல் ஹசனிடம் கேட்ப்பார். அதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறுகின்றனர்.
மேலும் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் வில்லன் இவர் தான்? ருசிகர தகவல்

Monday 28 September 2020

 தஜ்ஜால் தொடர்- பதிவு- 7

தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
தஜ்ஜால் தீவு - பிரிட்டிஷ் (GREAT BRITAIN)




நேற்றைய தினம் பிரிட்டிஷ் உடன் கைக்கோர்த்த அரபு துரோகிகள் குறித்து பார்த்தோம்.இன்றைய பதிவில் துருக்கிய துரோகிகளை பார்ப்போம்.
ஒரு பேரரசை அழிப்பது முக்கியம் என்றால் மீண்டும் அதை உருவாகாமல் பார்த்துக் கொள்வது அதை விட முக்கியம்.எனவே அரபுகளில் மட்டும் துரோகியை ஏற்படுத்துவது போதாது.கோபம் கொண்ட துருக்கியர்கள் பார்வை மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்தும் பாதையிலோ அல்லது அரபு பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கும் பாதையிலோ செல்லாமல் இருப்பதற்கு ,தங்கள் துரோகியை வைத்து துருக்கிய தேசிய இனவெறியை பரப்பியது.
அந்த துரோகியின் பெயர் தான் முஸ்தபா கமால் பாட்ஷா.
முதலாம் உலகப்போரில் பல பகுதிகளை இழந்த உத்மானிய அரசின் தலைநகரான கான்ஸ்டான்டி நோபிளை நோக்கி ரஷ்யப்படைகள் முன்னேறின.
ரஷ்யா,பிரிட்டிஷ் உடன் கூட்டு வைத்திருந்த போதும் ரஷ்யாவின் வெற்றியை பிரிட்டிஷ் விரும்பவில்லை.
இந்த ரஷ்யாவின் தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில் கிரிஸ் உத்மானிய பேரரசின் இதய பகுதியான அனடோலியாவை தாக்கியது.
தோல்வி உறுதி என்ற நிலையில் மிகுந்த அச்சத்துடன் அடிமை வாழ்வை எதிர்நோக்கி துருக்கி மக்கள் இருந்த நிலையில், கலிபோலி என்ற இடத்தில் முஸ்தபா கமால் தலைமையிலான ராணுவ பிரிவு ரஷ்ய கூட்டுப்படைகளை தோற்கடித்தது.பின்பு கிரிஸ் படையையும் தோற்கடித்தது.பிரிட்டிஷ் அமைத்து கொடுத்த வியூகத்தால்.
இந்த வெற்றியால் முஸ்தபா கமால் மிகவும் பிரபலமானான்.நாளடைவில் கலிபா ஓரம்கட்டப்பட்டு தேசத்தின் தலைவராக முஸ்தபா உருவெடுத்தான்.
இவன் காலத்தில் தான் துருக்கிய மொழிவெறி ஊட்டப்பட்டது.எந்த அளவிற்கு என்றால் தொழுகை,அதற்கான அழைப்பும் கூட (அஜான்) துருக்கிய மொழியில் இருந்தது.
துருக்கிய நாடும் மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.கிலாபத் கலைக்கப்பட்டது.
இந்த முஸ்தபா கமால் என்பவன் முஸ்லிம் அல்ல என்பது தான் பலரும் அறியாத ஒன்று.
துருக்கி பகுதியில் தன்னை வெளியே இஸ்லாமியனாக காட்டிக்கொண்டு உள்ளூர யூத சடங்குகள் செய்யும் டான்மே(DONMEH) பிரிவை சார்ந்தவன்.
எப்படியோ கிலாபத்தை கலைத்த பிரிட்டிஷ், அது மறு உருவாக்கம் ஆகாமலும் பார்த்துக்கொண்டது.
புனித நகரான ஜெருசலத்தின் விடுதலையில் பிரிட்டிஷ் பங்கெடுக்க அந்நாட்டு யூத முதலாளிகள் அரசின் மீது கொடுத்த அழுத்தத்தையும் பதிவில் காணலாம்.மேலும் தமீம் ஹதிஸில் உள்ள சில குறியீடுகளுக்கான விளக்கத்தை அளித்து தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கத்தையும் நிறைவு செய்யலாம்.
தஜ்ஜால் தீவும்(பிரிட்டிஷ்) அதன் பால்போர் பிரகடனமும்.
பால்போர் பிரகடனம் என்பது ஜெருசலம் நகரத்தில் ஐரோப்பிய யூதர்களை குடியேற்றம் செய்வது தொடர்பானதாகும்.
இங்கிலாந்து அரசானது, இந்த பிரகடனத்தை ஒரு தபால் வடிவத்தில், பிரிட்டிஷ் ஜியோனிச சபையின் தலைவரான ரோத்சைல்ட் இடம் சமர்பிக்கிறது.
ஜியோனிஸட் அமைப்பு என்பது யாது?
ஜியோனிஸ்ட் அமைப்பை பற்றி வரும் தொடர்களில் விரிவாக காணலாம்.
யார் இந்த ரோத் சைலட்?
இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளில் மிக அதிக முதலீடுகளை பெற்றிருந்த நிதியியல் சார்ந்த வணிகன்.
இவனை பற்றிய மேலதிக தகவலை வரும் தொடர்களில் காணலாம்.
பிரிட்டிஷ் புனித நகரை கைப்பற்றியதில் ஜியோனிஸ்ட்கள் பங்கு என்ன?
கடற்படைகளின் ராணி என்று அறியப்பட்ட பிரிட்டிஷ் அதன் ஆயுத கப்பல்களை,முதலாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பலி கொடுத்தது.இந்த தாக்குதலில் ஏற்பட்ட பேரிழப்புகளால் போரில் பிரிட்டிஷ் படையினருக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்பட்டது.ஆனால் அமெரிக்காவோ போரில் ஆர்வமற்று இருந்தது.இந்த சூழலில் தான் பிரிட்டிஷ் ஜியோனிஸிட் அமைப்பு பிரிட்டிஷ் அரசை சந்தித்து ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.அந்த ஒப்பந்தம் என்னவென்றால் நாங்கள் அமெரிக்காவை உங்களுக்கு உதவியாக போருக்கு கொண்டு வந்தால் அதற்கு பிரதிபலனாக நீங்கள் புனித நகரை மீட்டு ஐரோப்பிய யூதர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகும்.
அமெரிக்க சியோனிச அமைப்பின் மூலமாக அமெரிக்காவை போருக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஜியோனிச அமைப்பு.இதற்கு பலனாக பால்போர் பிரகடனத்தை பெற்றனர்.ஐரோப்பிய யூதர்களை புனித நகரில் குடியேற்றினர்.
பிரிட்டிஷ் அரசும் பிரிட்டிஷ் ஜியோனிச முதலாளிகளும் புனித நகரை கைப்பற்றியதன் வரலாற்று நிகழ்வுகளையும் தஜ்ஜாலின் பணிகளையும் நாம் இணைக்கும் போது தமீம் சென்ற தீவு பிரிட்டிஷ் தான் என்ற அனுமானம் கூடுதல் உறுதி பெறுகிறது.
ஒரு வருட காலம் போன்ற நீண்ட முதல் நாளில் , தஜ்ஜால் பிரிட்டனை தலைமையிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று பதிவு எண் - 2 ல் பதிவிட்டிருந்தேன். அதற்கான விளக்கத்தை பிறகு அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கான விளக்கத்தை கடந்த சில பதிவுகளில் மிக நீளமாக விளக்கியுள்ளேன்.
இந்த தமீம் ஹதிஸில் தீவானது ஜஸ்ஸாஜாவை கொண்டிருந்ததும் தஜ்ஜால் பாழடைந்த தேவலாயத்தில் இருப்பதும் விளக்கப்பட்டிருக்கும்.இதற்கு சில மார்க்க அறிஞர்கள் கீழ்க்காணுமாறும் விளக்கமளிக்கிறார்கள்.
ஜஸ்ஸாஜா என்பதன் பொருள் உளவாளி.
பாழடைந்த தேவலாயம் என்பது அந்த தீவில் மதம் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்காது என்பதற்கான குறியீடு.
மேற்காணும் தெளிவுகளின் படி, உளவு பார்ப்பதில் மிகுந்த பரிட்சயம் பெற்ற மதம் சார்ந்த கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லாத மதச்சார்பற்ற அரசை கொண்ட ஒரு தீவு தான் தமீம் சென்ற தீவு என்றும் இந்த வரையரைகளின் கீழ் வரும் தீவு பிரிட்டிஷ் தான் என்றும் விளக்குகிறார்கள்.
தமிமூத்தாரீ ஹதிஸ் தொடர்பான விளக்கம் இன்றுடன் நிறைவடைகிறது.
நாளைய பதிவிலிருந்து தஜ்ஜாலின் அடியாட்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) பற்றி விரிவாக காணலாம்.


தஜ்ஜால் தொடர்- பதிவு- 6 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்:- உத்மானிய பேரரசு முதலாம் உலகப்போரில் வீழ்ச்சியடைந்தது.:- https://e-funandjoyindia.blogspot.com/2020/09/6.html?spref=tw

தஜ்ஜால் தொடர்- பதிவு- 7 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம் தஜ்ஜால் அடைக்கப்பட்டு இருந்த தீவு - பிரிட்டிஷ் இங்கிலாந்து (GREAT BRITAIN)

Saturday 26 September 2020

 தஜ்ஜால் தொடர்- பதிவு- 6

தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்




கடந்த பதிவில் தமீம் சென்றடைய சாத்தியமான மூன்று கடல்கள் எவை என்று பார்த்தோம்.இந்த மூன்று கடலில் சரியான கடலை தேர்வு செய்வதும் அந்த கடலில் எந்த தீவு என்று ஆய்வதும் மிக கடினமான செயல்.ஆகவே மிகவும் சரியாக அந்த தீவை இனம் காண்பது என்பது மிக கடினம் என்றாலும் தோராயமாக நம்மால் அனுமானிக்க முடியும்.அந்த அனுமானிப்பு சரியாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு தவறாக இருப்பதற்கும் இரு மடங்கு வாய்ப்புண்டு.
நம்மிடம் உள்ள ஒரே clue (வாய்ப்பு) என்பது ஒரு மாத கால புயலும் அலை கழிப்பும்(மாறுபட்ட திசைகளில் பயணம்)
புயல் எப்போது வீசியது?பயணத்தின் தொடக்கத்திலா?முடிவிலா?முடித்து திரும்பும் போதோ?பதில் ஹதிஸில் இல்லை.
புயல் முடிந்த்தும் எந்த திசையை நோக்கி நகர்ந்து தாயகம் திரும்பினர்?பதில் இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே தெளிவு ஒரு மாத கால புயலும் பயணமும்.
எனவே நாம் கடல் காற்றின் திசைகளையும் புயல் ஏற்படும் கால அளவுகளையும் வைத்து ஓர் அளவிற்கு எந்த தீவு என்று அனுமானிக்கலாம்.
தமீம் பயணம் தொடங்கிய மத்திய தரை கடலின் கிழக்கு பகுதியில் (லேவண்ட் கடல்,அயனியோன் கடல்) பொதுவாக புயல்கள் ஏற்படுவதில்லை அரிதாக ஏற்பட்டாலும் வீசும் காற்றானது சீராக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வேகமாக வீசும் எனவே திசைமாறும் அலைகழிப்புக்கு இங்கு வேலையில்லை.
மத்திய தரைகடலின் மேற்கு பகுதிகள்(பேலிரிக் கடல்,தைரானியன் கடல்) கடுமையான புயல்களை ஏற்படுத்தும் பகுதி.இப்பகுதியில் காற்று கிழக்கிலிருந்து மேற்காகவும் ,மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கியும் என்று திசை மாறி மாறி வீசும்.இப்பகுதியில் தமீம் கப்பல் சிக்கியிருக்கலாம்.(அனுமானம் தான்)
இப்பகுதியில் சிக்கும் கப்பல் (ஒரு மாத காலத்தில்) இதன் மேற்கு நோக்கிய புயல் காற்றின் காரணமாக ஜிப்ரால்டர் நீரிணையின் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்திருக்கலாம்.
பொதுவாக கடலில் புயல்காலம் என்பது ஐந்து அல்லது ஆறு நாட்களில் முடிந்துவிடும்.ஒரு மாத கால தத்தளிப்பு என்றால் அடுத்தடுத்து இவர்கள் புயலில் சிக்கியிருக்க வேண்டும்.
மத்திய தரை கடலிலும் அட்லாண்டிக் கடலிலும் புயல்கள் ஒரே காலக்கட்டத்தில் ஏற்படும்.அப்படியென்றால் மத்திய தரை கடலில் இருந்து அட்லாண்டிக் கடலில் நுழையும் போதும் புயல் காற்றின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.
அட்லாண்டிக் புயல்காற்று என்பது மேற்கில் மையம் கொண்டு வடக்கிலிருந்து வடமேற்கு வரையிலும் வீசும் காற்றாகும்.
ஜிப்ரால்டர் அட்லாண்டிக் பகுதியில் லேசான வடமேற்கு திசையில் வீசும் மிக வேக புயலில் சிக்கும் கப்பல் ,ஆங்கில கால்வாயையோ அல்லது அதன் சுற்று பகுதியையோ(english channel)தொடும் வாய்ப்புகளே அதிகம்.
இந்த திசையில் தரை தட்டும் கப்பல்கள் சென்றடையும் தீவு என்பது கிரேட் பிரிட்டனாகவோ(GREAT BRITAIN)அதன் கட்டுப்பாட்டில் உள்ள தீவாக இருக்கலாம்.
தமிமூத்தாரீ சென்றடைந்த தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் (GREAT BRITAIN).
இது கடல் காற்றுகள் மற்றும் புயல்கள் தொடர்பான புரிதலின் அடிப்படையிலான ஒரு அனுமானமே.இது ஒரு உறுதியான பதில் அல்ல.
என்னுடைய இந்த பதில் 100% சரியாகவும் இருக்கலாம் 200% தவறாகவும் இருக்கலாம்.
Great Britain is not perfect answer.it is my probable opinion.
இதை யாரும் கண்மூடி ஏற்க வேண்டியதில்லை.அதே போல் இது தவறு என்று என்னை வசை பாட வேண்டிய அவசியமுமில்லை.
சரியான பதிலை கடல்சார் விஞ்ஞான அறிவு பெற்ற ஒருவரால் வழங்க முடியும்.
தமிமூத்தாரீ என்பவர் இஸ்லாமிய நம்பிக்கைகளை ஒட்டி கதைகளை எழுதக்கூடியவரும் ஆவார்.அவர் தஜ்ஜாலை பற்றிய எழுதிய கதை புத்தகத்தில் மேலதிக தகவல்கள் இருக்கலாம்.அப்புத்தகத்தை என்னால் இணையத்தில் பெற முடியவில்லை.
பிரிட்டன் தான் தமீம் சென்றடைந்த தீவு என்பதை வரலாற்று நிகழ்வுகளை இணைப்பதன் மூலம் (by the way of historical logics).
தஜ்ஜால் தீவு- பிரிட்டிஷ்
தஜ்ஜால் எந்த தீவிலிருந்து வெளிபடுகிறானோ அந்த தீவிலிருந்து தான் அவன் தனது லட்சிய பயணத்தை தொடங்க வேண்டும்.அப்படியென்றால் தமீம் சென்றடைந்த தீவுக்கும் அவன் முதன்மை பணியான ஜெருசலத்தின் விடுதலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கிலாபத் கீழ் இருந்த ஜெருசலம்
முதலாம் உலகப் போர் காலம் வரையிலும் இஸ்லாமிய அரசின் கீழ் (உத்மானிய பேரரசு-Ottomon empire) தான் இருந்தது.
மிகுந்த பலம் வாய்ந்த உத்மானிய பேரரசை நேரடியாக தாக்கி வீழ்த்துவது என்பது இயலாத காரியம்.நேரடியாக வீழ்த்துவதற்கு முன் உள் நாட்டு கலவரங்களை தூண்டினால் தான் அதன் மூலம் அதை சிதறடித்த பிறகு அதை நேரடியாக தாக்கி வீழ்த்த முடியும்.
உத்மானிய பேரரசு பகுதியில் அரபு மற்றும் துருக்கி இனங்களுக்குள் இனவெறி தூண்டப்படுவதற்கு தஜ்ஜால் தீவானது(பிரிட்டிஷ்) அதன் ஜஸ்ஸாஜா பிராணியை(ஜஸ்ஸாஜாவின் பொருள் - வேவு பார்த்தல் -SPY -வேவு பார்க்கும் உளவு துறையினரை) பேரரசுக்குள் அனுப்பியது.
எட்வர்ட் லாரன்ஸ் பிற்காலத்தில் லாரன்ஸ் ஆப் அரபியா என்று அழைக்கப்பட்டவனின் தலைமையில்(மேற்பார்வையில்) அரபு கழகம்(Arabian revolt) தூண்டப்பட்டது.
லாரன்ஸ் ,மக்கா நகரின் ஷரிப் - ஹுசைன் இப்னு அலி என்ற துரோகியிடம் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டான் அதன்படி துருக்கியர்களான உத்மானிய பேரரசு ஆட்சியாளர்களிடமிருந்து அரபு பகுதிகளை பிரித்து ஹுசைனிடம் ஒப்படைப்பதகாவும் அதற்கு அரபுகள் பிரிட்டிஷ் படையுடன் இணைந்து உத்மானிய படையை தாக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம் மேலும் ஷரீப் ஹுசைனுக்கு 7 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் (இன்றைய மதிப்பில் பில்கேட்ஸ் சொத்தை காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட பணம்) சன்மானமாக வழங்கப்படுவதுடன் மாதம் 2 லட்சம் பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படும்.
லாரன்ஸ் , அரபியாவின் இன்னொரு பகுதியான நஜ்த் தற்போதைய ரியாத் பகுதியின் தலைவனான அப்துல் அஜீஜ் இப்னு சவூத்(தற்போதைய சவூதி அரேபியா நிறுவனர்) என்ற மற்றொரு துரோகியிடம் இது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டான்.ஆனால் சன்மானம் மாதம் வெறும் 5 ஆயிரம் பவுண்ட் தான்.ஏனெனில் இவன் பகுதியின் கீழ் புனித தளங்கள்(மக்கா மதீனா வரவில்லை).ஆனால் அதையும் ஏற்று கொண்டான் துரோகி இப்னு சவூத்.
இது போன்ற உள் நாட்டு கலகத்தால் உத்மானிய பேரரசு முதலாம் உலகப்போரில் வீழ்ச்சியடைந்தது.
வெற்றிக்கு பின் மக்கா ஷரீப் தன்னை ஒட்டு மொத்தமாக அராபிய பகுதிக்கும் அமீராக அறிவித்தான்.ஆனால் பிரிட்டிஷ் இதை அங்கீகரிக்கவில்லை. ஹிஜாஜ் பகுதிக்கு(மக்கா,மதீனா) மட்டுமே அமீராக அறிவித்தது.மேலும் பாலஸ்தீன், சிரிய பகுதிகளை பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் தங்களுக்குள் பங்கீட்டுக் கொண்டது.இதனால் கோபம் கொண்ட ஹுசைன் வெர்சய்ல் உடன்படிக்கையை மறுத்ததுடன் யூதர்களை ஜெருசலத்தில் குடியேற்றம் செய்யும் பால்போர் (BALFOUR DECLARATION)அறிக்கை தொடர்பான உடன்படிக்கையிலும் கையெழுத்திட மறுத்தான்.
விளைவாக இப்னு சவூத் ஹிஜாஜ் பகுதியை கைப்பற்றி ஹுசைனை விரட்டியடித்தான்.மேலும் தன்னை ஹிஜாஜ் மற்றும் நஜ்த் பகுதியின் ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டான்.இதுவே பிற்காலத்தில் சவூதி அரேபியாவாக உருவானது.
இப்னு சவூத்தையும், ஹுசைனையும் வைத்து கிலாபத்தை பிரிட்டிஷ் உடைத்ததுடன் மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்தும் எண்ணம் இல்லாதவர்களின் கையில் புனித தங்களின் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தது.இப்னு சவூத் போன்ற துரோகிகளிடம் பால்போர் அறிக்கை தொடர்பான உடன்படிக்கையையும் மேற்கொண்டது.
உள்நாட்டு கலகத்தில் தவித்த உத்மானிய அரசின் மீது இறுதியாக பிரிட்டிஷ் போர் தொடுத்து ஜெருசலத்தை கைப்பற்றியது.ஜெருசலத்தை கைப்பற்றி அதில் யூதர்களை குடி அமரத்தியது.யூதரகளின் பொற்காலத்திற்கான முதல் வாசலை பிரிட்டன் திறந்தது.
தஜ்ஜால் தன் முதல் பணியை தான் சிறை பிடிக்கப்பட்டு பின் வெளியேறும் தீவிலிருந்து தான் தன் பயணத்தை தொடர முடியும் என்ற logic ன் அடிப்படையில்- பிரிட்டிஷ் மூலம் ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்டதால் தமீம் சென்ற தீவு பிரிட்டிஷ் தான் என்று வரலாற்று ஆய்வுகளின் மூலம் நான் அனுமானிக்கலாம்.
அனுமானம் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.எனவே இதை பற்றி சிந்தித்து சரி என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வரலாற்று விளக்கம் தொடரும்.....


தஜ்ஜால் தொடர்- பதிவு- 5 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம் தமீம் பயணம் செய்த கடல் எது? :- https://e-funandjoyindia.blogspot.com/2020/09/5.html?spref=tw

தஜ்ஜால் தொடர்- பதிவு- 6 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்:- உத்மானிய பேரரசு முதலாம் உலகப்போரில் வீழ்ச்சியடைந்தது.

Thursday 24 September 2020

 தஜ்ஜால் தொடர்- பதிவு- 5

தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
தமீம் பயணம் செய்த கடல் எது?





பதில்:1
தமீம் அவர்கள் தார் குலத்தை சேர்ந்தவர். இவர் பாலஸ்தீன பகுதியை சேர்ந்த கிறித்தவ பாதிரி.
இவருடன் பயணம் செய்தவர்கள்,லக்ம்,
ஜூதாம் குலத்தை சேர்ந்தவர்கள்.
ஜூதாம் குலத்தை சேர்ந்த அரபுகளான இவர்கள் பண்டைய ஷாம் பகுதியின் தெற்கு பகுதியில்(பாலஸ்தீன்) வாழ்ந்தார்கள்.இந்த பகுதி அந்த கால கட்டத்தில் பைசாந்திய கிழக்கு கிறித்தவ பேரரசின் கீழ் இருந்தது. இம்மக்களும் அரசுக்கு விசுவாசமாகவும் கிறித்தவ மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் விளங்கினர்.
லக்ம் குலத்தை சேர்ந்தவர்கள் தெற்கு ஈராக் பகுதியிலிருந்து பாலஸ்தீன் வரை பரவியிருந்தனர்.மேலும் லக்ம் மற்றும் ஜூதாம் குலத்தினர் ஒருஙருக்கொருவர் மிகுந்த நம்பிக்கையான உறவில் இருந்தனர்.
தமீம்,லக்ம்,ஜூதாம் மூவரும் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்த்தால் இவர்கள் பாலஸ்தீனத்துடன் தொடர்புடைய மத்திய தரைக்கடலில் பயணம் செய்திருக்க வேண்டும்.
பதில்:2
பண்டைய அரபுகளின் ஏற்றுமதியில் மூன்று முக்கிய வழித்தடங்கள் இருந்தன.
1.பட்டுப்பாதை(silk route)
2.வாசனை திரவிய பாதை (அத்தர்,சென்ட்)(incense route)
3.நறுமணப்பொருள்(ஏலக்காய் இலவங்கம்) பாதை(spice route)
இந்த மூன்று பாதையில் பட்டுப்பாதை என்பது முழுவதும் நிலம் சார்ந்த பயணத்துடன் தொடர்புடையது எனவே இதை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை.
நறுமண பொருள் பாதை என்பது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து ஏலக்காய் ,கிராம்பு,முத்து,நவரத்தின கற்களை அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு கொண்டு வரும் பாதை.(இந்தியாவிலிருந்து அரபுக்கு இற்க்குமதி)
வாசனை திரவிய பாதை என்பது கடல் மற்றும் நிலம் இரண்டையும் சார்ந்த பாதையாகும்.இப்பாதை என்பது யமன் நாட்டின் மரப்பசின்களையும்(அக்கால அத்தர்) (மிர் மற்றும் பிரான்க் ) ஆப்ரிக்க அத்தரையும்,இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும்,பாலஸ்தீனத்தின் காஸா வரையில் தரை மார்க்கமாக கொண்டு வந்து பிறகு மத்திய தரைகடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாதையாகும்.(அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி).ஐரோப்பிய மக்கள் பண்டைய பாலஸ்தீன் பகுதியை levent(லெவன்ட்) என்று அழைத்தனர்.
ஆக இந்த பண்டைய வாசனை திரவிய பாதை தான் நேரடியாக தமீம் மற்றும் லக்ம்,ஜூதாம் குலத்தார் வாழ்ந்த காஸா(பாலஸ்தீன்) பகுதியுடன் தொடர்புடையது.மேலும் அரபு குல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி தமீம் அவர்களும் மிர் மரப்பிசின்(அத்தர்) வணிகர் தான்.
ஆக தமீம் அவர்கள் வாசனை திரவிய பாதையுடன் தொடர்புடைய மத்திய தரை கடலில் தான் பயணித்திருக்க வேண்டும்.
தமீம் மற்றும் ஜூதாம் குலத்தார் இருப்பிடத்தை வைத்து ஆய்வு செய்தாலும் சரி அல்லது பண்டைய வணிக பாதைகளை வைத்து ஆய்வு செய்தாலும் சரி தமிமூத்தாரீ அவர்கள் பயணம் செய்த கடல் எது என்ற கேள்விக்கு பதில் மத்திய தரை கடல் தான்.
தமீம் சென்றடைந்த தீவு(தஜ்ஜால் தீவு) எது?
தமீம் அவர்கள் மத்திய தரைகடலில் தான் பயணித்திருக்க முடியும் என்பதை நேற்றைய பதிவில் கண்டோம்.
அப்படியென்றால் தமீம் சென்றடைந்த தஜ்ஜால் தீவு மத்திய தரை கடலிலோ அல்லது மத்திய தரை கடல் தொடர்பு கொள்ளும் மற்ற கடல்களிலோ தான் இருக்க முடியும்
மத்திய தரைகடல் தொடர்பு கொள்ளும் கடல்கள்:
1.மேற்கில் ஜிப்ரால்டர் நீரிணையின் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் தொடர்பு கொள்ளுகிறது
2.வட கிழக்கில் கருங்கடலுடன் தொடர்பு கொள்ளுகிறது
3.தெற்கில் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுடன் தொடர்பு கொள்ளுகிறது.
இதில் சூயஸ் கால்வாய் எனபது 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய செயற்கை கால்வாய்.ஆக தமீம் காலத்தில் இது இல்லை என்பதால் அன்றைய காலத்தில் மத்திய தரை கடலுக்கும் செங்கடலுக்கும் தொடர்பில்லை.
தமீம் சென்றடைந்த தீவு மத்திய தரை கடலிலோ,அட்லாண்டிக் கடலிலோ,கருங்கடலிலோ தான் இருக்க வேண்டும்.
இந்த மூன்று கடலுமே மதீனாவின் கிழக்கு பகுதியில் இல்லை.மதீனாவிற்குமேற்கு திசையிலும்,வட மேற்கு திசையிலும் தான் இவைகள் உள்ளன.
ஆனால் தூதர் தஜ்ஜாலின் தீவை சுட்டுவதற்கு கிழக்கு திசையை நோக்கி விரல் நீட்டுகிறார்.
தீவை சென்றடைந்த தமீமும் சூரியன் மறையும் திசை என்று கூறுகிறார்.மேற்கு திசையை உறுதி செய்கிறார்.
அப்படியென்றால் தஜ்ஜாலின் தீவு என்பது மேற்கு திசையில் உள்ளது.தூதர் அது என்று கிழக்கு திசையை சுட்டுவது தஜ்ஜாலின் தீவை அல்ல.தஜ்ஜாலின் மிகப் பெரிய பித்னாவை பற்றியது தான் என்பது தெளிவாகிறது.
கிழக்கு திசையில் உள்ள தஜ்ஜாலின் பித்னா எது?
மதினாவிற்கு மிக சரியான கிழக்குப் பகுதிகள்:
1.ரியாத்(நஜ்த்)-கேடுக்கெட்ட சவூதி அரச குடும்பத்தின் பூர்வீகம்.முஸ்லீம்களுக்கு உலகெங்கிலும் எதிரிகளை பரிசளித்த வகாபியிசத்தின் பிறப்பிடம்.ஷைத்தானின் தலைமுறைகளான இவர்களின் இருப்பிடத்தை தான் தஜ்ஜாலின் இடம் என்று தூதர் கூறியிருக்கலாம்.
2.இந்தியா-(குஜராத் மாநிலம்)-உலக அளவில் முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ள இரண்டாவது நாடு இந்தியா.இந்த தேசத்தில் உள்ள முஸ்லிம்களை கொலை செய்வதற்கு தேச அளவிலும் உலக அளவிலும் ஏதோ விருந்துக்கு அழைப்பது போல் தன்னுடைய நண்பர்களை அழைக்கிறது குஜராத் இரட்டைகள்.இந்த இரட்டைகளின் சட்டங்களை(தஜ்ஜாலின் பித்னாக்களை) தஜ்ஜாலின் இருப்பிடமாக கிழக்கு நோக்கி தூதர் சுட்டி இருக்கலாம்.
3.மியான்மர்-ரோஹிங்யா முஸ்லீம்களை சமீபத்தில் ஓட ஓட விரட்டியடித்த தேசம்.இதை தூதர் சுட்டி இருக்கலாம்.
4. மதீனாவின் லேசான வட கிழக்கு பகுதி இஸ்பஹான்(ஈரான் மாநிலம்) தஜ்ஜால் முதன்முதலாக வெளிப்படும் பகுதி இதை சுட்டி இருக்கலாம்.
5.மதீனாவின் தென்கிழக்கு பகுதி-இந்தோனேசியா-தங்கள் நாட்டு மக்களின் ரத்தத்தை, அமெரிக்காவின் எலும்பு துண்டுகளுக்காக விற்ற அந்நாட்டு ஆட்சியாளர்களை சுட்டி இருக்கலாம்.
இவைகள் அனைத்தையும் அல்லது இவைகளில் ஏதேனும் ஒன்றை சுட்டுவதற்கு கூட கிழக்கு திசையை தூதர் காட்டிருக்கலாம். அல்லாவே அறிந்தவன்.
முத்தஸாபிகாத் வடிவிலான ஹதிஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்கு நாம் அளிக்கும் விளக்கம் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.ஆகவே்அல்லாவே அறிந்தவன் என்ற வாசகத்தோடு விளக்கத்தை முடிப்பது தான் சிறந்தது.
பதிவு நாளை தொடரும்....


தஜ்ஜால் தொடர் - பதிவு- 4 தஜ்ஜாலுடன் தமிமூத்தாரீ என்பவரின் சந்திப்பு:-https://e-funandjoyindia.blogspot.com/2020/09/4.html?spref=tw

தஜ்ஜால் தொடர்- பதிவு- 5 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம் தமீம் பயணம் செய்த கடல் எது?

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com