HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 30 April 2018

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவருக்கு நாளை 47-வது பிறந்தநாள், இதை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பேனர், போஸ்ட்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில் இணையத்திலும் டாக் கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதில் HBDThalaAJITH என்ற டாக் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டுவிட்ஸ் வந்துள்ளது.
இதற்கு முன் வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்று கூறப்படுகின்றது, மேலும், 5 மில்லியன் டுவிட்ஸ் இதில் பதிவு செய்ய அஜித் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.


ஒரு மணி நேரத்தில் இத்தனை டுவிட்ஸா- சாதனை படைத்த அஜித் ரசிகர்கள்...

Sunday 29 April 2018




அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். பிரபலம் என்றாலே இந்த விஷயங்கள் எல்லாம் செய்ய வேண்டும், இப்படியெல்லாம் ரசிகர்களை செய்ய சொல்ல வேண்டும் என்ற வழக்கமான முறை இருக்கிறது. அதுபோல் தான் பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் உடைத்து இதுதான் சரி, இப்படி செய்தால் தவறில்லை என்று பல விஷயங்களை சினிமாவில் மாற்றியவர் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித். பெரிய நடிகர்கள் கூட பேச பயப்படும் போது 2010ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் முன்பு தைரியமாக ஒரு விஷயத்தை பேசினார், அதற்கு நாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் ரஜினி அவர்களும் எழுந்துநின்று கைத்தட்டல்கள் கொடுத்தார்.
அதேபோல் ரசிகர் மன்றம் இல்லையென்றால் சினிமா பயணம் முடங்கிவிடுமோ என்று பெரிய நடிகர்களே பயப்படும் நேரத்தில் 2010ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அஜித் ஒரு அதிர்ச்சியான அறிக்கை வெளியிட்டார். இனி என் பெயரின் கீழ் இருக்கும் நற்பணி மன்றங்களை கலைக்கிறேன் என்ற பதிவு தான்.
அவரது ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் ஏன் இப்படி செய்துவிட்டார் அவரது சினிமா பயணம் இனி இருக்காதே என்று விமர்சித்தனர். ஆனால் அங்கு தான் அவரை ரசிகர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். நற்பணி மன்றம் இல்லையென்றாலும் நாங்கள் உங்களது ரசிகர்கள், எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று இப்போது அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.
அப்படி சினிமா பயணத்தில் ஒரு பெரிய முடிவு எடுத்து அஜித் அறிக்கை வெளியிட்ட நாள் இன்று.

தமிழ் சினிமாவே அஜித் முடிவை கண்டு அதிர்ந்த ஒரு நாள் இன்று..

Thursday 26 April 2018

தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் விரைவில் விசுவாசம் படம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கே தெரியும் ‘தல’ என்றால் யார் என்று, அந்த அளவிற்கு தல என்ற சொல் பிரபலம்.
அப்படியிருக்க ஐபிஎல் தொடங்கியதில் இருந்து கிரிக்கெட் வீரர் தோனியையும் ‘தல’ என்று தான் அனைவரும் அழைத்து வருகின்றனர்.
பல ரசிகர்கள் இவர் சினிமாவிற்கு தல, அவர் கிரிக்கெட்டிற்கு தல என்று ஜாலியாக சொல்லி வருகின்றனர், இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கத்தில் நேற்று ‘ஒரே தல’ என்று தோனியை குறிப்பிட, இது அஜித் ரசிகர்களிடம் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தல சொன்ன  அது எங்க தல அஜித் மட்டும் தான்.




அஜித் ரசிகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்..

Wednesday 25 April 2018

சிறுத்தை சிவா – அஜித்குமார் கூட்டணியில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “விஸ்வாசம்”. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவிருந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் நடைபெற்ற ஸ்ட்ரைக் காரணமாக இரண்டு மாதங்கள் தள்ளி போயுள்ளது படப்பிடிப்பு.
மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால், படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. எனவே ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் நான்கு மாத காலத்திற்குள் முடித்தாக வேண்டிய சூழ்நிலையில்படக்குழு சிக்கியுள்ளது.
சிறுத்தை சிவா-வுக்கு நான்கு மாத காலம் என்பது அதிகம் என்றாலும், நடிகை நயன்தாரா இந்தபடத்தின் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். ஆனால், சிரஞ்சீவியின் சை-ரா நரசிம்ஹ ரெட்டி படத்தில் தற்போது நடித்து வரும் நயன்தாரா விஸ்வாசம் படத்தில் எப்போது இணைவார் என்று தெரியவில்லை.
இதனால், தீபாவளிக்கு படம் ரிலீசாகுமா.? என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்...

இந்த தீபாவளிக்கு விஸ்வாசமாக தல வருவாரா? கடும் நெருக்கடியில் சிவா டீம்...

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மய்யம் என்ற் கட்சியை தொடங்கினார். மதுரையில் மாநாட்டுடன், கட்சி பெயரையும் அறிவித்து, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இதில் சில் முக்கிய பிரமுகர்கள் உயர் மட்ட குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ராஜ சேகர் என்பவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது மற்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவருக்கு கட்சியில் உண்டான மதிப்பு கிடைக்கவில்லை என்பதால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம். அதோடு இவர் மூலம் கட்சியில் இணைந்த சில முக்கிய உறுப்பினர்களும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
இந்நிலையில் கமல் கட்சியில் இருந்து நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகவுள்ளார் என தகவல் பரவிவருகிறது. ஆனால் அதுபற்றிய விளக்கம் இதுவரை ஸ்ரீப்ரியாவின் தரப்பில் இருந்து தற்போது வரை வரவில்லை.

கமல்ஹாசனின் மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்!

Tuesday 24 April 2018



#Thala #Diwali
அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்க உள்ளப் படம், `விஸ்வாசம்’. சமீபத்திய அஜித் படங்களில் இல்லாத வகையில் டைட்டில் ஃபிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது. படப்பிடிப்புக்கு முன்னரே, படத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்த நிலையில் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
கோலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் அஜித், நயன்தாரா மட்டுமல்லாமல் யோகிபாபு, ரோபோ சங்கர் , தம்பி ராமையா எனப் பல பிசியான ஆள்களின் கால்ஷீட் தேதியையும் பெற்றிருக்கிறார்கள். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்துவதற்காக, பிரமாண்ட செட் ஒன்று மார்ச் மாதம் முதலே படக் குழுவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மே 4 முதல் ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. பல நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை வாங்கிவைத்திருந்த டைரக்டர் சிவா, இப்போது கால்ஷீட்டால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்துவருகிறார். படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஷூட்டிங் ஆரம்பித்து ஆறு மாதத்துக்குள் படத்தை வெளியிடும் பெரிய சாகசத்தைச் செய்ய உள்ளனர், அஜித் அண்ட் கோ.

தல தீபாவளிக்காக விஸ்வாசம் டீம் செய்யப்போகும் சாகசம்...

Monday 23 April 2018

நம்புனவங்களை நட்டாத்துல விடுற வழக்கம் எங்க தல-க்கு இல்ல… என்று அஜீத்தின் ரசிகர்கள் மார்தட்டிக் கொள்ளலாம். ஏன்? சிவாவுக்காக அஜீத் போடுகிற ஸ்கெட்ச் அப்படி. விவேகம் படத்தின் கலெக்ஷனில் துவங்கி, விமர்சனம் வரைக்கும் அஜீத் ரசிகர்களை தவிர மீதி அத்தனை பேருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் ‘என் தல- இமயமல…’ என்று பேசி கொஞ்சம் கூட சுருங்குவதற்கு தயாராக இல்லை ரசிகர்கள். இருந்தாலும் சிவாவுடன் திரும்பவும் அஜீத் இணைவதற்கு அவர்கள் பச்சைக் கொடி காட்டுவார்களா? என்கிற கேள்வி இருந்த நிலையில், ‘நீங்க என்ன காட்றது? நானே காட்றேன்’ என்று கிளம்பியிருக்கிறார் அஜீத்.
ரெகுலராக தமிழில் படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள் மீண்டும் இந்த காம்பினேஷனை விரும்பப் போவதில்லை. அதற்காக சிவாவை விட்டுவிடவா முடியும்? இந்த நேரத்தில் ஓரெழுத்து ஆங்கில எழுத்துச் சேனல் ஒன்று அஜீத்தை நாடியதாம். “16 வயதினிலே மயிலு கணவர் போனிக்கபூருடன் இணைந்து தமிழ் படங்கள் சிலவற்றை தயாரிக்கிற முடிவில் இருக்கோம். முதல் சைன் உங்களிடமிருந்து வேணும்” என்றதாம். நன்றாக யோசித்து பார்த்த அஜீத், மேற்படி சேனலுக்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் படம் தயாரிக்கும் போது ஆயிரம் சவுகர்யங்கள் உண்டு. முதல் சவுகர்யம், பணத்தை அள்ளிக் கொட்டுவார்கள். எதிலும் கோடு போட்டது போல சரியாக நடந்து கொள்வார்கள். பேசிக்கலாகவே கார்ப்பரேட் ஒழுங்கு உள்ளவர் அஜீத். அப்புறமென்ன? க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.
ஆக, சிவாவுக்கு நல்ல நேரம் இன்னும் முடியல!



தொலைக்காட்சியுடன் கை குலுக்கும் அஜீத்! கோடம்பாக்கத்தில் பரபரப்பு...

நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். ட்விட்டர் மூலம் பல விசயங்களுக்காக குரல் கொடுத்தவர் தற்போது நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்.
அண்மையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி நல்ல வரவேற்பை பெற்றார். மக்கள் நீதி மய்யம் என அவர் கட்சிக்கு பெயர் சூட்டி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
அதே வேளையில் அவர் அவருக்கு இந்தியன் 2 , சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 என படங்கள் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இனி அவர் 24-ஆம் தேதி அடுத்த கட்ட அறிவிப்பு வரும் என்று கூறி நிறைவுசெய்தார்.



எதிர்பார்ப்புக்கு நடுவில் கமல்ஹாசனின் அடுத்த பெரிய பிளான்!...

Sunday 22 April 2018

ஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பெரிய நடிகர்களின் படங்கள் பற்றிய விவரங்கள் நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லையே என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது.
இந்த நிலையில் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 4ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி நடைபெறுகிறது.
இதுநாள் படத்தை பற்றி எந்த தகவலும் வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.




விசுவாசம் படத்தின் அப்டேட் வந்தாச்சுதீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி நடைபெறுகிறது - போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம். அவர்களது இதுவரை ஒன்றாக வேலை செய்த படங்கள் அனைத்தும் செம ஹிட். இப்படமும் அப்படங்கள் போன்ற வரவேற்பை கண்டிப்பாக பெறும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
இந்த நேரத்தில் இப்பட படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே தீபாவளி ரிலீஸ் என்றனர். ஆனால் நடுவில் திடீர் ஸ்ட்ரைக் வந்ததால் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பட ரிலீஸ் தள்ளிப்போகுமோ என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது.
தற்போது என்னவென்றால் படக்குழுவினர் இன்னும் நேரம் இருப்பதால் முதலில் பிளான் செய்தது போல் கண்டிப்பாக படம் இவ்வருட தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்படுகிறது.





விஜய்-முருகதாஸ் பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?- வெளியான தகவல்...

Saturday 21 April 2018

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் நடிக்க வந்த போதே தன் சம்பளத்தில் இவ்வளவு பணம் உதவிக்கு என்று எடுத்து வைப்பாராம்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில கருத்துக்களை பக்ரிந்துள்ளார். இதில் ‘ஜெயசங்கர் மகன் விஜய் சங்கர் கண் மருத்துவமனை வைத்துள்ளார்.

இதுவரை விஜய் சங்கர் 60 ஆயிரம் பேருக்கு கண் கிசிச்சை செய்துள்ளார், இதில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அஜித் தான் பணம் கொடுத்து உதவியுள்ளாராம்.

இதை விஜய் சங்கரே என்னிடம் சொன்னார்’ என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


5000 பேர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய தல அஜித்- வெளிவந்த உண்மைத்தகவல்



ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை அதிர்ச்சியில் விஞ்ஞானிகள். 5 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு உலகின் பலதேசங்களில் இருந்து புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்த கிணற்றுநீரை ஒரு நபர் குறைந்தது 20 லிட்டராவது
தனது நாட்டிற்கு எடுத்து கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக15 நாட்கள் இந்த நீரை இறைத்தது.ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி
ராட்சத மோட்டார்கள் மூலம் இந்தக் கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும்அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றிலிருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தபோதும் இதன் அளவு குறைவதில்லை.
சுவையும் மாறியதில்லை.
ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20லட்சம்
மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக்
கிணற்றில் இருந்து தான் குடிநீர்வினியோகிக்கப்படுகிறது.
குறைந்த ஆழம் உள்ள இந்தக்கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும். எந்த ஊற்றாக இருந்தாலும் சில/பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும். ஜம்ஜம் கிணறு அருகே எந்த தாவரமும் வளருவதில்லை. எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின்
போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.
ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.
கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக்
கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளைஅழிக்க வல்லது.
அங்கே அற்புதம் நடக்கிறது,அல்லாஹ்வின் அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர்
எத்தனை வருடம் பிடித்து வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர்அதிசியம்தான்……….
ஜம்ஜம் நீர் பற்றிய அதிசய தகவல்...!
ஆழம் : 30 மீட்டர் வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர். பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள். ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்...!
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
ஸம் ஸம் தண்ணீர் - இதை விட ஒரு அதிசயம் இல்லைஅரேபியாவில் ஸம் ஸம் தண்ணீர் என்பது அனைவராலும் அருந்த கூடியது...



ஜம்ஜம் தண்ணீர்..மெக்காவின்.. அதிசயம்..உண்மை . நான் படித்து அதிசயித்து அறிந்ததை பகிர்கிறேன்... அ.அப்பர்சுந்தரம். மயிலாடுதுறை.

Friday 20 April 2018


பதில்:நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப்
பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர்.
ﺃﺑﺠﺪ ﻫﻮﺯ ﺣﻄﻲ ﻛﻠﻤﻦ ﺳﻌﻔﺺ ﻗﺮﺷﺖ ﺛﺨﺬ ﺽ ﻅ ﻍ
ﺍ 1 -
ﺏ 2 -
ﺝ 3 -
ﺩ 4 -
ﻩ 5 -
ﻭ 6 -
ﺯ 7 -
ﺡ 8 -
ﻁ 9 -
ﻱ 10 –
ﻙ 20 -
ﻝ 30 -
ﻡ 40 -
ﻥ 50 -
ﺱ 60 -
ﻉ 70 –
ﻑ 80 -
ﺹ 90 -
ﻕ 100 -
ﺭ 200 -
ﺵ 300 -
ﺕ 400 -
ﺙ 500 -
ﺥ 600 -
ﺫ 700 -
ﺽ 800 -
ﻅ 900 -
ﻍ 1000 -
இப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் கொடுத்தனர்
அப்ஜத் எனும் இக்கணக்கின் அடிப்படையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குரிய எண்களைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 786 ஆகும். 786 என்பதைப் பயன்படுத்தினால் அது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வைப் பயன்படுத்தியதற்கு ஒப்பாகும் என்ற அடிப்படையில் தான் இவ்வழக்கம் சில முஸ்லிம்களிடம் புகுந்தது.
இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமமுல்லை என்பதை விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணைக் குறியீடாகப் பயன்படுத்துவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்தது அல்ல. அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியதில்லை. அவர்கள் முன்னிலையில் மற்றவர்கள் பயன்படுத்தவும் இல்லை. எனவே இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
உண்மையில் அப்ஜத் எனப்படும் இக்கணக்கு யூதர்களின் ஹிப்ரு மொழியை அடிப்படையாகக் கொண்டு யூதர்கள் உருவாக்கி வைத்திருந்ததாகும். அதை அப்படியே காப்பியடித்துத் தான் அறிவீனர்க்ள் இதை அரபு மொழியிலும் நுழைத்து விட்டனர்,
அரபு மொழியின் அகர வரிசையை நாம் அறிவோம்.
அரபு வரிசைப்படி ﺃ அப்ஜத் வரிசைப்படி ﺃ
அரபு வரிசைப்படி ﺏ அப்ஜத் வரிசைப்படி ﺏ
அரபு வரிசைப்படி ﺕ அப்ஜத் வரிசைப்படி ﺝ
அரபு வரிசைப்படி ﺙ அப்ஜத் வரிசைப்படி ﺩ
அரபு வரிசைப்படி ﺝ அப்ஜத் வரிசைப்படி ﻩ
அரபு வரிசைப்படி ﺡ அப்ஜத் வரிசைப்படி ﻭ
அரபு வரிசைப்படி ﺥ அப்ஜத் வரிசைப்படி ﺯ
அரபு வரிசைப்படி ﺩ அப்ஜத் வரிசைப்படி ﺡ
அரபு வரிசைப்படி ﺫ அப்ஜத் வரிசைப்படி ﻁ
அரபு வரிசைப்படி ﺭ அப்ஜத் வரிசைப்படி ﻱ
அரபு வரிசைப்படி ﺯ அப்ஜத் வரிசைப்படி ﻙ
அரபு வரிசைப்படி ﺱ அப்ஜத் வரிசைப்படி ﻝ
அரபு வரிசைப்படி ﺵ அப்ஜத் வரிசைப்படி ﻡ
அரபு வரிசைப்படி ﺹ அப்ஜத் வரிசைப்படி ﻥ
அரபு வரிசைப்படி ﺽ அப்ஜத் வரிசைப்படி ﺱ
அரபு வரிசைப்படி ﻁ அப்ஜத் வரிசைப்படி ﻉ
அரபு வரிசைப்படி ﻅ அப்ஜத் வரிசைப்படி ﻑ
அரபு வரிசைப்படி ﻉ அப்ஜத் வரிசைப்படி ﺹ
அரபு வரிசைப்படி ﻍ அப்ஜத் வரிசைப்படி ﻕ
அரபு வரிசைப்படி ﻑ அப்ஜத் வரிசைப்படி ﺭ
அரபு வரிசைப்படி ﻕ அப்ஜத் வரிசைப்படி ﺵ
அரபு வரிசைப்படி ﻙ அப்ஜத் வரிசைப்படி ﺕ
அரபு வரிசைப்படி ﻝ அப்ஜத் வரிசைப்படி ﺙ
அரபு வரிசைப்படி ﻡ அப்ஜத் வரிசைப்படி ﺥ
அரபு வரிசைப்படி ﻥ அப்ஜத் வரிசைப்படி ﺫ
அரபு வரிசைப்படி ﻭ அப்ஜத் வரிசைப்படி ﺽ
அரபு வரிசைப்படி ﻩ அப்ஜத் வரிசைப்படி ﻅ
அப்ஜத் கணக்கு அந்த வரிசைப்படி அமைக்கப்படவில்லை.
அரபு மொழியிலும் ஹிப்ரு மொழியிலும் அலிப் முதல் எழுத்தாகவும் பா இரண்டாம் எழுத்தாகவும் உள்ளது.
ஆனால் அரபு மொழியில் முன்றாவது எழுத்து தா ஆகும். ஹிப்ரு மொழியில் மூன்றாவது எழுத்து ஜீம் ஆகும்.
மேற்கண்ட அப்ஜத் கணக்கைக் கவனித்தால் மூன்றாவது எழுத்தாக ஜீம், நான்காவது எழுத்தாக தால், ஐந்தாவது எழுத்தாக ஹா இப்படி முழுக்க முழுக்க ஹிப்ரு மொழி வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
யூதர்களின் ஹிப்ரு மொழி வரிசைப்படி இது அமைந்திருப்பதும் மேற்கண்ட ஹிப்ரு மொழியில் வழங்கப்பட்டுள்ள அதே எண்களே அரபு எழுத்துக்களுக்கும் வழங்கி இருப்பதும் இது யூதர்களின் வழிமுறை என்பதற்குப் போதிய சான்றாகும்.
ﺫ ﺽ ﺵ ﺥ ﻍ ﺙ) ஆகிய எழுத்துக்கள் ஹிப்ரு மொழியில் இல்லாததால் அதற்கு மட்டும் இந்த அறிவீனர்கள் எண்கள் அமைத்தனர்)
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார்.
786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.
அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.
அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீன் என்று எழுதி அது முஸ்லிமல்லாதவர்களின் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியுள்ளாகள்.
(பாக்க அல்குஆன் 27.30)
ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻣﻘﺎﺗﻞ ﺃﺑﻮ ﺍﻟﺤﺴﻦ ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺃﺧﺒﺮﻧﺎ ﻳﻮﻧﺲ ﻋﻦ ﺍﻟﺰﻫﺮﻱ ﻗﺎﻝ ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺒﻴﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻋﺘﺒﺔ ﺃﻥ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺃﺧﺒﺮﻩ ﺃﻥ ﺃﺑﺎ ﺳﻔﻴﺎﻥ ﺑﻦ ﺣﺮﺏ ﺃﺧﺒﺮﻩ ﺃﻥ ﻫﺮﻗﻞ ﺃﺭﺳﻞ ﺇﻟﻴﻪ ﻓﻲ ﻧﻔﺮ ﻣﻦ ﻗﺮﻳﺶ ﻭﻛﺎﻧﻮﺍ ﺗﺠﺎﺭﺍ ﺑﺎﻟﺸﺄﻡ ﻓﺄﺗﻮﻩ ﻓﺬﻛﺮ ﺍﻟﺤﺪﻳﺚ ﻗﺎﻝ ﺛﻢ ﺩﻋﺎ ﺑﻜﺘﺎﺏ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺮﺉ ﻓﺈﺫﺍ ﻓﻴﻪ ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ﻣﻦ ﻣﺤﻤﺪ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﺇﻟﻰ ﻫﺮﻗﻞ ﻋﻈﻴﻢ ﺍﻟﺮﻭﻡ ﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻰ ﻣﻦ ﺍﺗﺒﻊ ﺍﻟﻬﺪﻯ ﺃﻣﺎ ﺑﻌﺪ
நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுதியுள்ளனர்.
பார்க்க : புகாரி 6261
நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.


786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?...

அஜித் சினிமாவில் ஸ்கீரின் மூலமே முகத்தை காட்டி மொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர். தனி விளம்பரமோ, மக்கள் மன்றமோ வேண்டாம் என ஒதுங்கியிருப்பவர்.
ஒவ்வொரு நாளையும் பரபரப்பாக்கும் சமூக வலைதளங்கள் கூட வேண்டாம் நிம்மதியே போதும் என இருக்கிறார். ஆனால் அவரை வைத்து ரசிகர்கள் மிகவும் கொண்டாடுவார்கள்.
ஒரு முறை அஜித் தனது மேலாளருக்கு போன் கால் செய்திருக்கிறார். அப்போது வேறு ஒரு நபர் போனை எடுத்து பேசி, உங்கள் மேனேஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லியிருக்கிறார்.
உடனே அஜித் அவரிடம் முகவரியை வாங்கி இரவில் தானெ காரில் அந்த ஏரியாவுக்கு சென்றாராம். ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு டீக்கடை இளைஞரிடம் வழி கேட்டிருக்கிறார்.
ஆனால் அவருக்கு நேரில் அஜித்தை பார்த்து அதிர்ச்சி. துக்கம் நடந்த இடத்திற்கு சென்ற அஜித் திரும்பு வரும் போது அங்கிருந்த ஒருவரை வேறு காரில் தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.
மறுபடியும் அதே டீக்கடைக்கு சென்று அந்த இளைஞரிடம் தானே பணத்தை கொடுத்து துக்கவீட்டில் எல்லோருக்கு டீ கொடுங்கள். உங்களை இவர் அழைத்து சென்று மீண்டும் கடையில் இறக்கி விடுவார் என சொல்லிவிட்டு அஜித் போய்விட்டாராம். இது அந்த கடைக்காரருக்கும், உடன் வந்த துக்க வீட்டுக்காரருக்கும் பெரும் இன்பதிர்ச்சியாக இருந்ததாம்.


உண்மையாகவே அஜித் செய்த அபூர்வ செயல்! ஆச்சர்யத்தின் உச்சம்...

Thursday 19 April 2018


🕸🕸🕸🕸🕸🕸🕸

1. *PAN*
Permanent Account Number.

2. *PDF*
Portable Document format.

3. *SIM*
Subscriber Identity Module.

4. *ATM*
Automated Teller Machine.

5. *IFSC*
Indian Financial System Code.

6. *FSSAI(Fssai)*
Food Safety & Standards
Authority of India.

7. *Wi-Fi*
Wireless Fidelity.

8. *GOOGLE*
Global Organization Of
Oriented Group
Language Of Earth.

9. *YAHOO*
Yet Another Hierarchical
Officious Oracle.

10. *WINDOW*
Wide Interactive Network
Development for
Office work Solution.

11. *COMPUTER*
Common
Oriented Machine.
Particularly United
and used under Technical
and Educational Research.

12. *VIRUS*
Vital Information
Resources Under Siege.

13. *UMTS*
Universal
Mobile Telecommunicati ons
System.

14. *AMOLED*
Active-Matrix Organic Light-
Emitting diode.

15. *OLED*
Organic
Light-Emitting diode.

16. *IMEI*
International Mobile
Equipment Identity.

17. *ESN*
Electronic
Serial Number.

18. *UPS*
Uninterruptible
Power Supply.

19. *HDMI*
High-Definition
Multimedia Interface.

20. *VPN*
Virtual Private Network.

21. *APN*
Access Point Name.

22. *LED*
Light Emitting Diode.

23. *DLNA*
Digital
Living Network Alliance.

24. *RAM*
Random Access Memory.

25. *ROM*
Read only memory.

26. *VGA*
Video Graphics Array.

27. *QVGA*
Quarter Video
Graphics Array.

28. *WVGA*
Wide video Graphics Array.

29. *WXGA*
Widescreen Extended
Graphics Array.

30. *USB*
Universal Serial Bus.

31. *WLAN*
Wireless
Local Area Network.

32. *PPI*
Pixels Per Inch.

33. *LCD*
Liquid Crystal Display.

34. *HSDPA*
High Speed Down link
Aacket Access.

35. *HSUPA*
High-Speed Uplink
Packet Access.

36. *HSPA*
High Speed
Packet Access.

37. *GPRS*
General Packet
Radio Service.

38. *EDGE*
Enhanced Data Rates
for Globa Evolution.

39. *NFC*
Near
Field Communication.

40. *OTG*
On-The-Go.

41. *S-LCD*
Super Liquid
Crystal Display.

42. *O.S*
Operating System.

43. *SNS*
Social Network Service.

44. *H.S*
HOTSPOT.

45. *P.O.I*
Point Of Interest.

46. *GPS*
Global
Positioning System.

47. *DVD*
Digital Video Disk.

48. *DTP*
Desk Top Publishing.

49. *DNSE*
Digital
Natural Sound Engine.

50. *OVI*
Ohio Video Intranet.

51. *CDMA*
Code Division
Multiple Access.

52. *WCDMA*
Wide-band Code
Division Multiple Access.

53. *GSM*
Global System
for Mobile Communications.

54. *DIVX*
Digital Internet
Video Access.

55. *APK*
Authenticated
Public Key.

56. *J2ME*
Java 2
Micro Edition.

57. *SIS*
Installation Source.

58. *DELL*
Digital Electronic
Link Library.

59. *ACER*
Acquisition
Collaboration
Experimentation Reflection.

60. *RSS*
Really
Simple Syndication.

61. *TFT*
Thin Film Transistor.

62. *AMR*
Adaptive
Multi-Rate.

63. *MPEG*
Moving Pictures
Experts Group.

64. *IVRS*
Interactive
Voice Response System.

65. *HP*
Hewlett Packard.

*Do we know actual full form*
*of some words???*

66. *NEWS PAPER =*
North East West South
Past and Present
Events Report I.

67. *CHESS =*
Chariot,
Horse,
Elephant,
Soldiers.

68. *COLD =*
Chronic,
Obstructive,
Lung,
Disease.

69. *JOKE =*
Joy of Kids
Entertainment.

70. *AIM =*
Ambition in Mind

71. *DATE =*
Day and Time Evolution.

72. *EAT =*
Energy and Taste.

73. *TEA =*
Taste and Energy
Admitted.

74. *PEN =*
Power Enriched in Nib.

75. *SMILE =*
Sweet Memories
in Lips Expression.

76. *ETC. =*
End of
Thinking Capacity.

77. *OK =*
Objection Killed.

78. *Or =*
Orl Korec
(Greek Word)

79. *Bye =*♥
Be with You Everytime.

*share*
*These meanings*
*as majority of us don't know*
    👌👌👌👌👌
            👌👌





*Useful information*

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்து டுவிட் வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக நூதனமான போராட்டங்களை திமுகவின் மா.சுப்பிரமணியன் கையில் எடுத்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற உள்ள நூதன போராட்டங்களில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜா கர்நாடகாவுக்கு தேர்தல் பணியாற்ற சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்துப் பதிவு செய்திருந்தார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.


பாஜகவினரே அதிருப்தி

அவரது விமர்சனத்தை பாஜகவினரே ஏற்கவில்லை. முகம் சுளித்தனர். இந்த நிலையில், ராஜாவின் பதிவு திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் ராஜாவின் உருவபொம்மையை எரித்தும், அவரது படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை ஆக்ரோஷமாக காட்டி வருகிறார்கள் திமுகவினர்.

எச்சில் துப்பும் போராட்டம்

இந்த போராட்டம் ஓயாத நிலையில், தென்சென்னை மாவட்ட திமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரமணியன் தலைமையில் இன்று மாலை ராஜாவுக்கு எதிராக எச்சில் துப்பும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள்னர். எச்ச ராஜாவை எச்சில் தொட்டியில் தூக்கி எறிவோம் என்கிற வாசகத்துடன் அவரது உருவப்படம் பொறித்த ஸ்டிக்கர்கள் தயாரித்துள்ளனர்.

தென் சென்னை குப்பை தொட்டிகள்

இந்த ஸ்டிக்கரை தென் சென்னையிலுள்ள அனைத்து குப்பைத் தொட்டிகளிலும் ஒட்டவிருக்கறார்கள். அதன்பின், ராஜாவின் முகத்தில் காரித்துப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். மா.சு தலைமையில், எச்.ராஜாவை அசிங்கப்படுத்தும் இந்த போராட்டம் பரபரப்பாக நடக்கவிருக்கிறது.






சென்னை மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் அருகே எச்ச.ராஜா உருவ பொம்மையை இன்று(19.04.2018) அதிகாலை தூக்கில் தொங்கவிட்டனர் ...

தல அஜித்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரின் படம் வெளியானால் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த காவிரி போராட்டத்தில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்ட நிலையில் அஜித் அதில் பங்கேற்கவில்லை.
அதை குறிப்பிட்டு ஒரு பிரபல வாரஇதழ் அட்டைப்படத்தில் அஜித் படத்தை போட்டு “தமிழ் உணர்வு இல்லையா? தடுமாறும் தல ரசிகர்கள்” என விமர்சித்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.





அட்டைப்படத்தில் அஜித்தை அசிங்கப்படுத்திய வார இதழ் - ரசிகர்கள் கோபம்..

Wednesday 18 April 2018

அஜித்தின் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். அவரின் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே ஒரு ஆர்வம் இருக்கும்.
அப்படியான ஒரு படம் தான் முகவரி. 100 நாட்கள் ஓடிய இப்படம் அஜித்திற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் ஒரு பாடல் செம ஹிட். அதுதாங்க ஏ நிலவே ஏ நிலவே பாடல் தான்.
இதை பாடியவர் பிரபல பாடகர் உன்னிமேனன். இப்படத்தின் வெற்றி விழாவில் அஜித் அவரை கூப்பிட்டு மரியாதை செய்ததோடு பொது மேடையிலேயே வீட்டிற்கு ஒரு நாள் சாப்பிட வேண்டும் என அழைப்பு விடுத்து அசத்தினாராம்.
இத்தனைக்கும் இவர்களுக்கு நீண்ட நாள் பழக்கம் எல்லாம் கிடையாதாம். உடன் மேனனின் சகோதரர் மகன் அனீஷ் பத்மநாபன் குட்டி பையனாக நின்றிருந்தாராம். இதை இன்னும் என்னால் மறக்க முடியாது என்கிறார்.
அஜித் சார் அந்த விழாவில் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் போட்டிருந்தார். இன்னும் நினைவில் இருக்கிறது. எனக்கும் என் சித்தப்பா உன்னிமேனனுக்கும் கிடைத்த இப்படி ஒரு அனுபவம் மறக்க முடியாதது என கூறினார்.
அனீஷ் தற்போது வளர்ந்த ஹீரோவாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படத்தில் நடித்துள்ளார்.




அஜித்தின் இந்த ஒரு குணம் தான்! பொதுமேடையில் நடந்த பிரம்மிப்பான செயல் - வெளிவராத தகவல்...

உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹராஷ்ட்ரா, பீகார், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே சந்தையில் பணப்புழக்கம் குறைவாக இருந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களின் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களும் பணமின்றி எந்தநேரமும் காலியாக கிடக்கின்றன. இதை சமாளிக்க தினமும் 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக பணத்தேவை திடீரென அதிகரித்து உள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தற்காலிகமானது தான். இந்த பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.



நாளிதழ்களில் இன்று: இந்தியாவில் மீண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?..

Tuesday 17 April 2018

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர்.
மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டுவரும் நிலையில் ஆர்யா கடைசியில் ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் யாருக்கு அணிவிப்பார் என இறுதிவரை பரபரப்பாகவே இருந்தது.
பைனலுக்கு வந்திருந்தவர்கள் பலரும் ஆர்யா அகாதாவை திருமணம் செய்துகொள்வார் என கணித்தனர். ஆனால் ஆர்யா அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவை அறிவித்தார்.
"என்னோட வாழ்க்கையை முடிவு செய்றதா அறிவிக்கப்பட்ட இந்த ஷோவுல, இவ்ளோ எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆனதுல இருந்து என்னால டிசைட் பண்ண முடியலை. எனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுது. அதுபோக, இந்த ஷோவுக்கு வந்த எல்லாருமே என்னைப் பிடிச்சு வந்தாங்க. என்னோட மனம் விட்டுப் பேசினாங்க. நானும் அவங்ககிட்ட உண்மையாகவே நடந்துக்கிட்டேன். ஸோ, அவங்க யாரையுமே நான் ஹர்ட் பண்ண விரும்பலை. அதனால, என்னோட மேரேஜ் பத்திக் கொஞ்சம் யோசிச்சு, கூடிய சீக்கிரமே சொல்லிடுறேன்!" என ஆர்யா கூறியுள்ளார்.




ஆர்யாவின் அதிர்ச்சி முடிவு - எங்க வீட்டு மாப்பிள்ளை பைனலில் ட்விஸ்ட்...

அஜித் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம், இவரை இயக்க ஆயிரக்கணக்கான இயக்குனர்கள் வெயிட்டிங்.
அப்படியிருக்க ஏகலைவன் என்பவர் அஜித்தை இயக்கியே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கின்றார். ஆனால் அஜித் அவரை சீண்டுவது கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் ஏகலைவன் தேர்ந்தெடுத்த சிஸ்டம் தான்.
அஜித்திற்கு சமூக வலைத்தளம் என்றாலே அலர்ஜி. அப்படியிருக்க ஏகலைவன் இப்படி யுடியூபில் தன் கருத்தை தெரிவிப்பது அஜித்திற்கு செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தன்னை அஜித்தாகவே நினைத்து கொண்டு அவருடைய ரசிகர்கள் திருமணத்திற்கு செல்வது போன்ற வேலைகள் அஜித்திற்கு மேலும் கோபத்தை கிளப்பியுள்ளது.


ஏகலைவனுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்காமல் இருக்க இது தான் காரணமாம்..

Monday 16 April 2018

Hi, This is Ashiq, Let's see what virat kholi speaks in that video.

Virat says:- "what happening in Banglore is really really disturbing. To see something like that happening to the girls and for people to watch and not do anything about it's a coward act. Those people have no right to call themselves men.
" I would like to ask a question, God forbid if something like that happened to someone in your family, would you stand and watch or would you help? These things are allowed to happen because people stand there and watch it and they are absolutely fine with it. That's why these things happen to a girl".
"Just because she is wearing short clothes. It's her life and its her decision, her choice and for men to accept that it is an opportunity to get away doing this and men in power defending it is absolutely horrible.
"The fact that there things are in certain people's heads and is acceptable to a certain degree, it's disturbing and it's shocking and I am ashamed to be a part of that society".
I think we need to change our thinking, treat men and women in the same way, be respectful, and treat women with compassion and put yourself in that situation and think what if we were the family members of those girls. How would we feel about it.? He said in conclusions.




Virat Kholi says , He is aashamed to be a part of society that is unsafe for women.

Sunday 15 April 2018

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னம் அஜித். பைக் ரேஸ், கார், போட்டோ கிராபி என்ற இப்படி நிறைய விஷயங்களில் தன்னுடைய திறமையை காட்டி மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார், குறிப்பாக ரசிகர்களுக்கு என்று சொல்லலாம்.
இவரது நடிப்பில் கடைசியாக விவேகம் படம் வெளியானது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் வசூலில் கொஞ்சம் டல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் கணேஷ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் அஜித்தை பற்றி பேசிய அவர், விவேகம் படத்தில் அஜித்தை தாண்டி வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் ஓடியிருக்காது. அவருக்காக மட்டுமே விவேகம் படம் ஓடியது என்று புகழ்ந்துள்ளார்.




அஜித்தை தாண்டி விவேகம் படத்தில் வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் ஓடியிருக்காது- புகழும் பிரபல நடிகர்..

Saturday 14 April 2018

#மதங்களை_கடந்த_மனிதநேயம்

காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரை சார்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜித் ராம் என்பவர் தனது மகளுக்கு 'ஆசிஃபா'என பெயர் சூட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தை தொடர்ந்து இந்த செய்தி தற்போது நாடெங்கும் பரவி வருகிறது.

இந்த செய்தியினை தனது சேனலில் வெளியிட்ட புதிய தலைமுறை நிறுவனத்திற்கு நன்றி.

#Justice_For_Ashifa




கேரள மாநிலம் கண்ணூரை சார்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜித் ராம் என்பவர் தனது மகளுக்கு 'ஆசிஃபா'என பெயர் சூட்டியுள்ளார்...

#திருமதி_கல்கி...



எப்படி வலித்திருக்குமோ உனக்கு
என்னவெல்லாம்
செய்திருப்பார்களோ உன்னை
பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்

கொடூரர்களின் தொடுதலை
நீ உணர்ந்திருக்கமாட்டாய்
அவர்களை நீ அண்ணனென்றோ
அங்கிளென்றோ மட்டும் தான்
அழைத்திருக்க முடியும்

தின்பண்டங்களோ சாக்லெட்டோ
வாங்கித் தருவதாகக் கூறித் தான்
அழைத்துப் போயிருப்பார்கள்

உன் உடைகளை கழற்றும் போது கூட
உன்னால் யூகித்திருக்க முடியாது
குளித்து விட்டுப் போகலாமெனக் கூறியிருப்பார்கள் நீயும்
நம்பித் தொலைத்திருப்பாய்

உன் உறுப்புகளை தொடும் போது கூட
உன்னால் தடுத்திருக்க முடியாது
அதை தொடுதல் தவறென்றும்
நீ அறிந்திருக்க மாட்டாய்

ஆண் உறுப்பு அப்படி இருக்குமென்று
நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை மகளே
அதற்கு தாயும் தெரியாது
தங்கையும் தெரியாது
தன்னால் ஆனவரை
பெண் உறுப்புகளை சிதைத்துக் கொண்டிருப்பது தான் அதன் வேலை

குழந்தையோ மகளோ
என்றெல்லாம் நினைத்ததில்லை
முடிந்தவரை தன் இச்சைகளை
நம் மீது எச்சிலாய் உமிழ்ந்து
விட்டுத்தான் போவார்கள்
சில சமயம் திரும்பியும் வருவார்கள்

உன் கைகள் கட்டப்பட்டும்
கழுத்து நெறிக்கப்பட்டும்
கொடூர நகங்களால் கீறியும்
உன்னை நாசப்படுத்தியிருக்கலாம்
வலிக்கும் போது துடித்திருப்பாய்
காப்பாற்றி விடமாட்டார்களா
என்று கதறியிருப்பாய்

கடவுளின் காலடியில் கிடந்திருப்பாய்
காப்பாற்று என்றுகூட அழைத்திருப்பாய்
அவரும் உடந்தையென்று
உணர்ந்திருக்க மாட்டாய்

கால்களை முறித்திருப்பார்கள்
உறுப்புகளை சிதைத்திருப்பார்கள்
மூச்சு விடமுடியாமல் முணங்கி
மயங்கிக் கிடந்திருப்பாய்

அப்பாவை அழைத்திருப்பாய்
அம்மாவை நினைத்திருப்பாய்
தன்னிடத்திடத்திலும்
ஓட்டை இருந்திருப்பதைக் கூட
அன்று தான் உணர்ந்திருப்பாய்

நகர முடியாமல் செயலற்றுக் கிடந்திருப்பாய்
இரத்தம் வழிந்து கொண்டேயிருந்திருக்கும்
எப்படியும் எழுந்ததும் வீட்டிற்கு
ஓடிவிடலாமென நினைத்திருப்பாய்

அடுத்தடுத்த மிருகங்களும் உன்னை இரையாக்குமென்று நினைத்திருக்கமாட்டாய்
இதற்கு மேல் என்னால் முடியாதென்று
கெஞ்சியும் துடித்திருப்பாய்

ஆண் வர்கங்களையே
அறவே வெறுத்திருப்பாய்
அவர்கள் குறி கொண்ட மிருகங்களென்று
முற்றிலும் உணர்ந்திருப்பாய்
அப்போது கூட அப்பாவையும்
அண்ணனையும் அழைத்திருப்பாய்

எல்லாம் முடிந்திருக்கும்
எல்லாமும் சிதைந்திருக்கும்
கடவுள் காணொளி
செய்திருப்பார் கயவர்களை
காப்பாற்றிக் கொண்டிருப்பார்
இறுதியாகக் கூட
நம்பித் தொலைத்திருப்பாய்
அப்பா வந்ததும் அழைத்துப்போவாரென்று

மரணம் சம்பவித்தாயிற்று
குப்பையாய் நினைத்து
தூக்கியெறிந்து விட்டுப் போயிருப்பார்கள்
அடுத்தது யாரென்று அவர்கள்
தேடிக் கொண்டிருப்பார்கள் 

போய் தொலைவோம் மகளே
நம்மை சதையாகவும் யோனியாகவுமே
பார்த்துத் தொலையும் ஆண்களுக்கு முன்னால் சதைப் பிண்டமாய்
வாழ்வதை விட மரணம் கொடிதல்ல

எங்களுக்கும் சேர்த்து
இடம் பிடித்து வை ஆசிபா
விரைவிலேயே நாங்களும்
வந்து சேர்வோம்
காப்பாற்ற துப்பில்லாத
ஆண்களோடு பெண்களாய்
வாழ்ந்து கொண்டிருப்பதை விட
சாவதே மேல் சாகடிக்கப்படுவதே மேல்..


முழுமையாக படிக்க முடியல கண்ணீர் நிறம்பிய கண்களை துடைக்க கூட தெம்பில்லாமல் போனது கைகளுக்கு.......

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் கதுவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
கண்டனம் தெரிவித்த மோடி
இதுதொடர்பாக நேற்று டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் கதுவா மற்றும் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் சம்பவங்கள் தேசத்திற்கு அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற பாஜக அமைச்சர்கள் இருவரை முதல்வர் மெஹபூபா பதவி நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார். எனவே இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி பேசுகையில், "சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொறுப்பற்ற சிலரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது. விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிடிபி மற்றும் பாஜக கூட்டணியில், அமைச்சர் பதவியில் இருந்த இரண்டு பாஜக அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் இருவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, பதவி விலகல் கடிதத்தை நேற்று முதல்வரிடம் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுதொடர்பாக, அம்மாநில பாஜக தலைவர் சத் ஷர்மா பேசுகையில், இரண்டு அமைச்சர்களும் இந்து பேரணியில் கலந்துகொண்டது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும், ஆனால் அவர்கள் அப்படி கலந்துகொண்டிருக்கக்கூடாது என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் மெஹபூபா முஃப்தி ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.


பாஜகவை உலுக்கிய சிறுமி பலாத்கார சம்பவம்.. காஷ்மீரில் 2 அமைச்சர்கள் ராஜினாமா!.

Friday 13 April 2018


வருடா வருடம் நடக்கும் இவ்விருது விழாவில் சிலர் சந்தோஷப்பட்டாலும் கடுமையாக உழைத்தும் நமக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என வருத்தப்படும் பிரபலங்கள் உள்ளனர்.
  • Best Kannada Film: Hebbet Ramakka
  • Best Hindi Film: Newton
  • Best Bengali Film:
  • Best Marathi Film: Kachcha Limbu
  • Best Malayalam Film: Thondimuthalum Driksakshiyum
  • Best Telugu Film: Ghazi
  • Best Tamil Film: To Let
  • Best Action Direction: Baahubali
  • Best Choreography: Toilet - Ek Premkatha
  • Best Special Effects: Baahubali 2
  • Best Music Director: Kaatru Veliyidai (A.R.Rahman)
  • Best Background Score: Mom (A.R.Rahman)
  • Best Actress- Mom (Sridevi)
  • Best Supporting Actor- Fahadh Faazil (Thondimuthalum Driksakshiyum)
  • Best Female Playback Singer- Vaanvaruvaan, Kaatru Veliyidai(Saasha Tripathi)
  • Best Male Playback Singer- KJ Yesudas


தேசிய விருதுகள் என்பது இந்திய சினிமாவே எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம்.






சென்னை:

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா இம்மாத கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உள்பட்ட ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

8 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது. மாநில போலீசார் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் கைதான வரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில்:-

சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய அவள் உங்களது மகளாக இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்க தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இந்த கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம், உன்னை மறக்கவும் மாட்டோம்

என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். #JusticeForAshifa #TamilNews

என்னை மன்னித்துவிடு ஆசிபா - சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கமல் குரல்..

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com