HEADER

... (several lines of customized programming code appear here)
Showing posts with label Thala62. Show all posts
Showing posts with label Thala62. Show all posts

Friday, 9 May 2025



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் #Thala அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.20 நாட்களில் உலக அளவில் 310 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி : இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

Wednesday, 30 April 2025

 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் #Thala அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.20 நாட்களில் உலக அளவில் 288 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் 300 கோடியை தொடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி : 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

Sunday, 9 February 2025

 கடந்த 6ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் அஜித் நடித்திருந்தார்.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 3 Days Box Office

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் வெறித்தனமாக அமைந்திருந்தது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vidaamuyarchi 3 Days Box Office

அதன்படி, உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா:-

Wednesday, 25 September 2024

 


தமிழ் நாட்டில் இருந்து உலகளவில் ரேஸராக அறியப்படுபவர்கள் நரேஸ் கார்த்திகேயன், நடிகர் அஜித்குமார். ரேஸர் என்றாலே முதலில் கண்முன் வருவது அஜித்தின் விடாமுயற்சியும் அவரது தன்னம்பிக்கையும்தான். தன் கனவுகளை இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்று அஜித் தன் செயல்களின் வழி ஊக்குவிப்பவராகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


சினிமாவில் நடிகராக இருந்தாலும் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், ட்ரோன் வடிவமைத்தல், புகைப்படம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் காட்டி வருவதால் அவர் பன்முகக் கலைஞராக இருப்பதும் கூட அவரது ரசிகர்களுக்கு பெருமிதமாக உள்ளது.

இந்த நிலையில், துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் இப்பட ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.

இப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே மார்க் ஆண்டனி என்ற ஹிட் படம் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அஜித்குமார் பைக்கில் உலக சுற்றுப் பயணம், இந்தியாவில் பயணம் செய்வதுடன், கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில், துபாயில் உள்ள கார் ரேஸ் தளத்தில் BMW மற்றும் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகின.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ. 9 கோடி மதிப்பிலான சிவப்பு நிறத்தில் உலகின் விலையுயர்ந்த கார் பிராண்டான ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார். இதையடுத்து, அண்மையில் மற்றொரு பிரபல கார் பிராண்டான போர்ச் GT3 R 5 ரக வெள்ளை நிறத்திலான காரை அஜித்குமார் வாங்கியதாக அவரது மனைவி ஷாலினி தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். இந்தக் கார் ரூ. 4 கோடி விலை மதிப்புடையதாகும்.
இந்த நிலையில், அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிறது. அதன்படி, European GT4 Championhip -2025 மோட்டார் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க அஜித் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Federation of Motor Sports Slubs of India தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சினிமாவில் விஜய்க்குப் போட்டியாளராக அஜித் பார்க்கப்படும் நிலையில், விஜய் அரசியலுக்கு கிளம்பிய போதிலும் கோலிவுட்டில் தனிக்காட்டு ராஜாவாக ஆளுமை செய்ய KGF புகழ் பிரான்சத் நீல் இயக்கத்தில் ஒரு PAN INDIAN படம் 2025 இறுதியில் நடிக்க இருக்கிறார்

தல ஆட்டம் ஆரம்பம்; கார் ரேஸ்க்கு பிறகு PAN INDIA படத்தில் தல, இறங்கி அடிக்க முடிவு செய்த அஜித்:-

Friday, 8 March 2024



 சென்னை: நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் அஜித்தின் உடல் நலம் எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது ஆகிறார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது 'விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் அஜர்பைஜான் சென்று வருகிறார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் பிற இடங்களை சுற்றி பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது. அதாவத மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும்அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வலைதளங்களில் பிரார்த்தனையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின்
காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது.

இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது? டிஸ்சார்ஜ் எப்போது? குட்நியூஸ்:-

Tuesday, 5 March 2024


பெயரும் புகழும் வாங்குவதற்காகவே தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் நம் நடிகர்கள் இருந்த போதும் வெற்றியின் போதை தலைக்கேறாமல் கண்ணியத்துடன் நடப்பது சில நடிகர்கள் மட்டுமே அவ்வாறு தான் நடிகனாக இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான் என பந்தா காட்டாத ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர்  துப்பறியும் கதைகளை கொண்ட பல வெற்றி படங்களில் நடிகராகவும் பின்னாளில் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களுடன், முரட்டுக்காளை அருணாச்சலம் போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த காலத்தில் இருந்து இன்று வரை காதல் மன்னன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன் மட்டுமே. எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என தனி பெரும் ஆளுமைகளுக்கு இடையே காதல்படங்கள் மூலம் ரசிகர்களை வசியப் படுத்தியவர் ஜெமினி கணேசன். தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கனம் அல்லாது 90ஸ் காலகட்டம் வரை வெள்ளி திரை, சின்னத்திரை என இளம் நடிகர்களுடன் நடித்து பெயர் வாங்கிப் போனார் ஜெமினி. 

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நகைச்சுவையாளர் நாகேஷ் ஆவார். உலக நாயகன் கமல் நாகேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை மட்டுமே தனது ஆபிசில் உள்ள பர்சனல் அறையில் வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிடும் நாகேஷ் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் தனது சக நடிகர்கள் வரை அனைவரிடமும் சகஜமாக பழகி கவுண்டர் காமெடி அடிப்பாராம்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைக்கு முன் அல்ல, திரைக்குப் பின்னாலும் இவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சக நடிகர்கள் பயந்து ஓடும் அளவு சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளுவாராம் கவுண்டமணி.  இன்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் கவுண்டமணி ஆபிசுக்கு சென்று புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். எந்த ஒரு தலைக்கனமோ கெத்தோ இல்லாமல் இயல்பான மனிதர் போல் அனைவரிடமும் பழகுகிறார் கவுண்டமணி.


பழகும் அனைவரிடமும் இனிமையானவர் என்று பெயரெடுத்தவர் அஜித். இன்றைய ஊடகங்கள் இவரை பற்றி பல்வேறு புரளி பேசினாலும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அசராமல் அமைதி காத்து வருபவர் அஜித். விடாமுயற்சி சூட்டிங் என்பது வெளிநாட்டில் அஜித்தின் ரசிகர்கள் அவரை காண படையெடுத்து வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோவாக விளங்கும் அஜித் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியாதவாறு  கஷ்டத்தில் உள்ள பலருக்கும் கை கொடுத்து உதவுவதில் வல்லவராம்.

பேரும் புகழும் இருந்தாலும் பந்தா காட்டாத 5 நடிகர்கள்.. அஜித்தை கொண்டாட இதுவும் ஒரு காரணம்:-

Wednesday, 28 February 2024

 ஒவ்வொரு படங்களின் வசூல் தான், அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. மேலும் அதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இறுகிறுகிறார்கள். அதுவும் முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் வசூல் என்றால் சொல்லவே தேவையில்லை.

ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ | Top Actors 50 Crore Movies List

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இதில் முதலிடத்தை கமலின் இந்தியன்  பிடித்துள்ளது. ஆம், ஷங்கர் கமல் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகும்.

இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.

இதன்பின் விக்ரமின் அந்நியன் மூன்றாவது இடத்தையும், அஜித்தின் பில்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ பாருங்க..

  • இந்தியன் 2 - ரூ. 55 கோடி
  • படையப்பா - ரூ. 60 கோடி
  • அந்நியன் - ரூ. 63 கோடி
  • வரலாறு - ரூ. 60 கோடி
  • பில்லா - ரூ. 75 கோடி
  • சிங்கம் - ரூ. 53 கோடி
  • வேலாயுதம் - ரூ. 66 கோடி
  • வேலையில்லா பட்டதாரி - ரூ. 55 கோடி
  • ரெமோ - ரூ. 55 கோடி 
  • காஷ்மோரா - ரூ. 50 கோடி
  • மாநாடு - ரூ. 87 கோடி



ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ :-

Friday, 23 February 2024

 


ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html


Thala Ajith: நடிகர் அஜித்தை பற்றி சில தினங்களுக்கு முன் வலைப்பேச்சு அந்தனன் மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது பொதுவாழ்க்கைக்கு என வந்த பிறகு யார் எப்படி போனால் எனக்கென என இருப்பது சரியா? அஜித் சமீபகாலமாக அப்படித்தான் செய்து வருகிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதாவது அஜித்தை புறக்கணிப்போம் என கூறியிருந்தார்.

 இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவருடைய யு டியூப் சேனலில் சில தகவல்களை கூறியிருக்கிறார்

அதாவது வலைப்பேச்சு அந்தனன் பேசிய முழு வீடியோவையும் நான் பார்க்கவில்லை. எனினும் நான் பார்த்த சில காட்சிகளில் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ‘யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. எங்கே வர வேண்டும், வரக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். எந்தவொரு நடிகருக்கும் தனிப்பட்ட கொள்கை என ஒன்று இருக்கும். அதன் படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள்’ என கூறினார்.

தல அஜித்தை கடுமையாக விமர்சித்த பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்

Tuesday, 20 February 2024

 


ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html

சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.

கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வாழு வாழ விடு என்று எங்கள் தலைவர் பாதையில் அமைதியாக காந்தி வழியில் பயணிக்கிறோம் எங்களை சிண்டி பார்க்காதே அடிக்கு அடி-னு நேதாஜி வழியில் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது…. என கன்னடகளை தெரிவித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜீத் குமார் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கைகோர்க்க உள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் யென்னை அறிந்தால் நடிகரின் தீவிர ரசிகர், மேலும் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகருக்கு அடிக்கடி ஓட்ஸ் கொடுத்தார். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மறைக்கப்பட்ட போதிலும், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருந்தது...

டுபாக்கூர் வலைப்பேச்சு அந்தனனுக்கு மரண எச்சரிக்கை விடுத்த அஜித் ரசிகர்கள் !:-

Wednesday, 31 January 2024

 



அஜித் நடிப்பில் உருவாகி வரும் 62வது படமான விடாமுயற்சியில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுனின் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இதனால், விடாமுயற்சி படத்திலும் இவர்களது கூட்டணி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படம் ஒரு ரோட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் அர்ஜுனை அசத்திய சம்பவம்படப்பிடிப்பின் போது, அஜித் ஒரு சர்ப்ரைஸ் சம்பவத்தை நடத்தி அர்ஜுனை அசத்தினார். அதன்படி, படப்பிடிப்பின் நடுவே அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரை ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தினார். இந்த போட்டோ ஷூட் பார்த்து அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்தற்போது வரை இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு ரெடியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் என்றும், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படங்கள்விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் தான் இந்த அப்டேட்கள் அபிஸியலாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்தாராம்இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்துள்ளாராம் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


மிரள வைக்கும் விடாமுயற்சி அப்டேட்!! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் !! வெளியான தரமான மாஸ் அப்டேட் இதோ !!

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com