HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 1 November 2019

சுஜித்தின் மரணம் குறித்து வேதனையுடன் பேசிய அஜித் –என்ன சொன்னார் தெரியுமா?...



மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி என்ற ஊரில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு இந்தியாவையே கண்ணீரில் மூழ்கடித்தது.

திரையுலக பிரபலங்கள் பலரும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதுவரை இது பற்றி அஜித்தோ, விஜயோ எதையும் பேசாமல் இருந்து வந்த நிலையில் தல தன்னுடைய நண்பர்களுடன் இது பற்றி பேசியுள்ளார்.


2 வயது சிறுவன் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்து இறந்தது வேதனைக்குள்ளான ஒன்று, சுஜித்தின் மரணத்தால் தூக்கம் கூட வரவில்லை.

முதல் நாளே சிறுவனை உயிருடன் மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வீட்டில் எல்லாருமே பிராத்தனை செய்து கொண்டிருந்தோம், ஆனால் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை.

நம்மிடம் எவ்வளவோ தொழில்நுட்பம் இருந்தும் இது போன்ற விசயங்களுக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விசியம் தான், அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகில் இனியும் ஆழ்துளை கிணறுகளால் எந்த குழந்தையின் உயிரும் பறிபோக கூடாது என பேசியுள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com