HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 10 October 2019

அல்லாஹ் நம்மை இந்த உலக அழிவின் காலத்தில் படைத்து உள்ளான்.. நாம் இந்த உலகின் கடைசி சந்ததிகளாக கூட இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.. எப்போது இந்த யூதர்கள் முஸ்லீம்களை யமாற்றி தனி நாடு ஒன்றை (இஸ்ரேல் )நிறுவினார்களோ அன்றே கியாம நாளின் வாக்குறுதி நிறைவேறி விட்டது! மேலும் படிக்க இந்த பதிவை கிளிக் செய்யவும்...

No photo description available.




அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹு..
சகோதர்களே, உங்களிடம் நான் சில வற்றை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அது உங்களுக்கு தெரிந்ததே..
ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் 70 ஆண்டுகள் வரை சூழ்ச்சி செய்கிறார்கள்.
முதல் தடவை மூஸா நபி அவர்கள் இறந்தவுடன் ஆட்சிகாக சண்டையிட்டு கொண்டார்கள்.
அல்லாஹ் தண்டனை கொடுத்தான் முதல் தடவை அந்த இடத்தில் இருந்து யூதர்கள்(சிறை ) அப்புறப்படுத்த பட்டார்கள் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இடிக்க பட்டது ..
பின்பு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள்.
துல்கர்னைண் மூலமாக அல்லாஹ் யூதர்களை காப்பாற்றி அதே(இஸ்ரேல் ) இடத்தில் கொண்டு வந்து சேர்த்தான் இரண்டாவது முறை பள்ளிவாசல் கட்டப் பட்டது ..
மீண்டும் ஈஷா நபியை சூழ்ச்சி செய்து சிலுவையில் அறையை முயற்சி செய்தார்கள்..
ஆனால் அல்லாஹ் ஈஷா நபியை தன் அளவில் உயர்த்தி கொண்டான்..
இன்னும் அவர்கள் (யூதர்கள் )ஈஷா நபியை கொன்றுவிட்டோம் என கூறியதாலும், சூழ்ச்சி செய்ததாலும் அல்லாஹ் அவர்களுக்கு இந்த (இஸ்ரேல் )நாட்டை தடை (ஹராம் )செய்தான் இரண்டாவது பள்ளி வாசல் இடிக்க பட்டது ..
இனி அவர்கள் இந்த இடத்திற்கு வரவேமுடியாது என்று அல்லாஹ் கூறினான்.
என் வாக்கு நிறைவேறி விட்டால் மீண்டும் அவர்கள் ஒன்று சேர்க்க படுவார்கள்..
இப்போது உலகத்தில் எல்ல மூலைகளிலும் இருந்த யூதர்களை கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ் ஒன்று சேர்க்கிறார்கள்
மூன்றாம் முறை மூஸா நபி கட்டிய பள்ளியை அவர்கள் கட்டினால் கியாமத் நாளை எதிர் பார்க்கலாம்..
இந்த முறை இவர்கள் சூழ்ச்சி 70ஆண்டுகள் தாண்டி நடக்கிறது..
நபி ஸல்லாஹு அலைவஸல்லம் அவர்களின் துஆ பரகத்தினால்
நமக்கு அரைநாள் அதிகம் என்பதை உணர்த்துகிறது....
போன வருடம் 2018 ல் இந்த மூன்றாவது பள்ளியை கட்டுவதற்கு பூமி பூஜை செய்து விட்டார்கள். 2000ஆண்டுகள் முன்பு அழிந்து போன ஒரு சிகப்பு இன மாடு ஒன்றை அவர்கள் செயற்கை முறையில் சோதனைகள் செய்து சென்ற வருடமே 2018ல் பிறந்து விட்டது..
இந்த பள்ளியை கட்டி முடித்ததும் யூதர்களுக்கு தலைமை தங்குவது வேறு யாரும் இல்லை தஜ்ஜால் தான் வர போகிறான்...
அந்த பள்ளியை அவர்கள் கட்ட காரணமும் அதற்குத்தான்..
எனவே இந்த செய்திகளை ஆய்வு செய்யுங்கள்..
கேலி செய்யாதீர்கள். ஒரு சில பேர் தர்க்கம் செய்கிறார்கள்..
நீங்கள் ஆய்வு செய்யுங்கள் அல்லது மற்றவர்கள் ஆய்வு செய்து சொல்வதை உண்மையா என்பதையாவது ஆய்வு செய்யுங்கள்...
குரான், ஹதீஸ் களை வாங்கி படியுங்கள்..
நமக்கு 1500வருடம் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது..
இப்போது ஹிஜ்ரி 1441 -1500
அல்லாஹ் உங்களுக்கு விளங்க கூடிய பாக்கியத்தை தருவானாக ஆமின்.
Temple) என்பது எருசலேம் நகரில் "கோவில் மலை" (Temple Mount) என்னும் இடத்தில் கி.மு. 516இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும்.[1]

இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் முதல் கோவில் என்று யூதர்களால் அழைக்கப்பட்ட் சாலமோனின் கோவில் இருந்தது. அந்த முதல் கோவில் கி.மு. 586ஆம் ஆண்டில் இரண்டாம் நெபுகத்னேசார் என்னும் பாபிலோனிய மன்னரால் அழிக்கப்பட்டு, யூத மக்கள் இனம் நாடுகடத்தப்பட்டது.
முதல் கோவிலும் இரண்டாம் கோவிலும் யூதர்களின் சமய வாழ்வில் பெருமுக்கியத்துவம் வாய்ந்தன.
Jerusalem Modell BW 3
யூத சமயத்தின் இரண்டாம் கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி ஏரோது மன்னன் கட்டிய கோவிலின் மாதிரி உரு. காப்பிடம்: இசுரயேல் காட்சியகம்.
கோவில் கட்டப்பட்ட வரலாற்றுச் சுருக்கம்
கி.மு. 538ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் சைரசு (CYRUS the Great ) ( துல்கர்னைண்) என்பவர் பாபிலோனியரை முறியடித்தார். பாபிலோனியரின் ஆட்சியின் கீழ் நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் தம் நாடு திரும்பலாம் என்றும், அழிக்கப்பட்ட எருசலேம் கோவிலை மீண்டும் கட்டலாம் என்றும் சைரசு ஆணை பிறப்பித்தார்.[2]
70 ஆண்டுகள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் கீழ் இருந்து சொந்த நாடு திரும்பிய யூதர்கள், சாலமோனின் கோவில் என்ற முதல் கோவில் இருந்த அதே இடத்தில் புதியதொரு கோவில் கட்டத் தொடங்கினர் (காண்க: எஸ்ரா 1:1-4; 2 குறிப்பேடு 36:22-23; தானியேல் 9:1- 2).
யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட காலத்தில் எருசலேமில் தங்கியிருந்தவர்கள் புதிய கோவில் கட்டுவதற்குத் தடையிட்டதைத் தொடர்ந்து கோவில் வேலை சிறிது காலம் (16 Years) நிறுத்தப்பட்டது.
மீண்டும் கோவில் கட்டட வேலை கி.மு. சுமார் 521இல், பாரசீக மன்னன் இரண்டாம் டாரியுஸ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தது. அம்மன்னனின் 16ஆம் ஆட்சியாண்டில் கோவில் வேலை நிறைவுற்றது (கி.மு. 518/517). அடுத்த ஆண்டு கோவில் அர்ப்பணம் நிகழ்ந்தது.
கி.மு. 19ஆம் ஆண்டளவில் பெரிய ஏரோது மன்னன் எருசலேம் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தினார். எனவே அக்கோவிலுக்கு "ஏரோதின் கோவில்" (Herod's Temple) என்னும் பெயர் ஏற்பட்டது.

உரோமையர்களின் ஆட்சிக்காலத்தில் டைட்டஸ் என்னும் தளபதி யூத கலகத்தை அடக்க நீரோவால் அனுப்பப்பட்டார். டைட்டஸ் எருசலேமை முற்றுகையிட்டு, அந்நகரையும் அங்கிருந்த கோவிலையும் கி.பி. 70இல் தரைமட்டமாக்கினார். இன்று கோவிலின் மேற்குச் சுவரின் அடிப்பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.[3]


இன்னும் இதை பற்றி அறிய கீழ உள்ள லிங்க் கிளிக் செய்யவும்;- 

WATCH VIDEO PART-1 தஜ்ஜால் மற்றும் இலுமினாட்டிகள் யார்? இவர்கள் மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றி குர் ஆன் ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. https://e-funandjoyindia.blogspot.com/2019/02/blog-post_19.html?spref=tw 1


தஜ்ஜால் மற்றும் இலுமினாட்டிகள் யார்? பாகம் -2 வீடியோ https://e-funandjoyindia.blogspot.com/2019/02/2_20.html?spref=tw

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com