HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 31 December 2018

2.0 மெகா ஹிட் ப்ராகு, இயக்குனர் ஷங்கர் அவர்கள் கமல் ஹாசன் உடன் இந்திய 2 பணியாற்றவுள்ளார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது, அதை தொடர்ந்து பொள்ளாச்சி, மற்றும் உக்ரைன் நடக்க உள்ளதாக நம்பக தகுந்த வட்டத்தில் இருந்து செய்தி வந்தது. மேலும், படத்தின் கேமரா மேனாக ரவி வருமாவும் , கதாநாயகியாக காஜல் அகர்வ்வாலும் பணியாற்றவுள்ளார்..



இந்தியன் 2 படத்தை பற்றி முக்கிய அறிவிப்பு?? போடு தகிட தகிட

Kajal Aggarwal to have 4 big releases in 2019
Kajal Aggarwal, who was last seen in Ajith’s Vivegam in Kollywood, is on a roll. Recently, the trailer of her film ‘Paris Paris’ released and it was fetched a positive report from the audience. She was not a part of Kollywood this year, but had signed some biggies, like Indian 2. The actress is said to have some big releases next year.
 
She took to Instagram, sharing a picture of herself. The caption read “This is my List of gratitude, sorry for rambling but this must be done :) -Extremely grateful for all the love and appreciation for my films #Awe#MLA #Kavacham and look forward to the releases coming up #ParisParis #Indian2 #Sita #Comali” Through this post, she confirmed yet again that she will be a part of Indian 2, the highly awaited political drama, directed by Shankar.

She also took the moment to thank all her friends, relatives, colleagues and fans by saying, “2018 you’ve been one hell of a stunner! 19, you better kick ass. #1dayto2019

KAJAL AGGARWAL CONFIRMS YET AGAIN - OFFICIAL STATEMENT ON INDIAN 2

Sunday 30 December 2018

ஓராண்டுக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளிவர உள்ள விஸ்வாசம் படத்தை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அண்மையில் வெளியான விஸ்வாசத்தின் அடிச்சிதூக்கு, வேட்டிகட்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது

வாழ்க்கையில ஒரு தடவ அழாத பணக்காரணும் இல்ல, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்ல என்று அஜித் பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. 2 நிமிடம் 16 வினாடிகள் ஓடும் ட்ரெய்லரில் ஏர் கலப்பையுடன் அஜித் நடந்து வரும் காட்சி, மீசையை முறுக்குவது, என் கதையில நான் வில்லன்டா என அவர் பேசும் பஞ்ச் டயலாக், சண்டை காட்சிகள் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.
கிராமத்து பெண்ணாக நயன்தாரா நடித்திருப்பது, கிராமத்தின் சூழல், குடும்ப பாசம், மாஸ் சண்டை காட்சிகள் என பக்கா கமர்சியல் படமாக விஸ்வாசம் உருவாகியுள்ளதை படத்தின் உணர்த்துகிறது. டிரெய்லர் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 6 லட்சத்து 42 ஆயிரம் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், ட்ரைலர் வெளியான 423 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து சாதனை படைத்துள்ளது. உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம் ஊரு கொடுவிளார்பட்டி, பொண்டாட்டி பேர் நிரஞ்சனா, பொண்ணு பேர் ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா என்ற வசனம் பேட்ட படத்துக்கு இடம்பெற்ற வசனத்திற்கு பதில் என இணையத்தில் அஜித் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




வெளியான 423 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்த விஸ்வாசம் ட்ரெய்லர்..!

எப்போதும் விஜய், அஜித் படங்கள் மிகவும் ஒன்றோடு ஒன்று ரசிகர்களால் ஒப்பிட்டு பார்க்கப்படும். அந்த வகையில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் கடும் போட்டிகள் இருக்கும் என்பதை உங்களுக்கே நன்றாக தெரிந்த விசயம்.
அந்த வகையில் அண்மையில் வெளியான சர்கார் படத்திற்கும், அடுத்து வரப்போகும் விஸ்வாசம் படத்திற்கும் தான் போட்டியே. சர்கார் படம் டீசர் பல சாதனைகளை செய்து அசத்தியது.
அதிலும் குறிப்பாக இணையதளத்தில் 5 நிமிடத்தில் 100K லைக்ஸ் அள்ளியது. இந்நிலையில் விஸ்வாசம் பட டிரைலர் வந்த 4 நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் பெற்றுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்கார் டீசர் சாதனை முறியடித்துள்ளது.
மேலும் விஸ்வாசம் டிரைலர் 12 நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.




அனைத்து சாதனைகளையும் தட்டி தூக்கிய அஜித் ரசிகர்கள்..

_*தயவுசெய்து கட்டண💵 சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்...🙏🏻*_

_பின்னர், அவர்களே நம் வழிக்கு இலவச சேனல்களாக மாறுவார்கள். இல்லையென்றால், நாம் மாறாமல் அவர்களை மாற்றுவோம். கோடிகணக்கில் 🎷🎫🎟🎞 விளம்பரத்தில் கொள்ளை🤣🤓 அடிப்பது போதாமல், நாம் வேறு அழவேண்டுமா..?🧐_

_எனவே, ஒற்றுமையே பலம். யாருமே💪 கட்டண சேனல் பார்க்காவிட்டால், விளம்பர😍 நிறுவனம் தன் விளம்பரத்தை நிறுத்திவிட்டு, இலவச🤓 சேனல்களுக்கு விளம்பரதாரர் திரும்புவர்.👍 பின்னர், கட்டண சேனல்களும் நம் பக்கம் திரும்பியே ஆகவேண்டும்..!_👏

_*ஒற்றுமையே பலம்👍*_

_*தொலைக்காட்சி சேனல்களுக்கு நாம் அடிமையா..? நமக்கு தொலைக்காட்சி சேனல்கள் அடிமையா என முடிவு செய்யும் நேரம் இது..!*_

_*TRAI*-ன் புதிய அறிவிப்பின்படி, டிசம்பர் 29 முதல் *கேபிள் டிவி, DTH, இன்டர்நெட் டிவி* என அனைத்திலும் உங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்._

_👂கேட்கும்போதே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.🤩😇ஆகா, அருமை என்று..._

_ஆனால், இந்த அறிவிப்பின் முழு விவரத்தை கேட்டால் *அட போங்கடா, நீங்களும் உங்கள் அறிவிப்பும்* என்று சொல்லத் தோன்றும்..!_

_*இதோ விவரம்...*_👇

_இதன்படி உங்களுக்கு 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கும்._

_நீங்கள் இலவச 100 சேனல்கள் போதும் என்றாலும்,_
_அடிப்படை கட்டணம் என்று ஒன்று மாதாமாதம் செலுத்த வேண்டும்._

_அதாவது, அதற்கு பெயர் *நெட்வொர்க் கெபாசிட்டி சார்ஜ்.*_

_விலை: *₹153.40* (18% GST உட்பட)_

_இது கிட்டத்தட்ட நாம் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தின் அளவு._

_ஆனால், இதில் இலவசம்+கட்டணம் என அனைத்து சேனல்களுக்கும் கிடைக்கிறது._

_ஆனால், தற்பொழுது இந்த ₹153.60 க்கு அவர்கள் கொடுக்கும் 100 இலவச சேனல்களில் நமக்கு கிடைக்கும் *தமிழ் சேனல்கள்* இவை:_👇

_*1.ஏஞ்சல்*_
_*2.கேப்டன்*_
_*3.பொதிகை*_
_*4.இசையருவி*_
_*5.கலைஞர்*_
_*6.கலைஞர் செய்திகள்*_
_*7.மக்கள்*_
_*8.முரசு*_
_*9.நியூஸ்7*_
_*10.பாலிமர்*_
_*11.தந்தி*_
_*12.புதிய தலைமுறை*_
_*13.புது யுகம்*_
_*14.சிரிப்பொலி*_
_*15.சங்கரா டிவி*_
_*16.வசந்த் டிவி*_
_*+ பிற மொழி சேனல்கள்*_

_எனக்கு இந்த சேனல்களே போதும் என்றால், அவர்கள் உங்களுக்கு அடிமை..._

_இது எனக்கு பத்தாது என்றால், நீங்கள் அவர்களுக்கு அடிமை..!_

_இதற்கு மேல் நீங்கள் சேனல்கள் விரும்பினால், உங்களை போதையில் மயக்கி வைத்திருக்கும் அந்த சேனல்கள் எல்லாம் இப்போது கட்டண சேனல்களாக மாறி விட்டன..!_
_(ஒரு நாளைக்கு கோடிகளில் புரளும் அவர்களுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வரும் வருமானம் போதவில்லை. எனவே, நீங்களும் பணம் தந்து உதவ வேண்டும்)_

_இவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால், (கொஞ்சம் கஷ்டம்தான்) அவர்களும் இலவச சேனல்களாக மாற்றியே ஆக வேண்டும்..!_

_இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!_
❤AR❤
_*முடிவு உங்களிடம்...✊*_

_*பகிர்வோம் அனைவருக்கும்👉*_





தயவுசெய்து கட்டண💵 சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்...🙏🏻*_

தமிழ் சினிமாவின் வளர்ச்சி மிகஅதிகமாக உள்ளது. இந்திய சினிமாவில் பாலிவுட், டோலிவுட்க்கு அடுத்த இடத்தில் உள்ளது.தற்போது பிரபல ரேங்கிங் இணையதளமான Imdb தளத்தில் அடுத்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது
இதில் மற்ற அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி பேட்ட முதலிடம் பிடித்திருந்தது. மேலும், அனைத்து இடங்களிலும் இந்தி படங்கள் இருக்க விஸ்வாசம் 6வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு விஸ்வாசம் ட்ரெய்லர் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஸ்வாசம் படம் பேட்ட படத்தினை பின்னுக்கு தள்ளி ஓவர் நைட்டில் முதலிடத்தை பெற்றுள்ளது.


ஓவர் நைட்டில் கீழே இறங்கிய “பேட்ட” – விஸ்வாசம் காட்டிய மாஸ்..! – யாரும் எதிர்பார்க்காத முடிவு..!

Saturday 29 December 2018






Breaking Official news:- 
#ViswasamTrailer tomorrow 1:30pm iruku ellarukum iruku edudha Vaida antha pazhaiya record ellam 😍😍😍😂😹😹😹


விஸ்வாசம் இன்னும் சில தினங்களில் திரையரங்கிற்கு வரவுள்ளது. இப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.அப்படியிருக்க ஏற்கனவே இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் நிறுவனம் ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கியது.


தற்போது இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளதாம்.அதுவும் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிக தொகைக்கு விஸ்வாசத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 30-ம் தேதி  01.30pm மணிக்கு ட்ரெய்லர் ரிலீஸ் என்று தகவல்கள் வந்த நிலையில், விஸ்வாசம் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவல்களை சில மாலைப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதன் படி, நாளை விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிகின்றது.
மேலும், இன்று இரவே ட்ரெய்லர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது போல #KOLAMassViswasamTrailerஎன்ற ஹேஸ்டேக்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டிருகிறார்கள்.

ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

கொல காண்டுல இருக்குறவங்களுக்கு ஒரு கொல மாஸான விஸ்வாசம் ட்ரெய்லர், முன் கூட்டியே வெளியாகிறது ..! – அதிரடி அப்டேட்





அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. டி.இமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டன.
இன்னும் டிரைலர் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பமாகிவிட்டன.
புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் ஆங்காங்கே விஸ்வாசம் படத்திற்காக பிரமாண்ட பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.






டிரெய்லரே வராம டிக்கெட் விக்க முடியுமா சார்?

முடியும் 'அஜித்' என்ற ஒருவருக்கே சாத்தியம்🙏🙏🙏



டிரைலர் கூட வெளியாகவில்லை அதற்குள் அனைத்து தியேட்டர்களிலும் விஸ்வாசத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

Friday 28 December 2018

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.
அப்படியிருக்க இப்படத்தின் புக்கிங் தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கியது. புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களில் யாருக்குமே ஓபன் ஆகவில்லை.
என்ன என்று பார்த்தால் ரசிகர்களின் புக்கிங் ஆர்வத்தால் சர்வரே ஒரு சில மணி நேரம் நின்றதாம், இப்போதே இப்படி என்றால், இன்னும் சில தினங்களில் டிக்கெட் கிடைக்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது


புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களில் சர்வரே நின்றது, விஸ்வாசம் மாஸ்..

அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது.
தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
“திரு.அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் ‘விஸ்வாஸம்’ படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
உண்மையில், இந்த நாடுகளில் வெளியாகும் முதல் அஜித்குமார் படம் இது தான். ஆனால், குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் ரஷ்யாவில் 8க்கும் அதிகமான நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படமாக இது இருக்கப் போகிறது என்கிறார் செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் பிரசாந்த். இவர் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த நாடுகளில் நம் திரைப்படங்களின் வரவேற்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், “பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி நல்ல கதையுள்ள படங்களால் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், இங்குள்ள ரசிகர்கள் தொழில்நுட்ப ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உணர்வுள்ள நல்ல குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படங்களையும் கூட மிகவும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
நிச்சயமாக, குடும்ப உணர்வுகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். மேலும், தமிழ் பேசும் நாடுகளை தாண்டி, அஜித்குமாரின் பல திரைப்படங்களை ஆன்லைனில் பார்த்து, அவருக்கென ஒரு வலுவான ரசிகர் தளம் இந்த நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் இந்த விஸ்வாஸம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை நடிகர், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் ஏ & பி குரூப் சார்பில் கைப்பற்றியிருக்கிறார்.



படம் வெளிவரும்பொழுதே புது புது சாதனைகளை படைத்தது வரும் விஸ்வாசம்...

Thursday 27 December 2018

Kohli breaks a 16-year-old record held by Indian batsman Rahul Dravid
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் மேட்சில் ராகுல் ட்ராவிட்டின் 16 வருட சாதனையை முறியடித்து விராட் கோலி சாதனை புரிந்துள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் மேட்ச்களில் ஆடி அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் என்கிற புகழை அடைகிறார் கோலி. இதற்கு முன்பாக, வெளிநாட்டு தொடர் ஆட்டத்தில் 2002-ஆம் ஆண்டு 1137 ரன்கள் எடுத்து டிராவிட்டும், 1983-இல் 1065 ரன்களை எடுத்து மொஹிந்தர் அமர்நாத்தும், 1971-இல்  918 ரன்கள் எடுத்து கவாஸ்கரும் சாதனை புரிந்திருந்தனர்.

முன்னதாக  பெர்த் டெஸ்ட்டில் அடித்த சதம் உட்பட மொத்தம் 6 சதங்கள் அடித்து  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு நிகரான சாதனையை புரிந்த விராட் கோலி,  இன்றைய மெல்போர்ன் டெஸ்டில் 82 ரன்கள் எடுத்த சமயத்தில், ஸ்டார்க்கின் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று அவுட் ஆனார்.

அதனால் சதம் அடிக்க முடியாமல் போனது. எனினும் ராகுல் டிராவிட்டின் 16 வருட சாதனையை முறியடித்து கோலியால் ஒரு புதிய சாதனையை செய்ய முடிந்திருப்பதால், கோலியின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

அப்படிப்போடு! பிரபல பேட்ஸ்மேனின் ‘16 வருஷ சாதனையை அசால்ட்டாக’ முறியடித்த கோலி!

அஜித் – சிவா கூட்டணியில்  நான்காவது படமாக சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்திற்கு தணிக்கைக் குழுவில் `U’ சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது.
மேலும் இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் கதை இது தான் என சில தகவல்கள் கசிந்துள்ளது. இதுபற்றிய விபரங்கள் சமூகவலைத்தளங்களில் விஸ்வாசம் படத்தின் கதை என உலா வந்தவண்ணம் உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர் படமென்றாலே இப்படி சில பல கதைகள் இணையத்தை ரவுண்ட் அடிப்பது வழக்கம் தானே. அதற்கு விஸ்வாசம் மட்டும் விதிவிலக்கா என்ன..? இது தான் விஸ்வாசம் படத்தின் கதை என உலா வந்து கொண்டிருக்கும் அந்த கதை இதோ,
ஆரம்பத்தில் அஜித்குமார் ஊருக்கு அடங்காத பெரிய தாதாவாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் செய்துவைத்தால் மாறிவிடுவார் என்று அவரது நண்பர்கள் ப்ளான் போட்டு அஜித் ஒரு தாதா என்பதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த நயன்தாராவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அஜித்தின் உண்மை முகம் தெரிந்ததும் தனது குழந்தையுடன் நயன்தாரா தனியாக சென்று வசிக்கிறார். தொடர்ந்து சொந்தமாக தொழில் செய்யும் நயன்தாராவுக்கு ஒரு பெரிய சிக்கல் வருகிறது. அதில் இருந்து அஜித் அவரை எப்படி காப்பாற்றினார். இறுதியில் நயன்தாரா அஜித்தை ஏற்றுக்கொண்டாரா..? இருவரும் ஒன்று சேர்கிறார்களா..?” என்பது மீதிகதையாம்.
இந்த கதையும் அச்சு அசல் வீரம் படத்தின் கதையை போலவே உள்ளதால் வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ.? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.




அஜித்தின் உண்மை முகம் தெரிந்ததும் அஜித்தை பிரிந்த நயன்தாரா – வைரலாகும் விஸ்வாசம் படத்தின் கதை..

கூகுள் நிறுவனத்தின் கூகுள் டெஸ் செயலி தற்பொழுது கூகுள் பே என்ற பெயர் மாற்றத்துடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் மட்டும் 22 மில்லியன் பயனர்கள் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற ஆண்டின் கணக்கின் படி சுமார் 750 மில்லியன் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அத்துடன் சென்ற ஆண்டில் மட்டும் 30 பில்லியன்ற்கும் மேல் பணம், கூகுள் பே செயலி வழி கைமாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே - ஸ்கிராட்ச் கார்டு கூகுள் பே செயலியின் சிறப்பம்சம், கூகுள் வழங்கும் ஸ்கிராட்ச் கார்டுகள் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இலவச ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும், அதை ஸ்கிராட்ச் செய்யும்பொழுது நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கு ஏற்ப பணம் பரிசாக வழங்கப்படும். ரூ.1,00,000 பரிசு ரூ.500 க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது உங்களுக்கு ரூ.1,00,000 ற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை கூகுள் நிறுவனம் வழங்குகிறது. ஆனால் பலருக்கும் பல நேரங்களில் "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று தான் வரும். இந்த வாக்கியம் உங்களின் ஸ்கிராட்ச் கார்டுகளில் வந்தால் உங்களுக்குப் பரிசு இல்லை அடுத்த முறை முயற்சி செய்யவும் என்பது பொருள். "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" இப்படி "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" வாக்கியம் வராமல் முடிந்த வரை அதிக அளவு பரிசு பணத்தை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம். ஒரு வாரத்திற்கு 5 ஸ்கிராட்ச் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும். முடிந்த வரை அந்த ஸ்கிராட்ச் கார்டுகளை உடனுக்கு உடன் ஸ்கிராட்ச் செய்யாமல் பத்திரமாகச் சேமித்து வையுங்கள். எதற்கென்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு சொல்ரேன் இருங்க. 

5 பரிவர்த்தனை 5 ஸ்கிராட்ச் கார்டு ஒவ்வொரு பரிவர்த்தனையின் முடிவிலும் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அனைத்து பரிவர்த்தனிக்கும் ஸ்கிராட்ச் கார்டுகள் வழங்கப்படமாட்டாது. ஒரு வாரத்திற்கு 5 ஸ்கிராட்ச் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும். கிடைக்கும் ஸ்கிராட்ச் கார்டுகளை நாங்கள் சொல்லும் விதிமுறைகளைப் பின்பற்றி ஸ்கிராட்ச் செய்யுங்கள் நிச்சயம் அதிக அளவில் இலவச பணமும் கிடைக்கும். "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"மை தவிர்ப்பதற்கான செயல்முறை: - உங்கள் கூகுள் பே அக்கௌன்ட்டில் இருக்கும் 5 வெல்வேறு பயனருக்கு பண பரிவர்த்தனை செய்யுங்கள். - உங்களுக்குக் கிடைக்கும் ஸ்கிராட்ச் கார்டுகளை சேர்த்து வையுங்கள். - உடனே ஸ்கிராட்ச் செய்யும் பழக்கத்திற்கு ஸ்கிராட்ச் செய்துவிடாதீர்கள். - உங்களுக்குக் கிடைத்த ஸ்கிராட்ச் கார்டுகளை நங்கள் சொல்ல போகும் நாள் வரை பத்திரப்படுத்தி வையுங்கள். - உங்கள் கூகுள் பே செயலியை, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 12:00 முதல் 12:05 க்குள் ஓபன் செய்யுங்கள். - ஒவ்வொரு ஸ்கிராட்ச் கார்டாக இப்பொழுது ஸ்கிராட்ச் செய்யுங்கள். - ஒவ்வொரு ஸ்கிராட்ச் கார்டிலும் நிச்சயம் இலவச பணம் கிடைக்கும். இந்த முறையைப் பயன்படுத்தி அனைவரும் ஸ்கிராட்ச் கார்டு பரிசுகளை,பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள். காரணம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஸ்கிராட்ச் செய்வதற்கான காரணம் என்ன? கூகுள் நிறுவனம், ஒவ்வொரு செய்வ்வாய்கிழமைகளில் மட்டும் தான் தனது நிதியை புதுப்பிக்கிறது. அதனால் தான் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஸ்கிராட்ச் செய்யும் பயனர்களுக்கு அதிக அளவில் பரிசு பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.


pls clicl to download google pay here:- I’m inviting you to use Google Pay, a simple and secure payments app by Google. Here’s my code (f6zi9q)- just enter it before your first transaction. If you send your first payment, you will earn a reward! https://g.co/payinvite/f6zi9q

NOTE;- Use this referral code:- (f6zi9q) , you will get 101 cash back on your first transaction..

கூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி? சீக்ரெட் டிப்ஸ்.!..

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com