HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 13 March 2019

ராகுல் காந்தி மட்டும் இதை செய்தால்.. பொள்ளாச்சி வழக்கு தேசிய வைரலாகும்.. செய்வாரா?

சென்னை: தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு இந்திய அளவில் பெரிதாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். தற்போது அவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.
இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இவர் வருகை தேர்தல் விட இன்னொரு முக்கிய விஷயத்திற்காக முக்கியத்துவம் பெறுகிறது.
பொள்ளாச்சி விவகாரம் 
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. இதில் சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக நேற்றுதான் பெரிய போராட்டம் நடத்தியது. கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு மக்கள் பொள்ளாச்சியில் பெரிய ஆதரவு அளித்தனர்.

ஆனாலும் கூட இன்னும் இந்த பிரச்சனை குறித்து தேசிய ஊடகங்கள் குரல் எழுப்பவில்லை. தமிழகம் தாண்டி இந்த பிரச்சனை வெளியில் எங்குமே கேட்கவில்லை என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக வடஇந்திய ஊடகங்கள் இதுகுறித்து இதுவரை பெரிய எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை.

இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி இந்த பிரச்சனை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வருடங்களுக்கு பின் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார். கடைசியாக அவர் 2016ல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இதனால் அவர் இன்று பேச போகும் ஒவ்வொரு விஷயமும் முக்கியத்துவம் பெறும். அதனால் அவர் பொள்ளாச்சி வழக்கு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேள்வி மேல்

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com