HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 17 March 2018

சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு சிறை.

சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு சிறை.

ஒக்லஹோமாவில், தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

45 வயதான பட்ரீஷியா அன் ஸ்பான் என்பவர் தன் 26 வயது மகளான மிஸ்டி டான் ஸ்பானை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமையை இழந்த பட்ரீஷியா, கடந்த 2014ம் ஆண்டு தன் மகளுடன் இணைந்தார்.

அமெரிக்காவில், ஓரின சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமானது என்று அறிவிக்கப்பட்ட பின் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக தன் மகனையும் பட்ரீஷியா திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2008ம் ஆண்டு மகனுக்கு 18 வயது ஆனபோது இத்திருமணம் நடந்து, பின்பு 2010ம் ஆண்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

பட்ரீஷியாவிற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையோடு, 8 ஆண்டுகள் நன்னடத்தை காலமும் அவர் அனுபவிக்க வேண்டும். மேலும், தண்டனையில் இருந்து வெளிவரும் போது, தாம் ஒரு பாலியல் குற்றவாளி என்பதையும் அவர் பதிவு செய்ய வேண்டும்.

அமெரிக்க விதிகளின்படி, நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொள்வது முறையற்றதாகும்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com