HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 23 April 2020

குரான் மற்றும் சந்திரனை கொண்டு, நம் தஜ்ஜாலின் நேரத்தில் இருந்து வெளியே வருவது எப்படி?

        allah, allah names, ya allah          

PLEASE WATCH VIDEO BELOW


அஸ்ஸலாமு அலைக்கும் ‌.
 சூப்பர் முஸ்லீம் இன்றைய பயானின் ஆதாரங்கள், அடிப்படையும்::

குரான் , சந்திரன் - தஜ்ஜால் நேரம்:

திர்மிதி- 2332, 5448:
 عَبَّاسُ

 لاَ تَقُومُ السَّاعَةُ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ بِالنَّارِ بِالنَّارِ "

 أَبُو عِيسَى غَرِيبٌ مِنْ الْوَجْهِ

 அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறியதாக அனஸ் பின் மாலிக் விவரித்தார்:

 "நேரம் சுருங்கிவிடும் வரை இறுதி நாள் வராது, ஆண்டு ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் வாரம் போல், வாரம் நாள் போல், நாள் மணிநேரம் போன்று, மணிநேரம் தீப்பொறி பறப்பது போல் ஆகிவிடும். "
 சாஹிஹ் (தாருஸ்ஸலாம்).

நேரத்தில் இருந்த பர்கத் போய்விடும் என்பது தான் இதற்கு அர்த்தம்.

இதிலிருந்து வெளிவர சந்திரனின் நேரத்தை குரானுடன் பொருத்தி பயன்படுத்துவது.

குரானை எதற்கு பயன்படுத்தலாம்:
1). நேர்வழியடைய- இதாயத்திற்காக
2).மன அமைதிக்காக
3).நோய் நிவாரணத்திற்காக பயன்படுத்தலாம்.

மன அமைதிக்காக
புகாரி 3614, 5018:

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் - ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) 'அல் கஹ்ஃப்' (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3614.
அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.
காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்குக் கிடைத்துள்ளதாக அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னுல் ஹாதி(ரஹ்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5018.
அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்

Ar-Ra'd 13:28

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَطۡمَئِنُّ قُلُوۡبُهُمۡ بِذِكۡرِ اللّٰهِ ؕ  اَلَا بِذِكۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ؕ

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

நோய் நிவாரணிக்காக:

புகாரி 2276,  5736:

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!' என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்!  அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!' என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..' என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!' என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!' என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2276.
அத்தியாயம் : 37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

Al-Isra' 17:82

وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحۡمَةٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَلَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

Fussilat 41:44

وَلَوۡ جَعَلۡنٰهُ قُرۡاٰنًا اَعۡجَمِیًّا لَّقَالُوۡا لَوۡلَا فُصِّلَتۡ اٰیٰتُهٗ ؕ  ءَؔاَعۡجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ  قُلۡ هُوَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا هُدًی وَّشِفَآءٌ ؕ  وَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ فِیۡۤ اٰذَانِهِمۡ وَقۡرٌ وَّهُوَ عَلَیۡهِمۡ عَمًی ؕ  اُولٰٓئِكَ یُنَادَوۡنَ مِنۡ مَّكَانٍۭ بَعِیۡدٍ ٪

நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?" என்று அவர்கள் கூறியிருப்பார்கள். "இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்" என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

இகாமத்தே தீனை புரிந்து, தீனுக்காக நாம் செயல்படும் போது இந்த சடங்குகள் நமக்கு வேலை செய்யும். அப்போது தான் பயன்படும்.

Al-Waqi'ah 56:77

اِنَّهٗ لَقُرۡاٰنٌ كَرِیۡمٌ ۙ

நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

"Quran"  literally meaning "the recitation".

குரான் என்ன வார்த்தைக்கு படிப்பது, திருப்ப திருப்ப படிப்பது.. கல்வியறிவு முக்கியம் என்பதால் இறுதி வேதத்திற்கு குரான் என்று பெயர் வைத்தார் அல்லாஹ்.

Al-Waqi'ah 56:79

لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ ؕ

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

உளத்தூய்மை இல்லாதவர்கள் இந்த குரானின் பயன் அடைய முடியாது.

எப்படி ஓத வேண்டும்::

Al-Baqarah 2:121

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰهُمُ الۡكِتٰبَ یَتۡلُوۡنَهٗ حَقَّ تِلَاوَتِهٖ ؕ  اُولٰٓئِكَ یُؤۡمِنُوۡنَ بِهٖ ؕ  وَمَنۡ یَّكۡفُرۡ بِهٖ فَاُولٰٓئِكَ هُمُ الۡخٰسِرُوۡنَ ٪

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!

Muhammad 47:24

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

ஓதுவதும் சிந்திப்பதும் தான் குரானை படிக்கும் முறை. அரபியில் மற்றும் தாய்மொழியில் படிப்பது தான் குரான் ஓத வேண்டிய முறை.

Al-Muzzammil 73:4

اَوۡ زِدۡ عَلَیۡهِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ

அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

Al-Qiyamah 75:16-21
(16) لَا تُحَرِّكۡ بِهٖ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهٖ ؕ
(17) اِنَّ عَلَیۡنَا جَمۡعَهٗ وَقُرۡاٰنَهٗ ۚۖ
(18) فَاِذَا قَرَاۡنٰهُ فَاتَّبِعۡ قُرۡاٰنَهٗ ۚ
(19) ثُمَّ اِنَّ عَلَیۡنَا بَیَانَهٗ ؕ
(20) كَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَةَ ۙ
(21) وَتَذَرُوۡنَ الۡاٰخِرَةَ ؕ

(16) (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
(17) நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
(18) எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
(19) பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
(20) எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
(21) ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு கற்று கொடுத்தான். ஜிப்ரில்(அலை) நபிகளாருக்கு(ஸல்) கற்று கொடுத்தார். நபிகளார்(ஸல்) நான்கு சஹப்பாக்களிடம் கற்று கொள்ள கூறினார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்' என்று கூறினார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3220.
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். 26
ஸஹீஹ் புகாரி : 4998.
அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள் மற்றும் முஸனத் அஹ்மத் 2048

மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்துக கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3808.
அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அமர்(ரலி) தம் மருமகளை அணும் அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.
அப்போது அவள், 'அவர் நல்ல மனிதர் தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, 'என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், 'நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?' என்று கேட்டார்கள். நான், 'தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்' என்று சொன்னேன். ('குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்' என்று கேட்டார்கள். நான், 'ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)' என்று சொன்னேன். அவர்கள், 'மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்' என்று கூறினார்கள். 'நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்திபெற்றுள்ளேன்' என்று கூறினேன். 'இரண்டு நாள்கள் நோன்பைவிட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!' என்று கூறினார்கள். நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், '(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்' என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:)
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) (தம் முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக் காட்டுவார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக் காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுபலமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்க) சக்தி பெறவேண்டும் என விரும்பும்போது, பல நாள்கள் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு அந்நாள்களைக் கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிறகு (வசதிப்படும்போது) அதே அளவு நாள்கள் நோன்பு நோற்பார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (-நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்து வந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகி நான்) கூறுகிறேன்:
(அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம், 'மாதம் ஒரு முறை குர்ஆனை ஓதி நிறைவுசெய்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அதைவிட அதிகமாக ஓதுவதற்குத் தம்மால் முடீயும் என அன்னார் தெரிவிக்க, நபியவர்கள் நாள்களைக் குறைத்துக் கொண்டே வந்து) மூன்று நாள்களுக்கு ஒருமுறை (குர்ஆனை ஓதி நிறைவு செய் என்று நபியவர்கள் கூறினார்கள்) என அறிவிப்பாளர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். 'ஏழு நாள்களுக்கு ஒரு முறை' என்றே பெரும்பாலோர் கூறியுள்ளனர்.
ஸஹீஹ் புகாரி : 5052.
அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்

இதில் முப்பது நாட்களில் குரான் ஓதுவது ரமலான் மாதத்தில் மட்டுமில்லாமல் ஒவ்வொரு முப்பது நாட்களில் தொடர்ந்து ஓதி முடிக்க வேண்டும். 12 மாதங்களில் 12 முறை..

அதில் சூரிய மாத கணக்கில் இல்லை. சந்திர மாத கணக்கில் அதாவது இஸ்லாமிய காலண்டர் படி ரமலான் முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு குரான் ஓதி முடிக்க வேண்டும். அப்படி ஓதினால் நாம் இந்த நேர சுருக்கம் மற்றும் தஜ்ஜாலின் பிடியிலிருந்து வெளிவரலாம்.
30 நாட்கள் குர்ஆன் ஓதும் அட்டவணை:
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Day 1:: Surah Al-Baqarah
Day 2:: Surah Aali Imran
Day 3:: Surah An-Nisa’
Day 4:: Surah Al-Ma’idah
Day 5:: Surah Al-An’am
Day 6:: Surah Al-A’raf
Day 7:: Surah Al-Anfal, At-Taubah
Day 8:: Surah Yunus, Hud
Day 9:: Surah Yusuf, Ar-Ra’d
Day 10:: Surah Ibrahim, Al-Hijr
Day 11:: Surah An-Nahl
Day 12:: Surah Al-Isra’, Al-Kahf
Day 13:: Surah Maryam, Ta-Ha
Day 14:: Surah Al-Anbiya’,Al-Haj
Day 15:: Surah Al-Mu’minun,An-Nur
Day 16:: Surah Al-Furqan, Ash-Shu’ara’,
Day 17:: Surah An-Nahmal, Al-Qasas,  Al-Ankabut
Day 18:: Surah Ar-Rum, Luqman, As-Sajdah, Al-Ahzab
Day 19:: Surah Saba’, Al-Fatir,  Ya-Sin, As-Saffah
Day 20:: Surah Saad, Az-Zumar, Ghafar Day 21:: Surah Fusilat, Ash-Shura, Az-Zukhruf, Ad-Dukhan (the Smoke)
Day 22:: Surah Al-Jathiyah,  Al-Ahqaf, Muhammad, Al-Fat’h, Al-Hujurat
Day 23:: Surah Qaf, Adz-Dzariyah, At-Tur, An-Najm, Al-Qamar
Day 24:: Surah Ar-Rahman, Al-Waqi’ah, Al-Hadid, Al-Mujadilah
Day 25:: Surah Al-Hashr, Al-Mumtahanah, As-Saf,  Al-Jum’ah,  Al-Munafiqun, At-Taghabun At-Talaq, At-Tahrim, Al-Mulk, Al-Qalam
Day 26:: Surah Al-Haqqah, Al-Ma’arij, Nuh , Al-Jinn, Al-Muzammil , Al-Mudassir
Day 27:: Surah Qiyamah,Insaan, Al-Mursalat, An-Naba’, An-Naziya
Day 28:: Surah ‘Abasa, At-Takwir, Al-Infitar , Al-Mutaffifin, Al-Inshiqaq, Al-Buruj, At-Tariq, Al-A’la, Al-Ghashiyah
Day 29:: Surah Fajr,Al-Balad, Ash-Shams, Al-Layl, Adh-Dhuha, Al-Inshirah, At-Tin, Al-‘Alaq, Al-Qadar
Day 30:: Surah Al-Bayinah, Az-Zalzalah, Al-‘Adiyah,  Al-Qari’ah,At-Takathur, Al-‘Asr,  Al-Humazah, Al-Fil, Quraish, Al-Ma’un, Al-Kauthar, Al-Kafirun, An-Nasr, Al-Masad , Al-Ikhlas, Al-Falaq, An-Nas.

 1920 இல் காலண்டர் முறையை மாற்றினார்கள். 1970 இல் பொருளாதாரத்தை மாற்றினார்கள். பெட்ரோல் தங்கத்திற்கு பதிலாக டாலருக்கு மாற்றப்பட்டது.
சந்திர பிறை மாதங்களை தான் நாம் பின்பற்ற வேண்டும்.
இஸ்லாமிய மாதங்கள்::
1 . Muḥarram (forbidden)
2 .Ṣafar (void)
3 . Rabīʿ al-Awwal(the first spring)
4 . Rabīʿ al-Thānī or Rabī’ al-Ākhir(the second spring)
5 . Jumādá al-Ūlá (the first of dry land)
6 . Jumādá al-Ākhirah(the last of dry land)
7.  Rajab(honour)
8 . Sha‘bān (scattered)
9 . Ramaḍān( burning heat)
10 . Shawwāl (raised)
11.  Dhū al-Qa‘dah(the one of sitting)
12 . Dhū al-Ḥijjah (the one of pilgrimage  Hajj)

எனவே இந்த தஜ்ஜால் யஃஜூஜ் மஃஜூஜ் நீரில் இருந்து வெளிவர பிறை காலண்டரை குரானுடன் பொருத்தி வாழ வேண்டும். அப்போது தான் இனி வரும் ஃபாஷாத்களிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.
 இதில் குகை வாசிகளின் சம்பவம் நமக்கு இன்று எடுத்துக்காட்டாக உள்ளது..

  Al-Kahf 18:25

وَلَبِثُوۡا فِیۡ كَهۡفِهِمۡ ثَلٰثَ مِائَةٍ سِنِیۡنَ وَازۡدَادُوۡا تِسۡعًا

அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.

இதில்  300 வருடங்கள் என்றும் 309 வருடங்கள் என்று கூறுவது சூரியனின் காலண்டர் மற்றும் சந்திர காலண்டர் குறிக்கும். இதை போல் நாமும் குரானையும் இந்த சந்திர பிறையையும் கொண்டு குகை வாசிகள் போல் தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து தப்பிவிடலாம். அல்லாஹ் பாதுகாப்பான்.

எல்லா சூர்யாவிற்கு முன் அல்ஹம்மது சூரா ஓத வேண்டும். குரானில் எல்லா சூராக்களுக்கும் ஜோடி சூரா உள்ளது. 
15வது நாள் அன்னூர் சூரா அன்று பௌர்ணமி முழு நூர் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும். இப்படி தொடர்ந்து படித்தால் நமது உடலில் உள்ள இதய நேரம் சமமாகி தஜ்ஜாலின் கால சுருக்கம், அவனது கட்டுப்பாட்டிலிருந்து வெளிவரலாம்.

குரான் பார்த்து தொழுகை செய்யலாம்..

பாடம் : 54 அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார். தவறான உறவில் பிறந்தவன், கிராமவாசி, பருவடையாத சிறுவன் ஆகியோரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) அல்லாஹ்வுடைய வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று (பொதுப்படையாகவே) கூறியுள்ளார்கள்.
முன் பாடம் :54(முழு ஹதீஸ் புகாரில்)
ஸஹீஹ் புகாரி : 692.
அத்தியாயம் : 10. பாங்கு

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com