HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 30 July 2018

அஜித் சின்ன குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பும் ஒரு மாஸ் நடிகர். எப்போதும் தனக்காக ரசிகர்களை பயன்படுத்தாமல் அவரவர் வாழ்க்கையை வாழுங்கள் என்று ஒதுங்கி இருப்பவர்.
இந்த ஒரு காரணத்துக்காவே அவரை தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டவர்கள் பலர். பெரிய பிரபலங்களை தாண்டி மௌன ராகம் சீரியலில் நடித்து அனைவரையும் கவர்ந்துவரும் சுட்டி ஸ்ருதி (ஷெரின்) அஜித்துடன் தனக்கு இருக்கும் ஆசையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் தான் அஜித் அவர்களுடன் ஒரு படத்திலாவது அவருக்கு மகளாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.




அஜித்திடம் மௌன ராகம் சீரியல் புகழ் இந்த குட்டி அழகிக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதாம்- தல நிறைவேற்றுவாரா?..

Thursday 26 July 2018

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஷ்வாசம் " படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விசுவாசம்" படத்தில் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மேலும், விஷ்வாசம் படத்தில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில். விஸ்வாசம் படத்திலும் ஒரு கிராமிய கரகாட்ட பாடல் இடம்பெறுகிறது. அஜித்துடன் இணைந்து தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று ஒரு பாடல் காட்சியில் நடிக்க உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.


அழிந்து வரும் கலைக்கு புத்துயிர் ஊட்டும் தல அஜித்..!! 300 பேருக்கு வாழ்க்கை கொடுத்த அஜித்..! விஸ்வாசம் படத்தின் அப்டேட்..!!

Saturday 21 July 2018

அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது, அவர் இளம் இயக்குனர்களுடன் இணைய வேண்டும் என்பது. ஆனால் அவர் தொடர்ந்து 4வது முறையாக சிவாவுடனேயே படங்கள் நடித்து வருகிறார்.
இனி வரும் படங்களிலாவது புதிய கூட்டணி அமையுமா என்ற ஏக்கம் தல ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் தீரன் பட இயக்குனர் வினோத், விக்ரம் வேதா புகழ் புஷ்கர்-காயத்ரி போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அஜித்தின் அடுத்த படத்திற்காக கூறப்பட்டன.
கடைசியில் இப்போது என்னவென்றால் அஜித் அடுத்து வினோத்துடன் இணைவது உறுதி என்கின்றனர். நமக்கு கிடைத்த தகவலும் அஜித் யோசிப்பதும் சரியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



விசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்...

Thursday 19 July 2018

அரசியல்-சினிமா பிரிக்க முடியாது என்ற பேச்சு அன்றைய காலகட்டத்தில் இருந்தே உள்ளது.
இப்போது இதை நம்மால் மறுக்கவே முடியாது, ஏனெனில் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி-கமல் இருவரும் அரசியல் வந்துவிட்டனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் சினிமா பிரபலங்கள் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் ரமேஷ் கண்ணா, அரசியலுக்கு ரஜினி, கமல், விஜய் என அனைவரும் வந்துவிட்டனர்.
தல தான் இன்னும் வரவில்லை, ஆனால் அவர் அரசியல் வந்தால் ஜெயித்திடுவார் என்பது அவருக்கு தெரியவில்லை. இதை சொன்னால் வேலையை பாருங்கள் என்பார் என்று ஜாலியாக கூறியுள்ளார்.



ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்...

Monday 16 July 2018

உங்களுக்கு சூர்யாவின் #அகரம் பவுண்டேசன் தெரிந்திருக்கும்!
விஜய்யின் #மக்கள்இயக்கம் தெரிந்திருக்கும்!

அஜித்தின் #மோகினிமணி (mohini Mani)  பவுண்டேசன் தெரியுமா????

நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் அவர்தான் உதவிகளே செய்வதில்லையே என கூக்குரல் எழுப்பவே நேரம் சரியாக இருக்கிறது சிலருக்கு! அஜித்தின் (moninimani foundation ஒரு non government organisations! (NGO) அஜித்தின் அம்மா பெயர் (மோகினி)  அப்பாவின் பெயர் (சுப்பிரமணி) இவர்களின் பெயர்கள் தான் இந்த foundation -க்கு வைக்கப்பட்டுள்ளது அஜித்தின் ஒரு பகுதி பணம் இந்த foundation-க்கு செல்கிறது அதன் மூலம் வயதான/ஊனமுற்றோர்களுக்கு  உதவிகள் அளிக்கப்படுகின்றது உதவிகளை பலருக்கும் தெரிந்த நிலையில் செய்யும் பல நடிகர்களுக்கு  மத்தியில் #அஜித் மாதிரி சில நடிகர்கள் தான் வைத்திருக்கும் பவண்டேசன்களை கூட வெளிப்படுத்திக் கொள்ளாமல் உதவிகள் செய்கிறார்கள்!!
தினம் தினம்  எதாவது ஒரு விஷயம் உனக்கு ரசிகனாக இருப்பதை பெருமைப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது!
தல போல வருமா? தல தல தான்!!


அஜித்தின் #மோகினிமணி (mohini Mani) பவுண்டேசன் தெரியுமா????

Saturday 14 July 2018





நடிகர் தல அஜித் என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், ப்ரோபெஷ்னல் ரேசராக இருந்தாலும் எப்போதும் சிம்பிளாக ஒரு ஸ்விப்ட் காரில் தான் சென்னையை வளம் வருவார். அது தான் அவருடைய விருப்பமான காரும் கூட.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய வோல்வோ XC90 காரை அவர் வாங்கியுள்ளார். இந்திய சாலையில் இதனுடைய இன்றைய மதிப்பு 80 லட்சம் ரூபாய். 1969 CC எஞ்சின் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 13 முதல் 15 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது. மொத்தம் எட்டு கியர்கள் உள்ள இந்த கார் தான் இப்போது இந்தியாவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது என்பது குறிப்பிடதக்கது.

அந்த காரின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.







தல அஜித் வாங்கியுள்ள புதிய கார் – விலை மற்றும் சிறப்பம்சங்கள் – வைரலாகும் புகைப்படம்...

Friday 13 July 2018

சிறந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும் போட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. இதில் அந்த பல்கலைக்கழகத்தில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணவர் குழு சாதனை படைத்துள்ளது.
இந்த தகவலை அரிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
தக் ஷா மாணவர் குழுவின் விமானம் தொடர்ந்து 6 மணிநேரம் 7 நிமிடம் வானில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.
இதில் பெட்ரோல் மூலம் எரிசக்தி மின்சாரமாக மாற்றப்படுவதால் அதிக நேரம் இயங்குவதாகவும், ரிமோட் மூலம் இல்லாமல் கணிணி மூலம் இதனை இயக்குவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு நிலைநிறுத்த முடியும் என்கின்றனர்.









அஜித்தால் சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள், விமானத்தின் ஸ்பெஷல் இதுதான்- படு உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

Wednesday 11 July 2018



தமிழ் சினிமாவில் வெளியான படங்களை கலாய்த்து 2010ல் தமிழ் படம் ரிலீசாகி வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த வாரம் இதன் இரண்டாம் பாகம் ரிலீசாகவுள்ளது. பர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் என்று அனைத்திலும் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரை கலாய்த்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு போஸ்டரில் மற்ற படங்களின் போஸ்டரை நக்கலடித்து வருகின்றனர்.
இதுபற்றி தமிழ்படம் 2 இயக்குனர் அமுதனின் நண்பரான இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், முதல் பாகம் வெளியாகும்போது சமூகவலைதளங்கள் இந்தளவு இல்லை இதனால் ரசிகர்கள் விட்டுவிட்டார்கள்.
ஆனால் இப்போது அஜித், விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எண்ணற்றளவில் இருக்கிறார்கள் படம் ரலிசானதும் வச்சு செய்ய காத்திருக்கிறார்கள் என அமுதனிடம் சொல்லியிருக்கிறேன் என்று விருதுவிழா ஒன்றில் தெரிவித்தார்.





படம் ரிலீஸ் ஆனதும் வைச்சு செய்ய காத்திருக்காங்க அஜித், விஜய் ரசிகர்கள்! பிரபல இயக்குனர் அதிரடி..

Monday 9 July 2018

சிம்பு தமிழ் சினிமாவில் தனக்கென்று நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் வெற்றி தோல்வி தாண்டி அவருடன் எப்போதும் ரசிகர்கள் பயணிப்பார்கள்.
அந்த வகையில் ஆரம்பக்காலத்தில் சிம்பு தன்னை ரஜினி ரசிகராகவும், பிறகு அஜித் ரசிகராகவும் காட்டிக்கொண்டார், ஒரு கட்டத்தில் அஜித்தை வைத்து தான் சிம்பு படத்திற்கு கூட்டம் வருகின்றது என்று பேசப்பட்டது.
அதற்கு சிம்பு இனி அஜித் ரெபரன்ஸ் என் படத்தில் இருக்காது என்றார், இதை ஒரு சிலர் வேறு திசைக்கு கொண்டு சென்று அஜித்-சிம்பு மோதல் என்பது போல் காட்டிவிட்டனர்.
இந்நிலையில் சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சாரை நான் மிகவும் மதிப்பவன், அவர் இன்று எங்கோ சென்றுவிட்டார், அவரின் உழைப்பு என்பது எல்லோரும் பார்த்தது தான்.
அப்படியிருக்க அவரை வைத்து நான் வளர்கிறேன் என்று சொல்லும் போது கொஞ்சம் வருத்தம் தான், அதனால், தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்.
ஆனால், அதையும் ஒரு சில தீய சக்திகள் திசை திருப்பினார்கள், அதே நேரத்தில் உண்மையான அஜித் ரசிகன் மற்றும் சிம்பு ரசிகன் அதை புரிந்துக்கொண்டார்கள்’ என கூறியுள்ளார்.




அஜித்துடன் ஏதும் பிரச்சனையா, அவரை சந்தித்தீர்களா? அனைத்து கேள்விகளுக்கும் சிம்புவின் அதிரடியான பதில் ..

Friday 6 July 2018


" நான் இந்த சினிமா கலைத்துறையில்
உள்ளே கஷ்டப்பட்டு நுழைந்ததைவிட
இங்கே என்னை வெளியில் தள்ள
முயற்ச்சிப்பவர்களே அதிகம்....
எப்படியென்றால்?....
--------------------------------------
நான் இந்த சினிமாவிற்க்குள்
வந்தபொழுது எல்லோரும் என்னைப்போலவே கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று தான் நினைத்துக்கொண்டு அணைவரிடமும்
என் உடன் பிறந்த பிறவிகள் என்று
அன்பாக பழகினேன்.
ஆனால் இங்கே சிலரிடத்தில் மட்டும் தான் பாசமும் நேசமும் இருந்தது...
பாதிக்கு பாதிப்பேர் மனதில் பாசம்
என்ற பேரில் விஷம் இருந்தது எனக்கு சத்தியமாய் தெரியாது...
எல்லோரும் என்னோட நன்பர்கள் என்று தான் கண்மூடித்தனமாக பழகிவிட்டேன்.
2006 - ல் நடந்த கார் பந்தயத்தில்
என்னோட முதுகெலும்புகள் உடைந்துப்போனது.....
அந்த எலும்புகள் தான் எனக்கு என்னையே யார் என்று அடையாளம் காட்டியது...
நான் அடிப்பட்டு மருத்துவமணையில் இருந்தபோது
இந்த அடியோடு அடி என்னை ஒழித்துகட்ட முடிவுசெய்து விட்டார்கள்..
".நான் வெளிமாநிலத்தில் இருந்து
தமிழகத்தில் வாழ்ந்தாலும் இன்றுவரை
வந்தோரை வாழவைக்கும் தமிழகம்
என்ற உறுதிமொழியினை என் உயிர்மூச்சென நினைத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறேன்..
அப்படிப்பட்ட என்னை ஒரு சதிகாரகூட்டம் அடியோடு தோற்க்கடிக்க முடிவுசெய்து தீவிரமாக செயல்பட்டார்கள்...
நான் கை - கால் கள் உடைந்து மருத்துவ மணையில் இருந்தபோது
பாசம் என்ற பெயரில் வேசம் போட்டுக்கூட என்னை பார்க்க ஒருவரும் வந்ததில்லை....
அதன் பிறகு தான் நான்
என்றைக்குமே அனாதைதான் என்பதை உணர தொடங்கினேன்....
.
பரவாயில்லை யாரை நம்பினாலும்
என்னோட ரசிகர்களை மட்டும் நான்
நம்பாமல் இருந்துவிடகூடாது என்று முடிவெடத்தேன்...
அதனை கருத்தில் கொண்டு
இன்றுவரை என் மனைவிற்க்கு பிறகு
என்னோட மகளுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் ரசிகர்களும்...
நான் நம்பிவந்த தமிழ் மண்ணும் தான் என்று......
இப்படி அன்றெடுத்த முடிவுதான்
இன்றுவரை என்னை நான் நானாக இருக்கவைக்கிறது...
அதனால் தான் நான் யாருடைய மனதும் புண்படுத்தும்படி நடந்துகொள்ளாமல்
எந்தஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை....
ஆனால் என்னோட ரசிகர்களின்
பலத்தின்படி என் பெயரை உச்சரிக்காமல் எந்த ஒரு நிகழ்ச்சிகளும்
நடப்பதில்லை .....
என்பதை மட்டு நான்





அஜித்குமார் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாததற்க்கான காரணம்...

சாதிக்கு எதிராக மேடைகளில் பேசும் கமல் தன் படத்திற்கு மாட்டும் 'சபாஷ் நாயுடு' என ஜாதி பெயரை பயன்படுத்தியிருப்பது ஏன் என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
இது பற்றி விளக்கமளித்துள்ள கமல் "டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை" என கூறியுள்ளார்.


சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்

Wednesday 4 July 2018

அஜித் ‘விசுவாசம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.
‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘விசுவாசம்’. இவரது இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வருகிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களை அடுத்து இவர் அஜித்தை வைத்து ‘விசுவாசம்’ படத்தை எடுத்து வருகிறார். இந்த நான்கு படங்களின் தலைப்பின் முதல் எழுத்தும் ஆங்கிலத்தில் ‘வி’என வருவதை போல இயக்குநர் திட்டமிட்டு வைத்துள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கே சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முழுவதுமாக முடித்திருக்கிறது படக்குழு.
இந்நிலையில் படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ராஜமுந்திரியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. முதற்கட்ட படப்பிடிப்பையே அங்குதான் ஆரம்பிக்க வேண்டும் என சிவா முடிவு செய்திருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆகவே திட்டமிட்டபடி ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏர்போர்ட்டில் சிவாவும் அஜித்தும் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப் படம்‘தீபாவளி ரிலீஸ்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் இடையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை கடைப்பிடித்ததால் மொத்த சினிமா துறையும் முடங்கியது. அதனால் திட்டமிட்டபட்டி ‘விசுவாசம்’ வேகம் எடுக்கவில்லை. இந்நிலையில் விஜய்யின் ‘சர்கார்’, சூர்யாவின் ‘என்ஜிகே’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. அதனால் அஜித்தின் ‘விசுவாசம்’ வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளிப் போடலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்தி கசிந்து வருகிறது. ஆனால் இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யவில்லை..



18 அடி பாயும் அஜித் மாஸ் மசாலா விஸ்வாசம் அப்டேட்...

Monday 2 July 2018

நடிகர்களின் மார்க்கெட் என்பது அவர் கொடுக்கும் ஹிட் படங்களை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் அடித்தட்டு மக்கள் வரை அதிக வரவேற்பு இருப்பது நடிகர் அஜித்திற்கு தான் என கூறியுள்ளனர்.
மேலும், இந்த கருத்துக்கணிப்பு வெறும் ரசிகர்கள் பலம் தாண்டி நடிகர்களின் அரசியல் வருகைக்காக தான் எடுத்தார்களாம்.
இதில் ரஜினி, கமலை விட அஜித்தின் பெயரை தான் பலரும் சொன்னதாக அந்த வார இதழில் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி அதே இதழில் தான் இனி அஜித் படங்களில் நடிக்கமாட்டார், அரசியலுக்கு வந்துவிடுவார் என குறிப்பிட்டுள்ளனர்.


எந்த நடிகருக்கு செல்வாக்கு அதிகம்? பிரபல வார இதழ் கருத்துக்கணிப்பு...

Sunday 1 July 2018



பிரதமர் மோடி கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 355 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பீமப்பா கடாட் என்பவர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இந்த கேள்வி தொடர்பாக பதிலளித்திருந்த பிரதமர் அலுவலகம் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக 355 கோடி செலவிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், இந்த நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 41 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு 52 நாடுகள் சுற்று பயணத்தை இதுவரை முடித்துள்ளார். மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் 165 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்று பயணத்தில் இருந்துள்ளார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் 2015-ஆம் ஏப்ரல் மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சென்ற வந்த சுற்றுப்பயண செலவு மட்டும் 31,25,78,00 ரூபாய். இதுவே அவரின் அதிகபட்ச சுற்றுப்பயண செலவு. 

அதேபோல் 2014-ஆம் ஜூன் மாதம் மேற்கொண்ட பூட்டானுக்கு சென்றுவந்த செலவு மட்டும் 2,45,27,000 ரூபாய். இதுவே அவரது குறைந்தபட்ச சுற்றுப்பயண செலவு  எனவும்  கூறப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் தெடர்பான தகவலை பிரதமர் அலுவலகம் தர மறுத்துவிட்டதாகவும் பீமப்பா கடாட் கூறியுள்ளார். 

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகள் 355 கோடி !! மோடியின் வெளிநாட்டு பயண செலவு !!

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com